K U M U D A M   N E W S

தமிழ்நாடு

காதலித்து ஏமாற்றினார்.. நடிகர் நாஞ்சில் விஜயன் மீது திருநங்கை நடிகை பரபரப்பு புகார்!

சின்னத்திரை நடிகர் நாஞ்சில் விஜயன் மீது, ஐந்து ஆண்டுகளாகக் காதலித்துவிட்டு ஏமாற்றிவிட்டதாகத் திருநங்கை துணை நடிகை ஒருவர், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

கணவனைப் பழிவாங்க நாடு முழுவதும் வெடிகுண்டு மிரட்டல்.. ஐ.டி. ஊழியர் பெண் சென்னையில் கைது!

கணவனைப் பழிவாங்க நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வழக்கில், குஜராத்தைச் சேர்ந்த ஐ.டி. ஊழியர் ரினே ஜோஸ்லிடா என்ற இளம்பெண், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

உச்சத்தை தொட்ட தங்கம்விலை.. நகை வாங்குவோர் அதிர்ச்சி.. சவரன் விலை ரூ.80,480-ஆக உயர்வு!

தங்கம் விலை இன்று காலையில், சற்று குறைந்த நிலையில், மதியம் மீண்டும் 1 கிராம் ரூ.10,000 தாண்டியது. இன்று காலை 1 கிராம் ரூ.35 குறைந்து, ரூ.9,970-க்கு விற்பனையானது. மதியம் மீண்டும் ரூ.90 அதிகரித்து, அதிகரித்து, ரூ10,060 ஆக விற்பனையாகிறது.

தமிழகத்துக்கு ரூ.15,516 கோடி முதலீடுகள் ஈர்ப்பு.. சிலரால் பொறுக்க முடியவில்லை - முதல்வர் ஸ்டாலின்

ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பிய முதலமைச்சர் ஸ்டாலின், "தமிழ்நாட்டிற்கு ரூ.15,516 கோடி முதலீடுகளை ஈர்த்துள்ளதாக தெரிவித்தார்.

5-ஆம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டல்.. தலைமை ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது!

ஆம்பூர் அருகே உள்ள ஒரு துவக்கப்பள்ளியில் 5-ஆம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தலைமை ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூரில் பயங்கரம்: ஆட்டோ ஓட்டுநர் கொலை; அரசு வழக்கறிஞர் மீது உறவினர்கள் குற்றச்சாட்டு!

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆட்டோ சவாரி எடுப்பதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, மற்றொரு ஆட்டோ ஓட்டுநரை ஆட்டோவை ஏற்றி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Heavy Rain: தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சாலைப் பணியில் விபரீதம்.. ரோடு ரோலர் மோதி மாற்றுத்திறனாளி உயிரிழப்பு!

கோயம்பேடு பகுதியில் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ரோடு ரோலர் மோதி மாற்றுத்திறனாளி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோயில் தேருக்கு தீ வைப்பு: காஞ்சிபுரம் அருகே பதற்றம்.. போலீசார் விசாரணை!

காஞ்சிபுரம் அருகே உள்ள முத்து கொளக்கியம்மன் கோயில் தேருக்கு மர்ம நபர்கள் தீவைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

'எண்ணிலடங்கா நினைவுகளுடன் தாயகம் திரும்புகிறேன்'- முதல்வர் ஸ்டாலின் பதிவு!

"அளவில்லா அன்பு பொழிந்த உள்ளங்களின் எண்ணிலடங்கா நினைவுகளுடன் தாயகம் திரும்புகிறேன்" என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முதல்முறையாக காவலர் தின கொண்டாட்டம்.. 46 காவல் நிலையங்களுக்கு முதலமைச்சர் விருதுகள் அறிவிப்பு

தமிழகத்தில் முதன்முறையாக செப்டம்பர் 6 இன்று காவலர் தினம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

தாம்பரம் காவல்துறையில் “தமிழக காவலர் தினம்” கொண்டாட்டம் கோலாகலம்!

தாம்பரம் மாநகர காவல்துறை சார்பில் "தமிழ்நாடு காவலர் தினம்" உணர்வுபூர்வமாகவும், பெருமையுடனும் கொண்டாடப்பட்டது.

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்குக் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எடப்பாடி பழனிசாமி பாஜகவின் ஏஜென்ட்.. திமுக எம்எல்ஏ எழிலரசன் விமர்சனம்!

அதிமுகவில் வெடித்துள்ள உட்கட்சிப் பூசல் தொடர்பாக, எடப்பாடி பழனிசாமியை பாஜகவின் ஏஜென்ட் என்று திமுக எம்எல்ஏ எழிலரசன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

பாமக நிர்வாகிமீது கொலை முயற்சி: டிஜிபி அலுவலகத்தில் எம்எல்ஏ அருள் புகார்!

பாமக நிர்வாகி ம. க. ஸ்டாலின் மீது நாட்டு வெடிகுண்டு வீசி கொல்ல முயன்ற சம்பவம் தொடர்பாக பாமக எம்எல்ஏ அருள் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

டிஜிபி அலுவலகம் முன்பு பரபரப்பு: புரட்சித் தமிழகம் கட்சித் தலைவர் மீது தாக்குதல்!

சென்னை டிஜிபி அலுவலகம் வாசலில் வைத்து, புரட்சித் தமிழகம் கட்சியின் தலைவர் மூர்த்தி மீது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கொடூரத் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பணமதிப்பிழப்பு நேரத்தில் மோசடி? சசிகலா பழைய நோட்டுகளில் சொத்து வாங்கியதாக அதிர்ச்சி தகவல்!

பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது சசிகலா பழைய நோட்டுகள் ரூ.450 கோடியைக் கொடுத்து, சர்க்கரை ஆலையை வாங்கியதாக சிபிஐ முதல் தகவல் அறிக்கையில் (FIR) தெரிவித்துள்ளது.

தங்கம் விலை வரலாறு காணாத உச்சம்: ஒரு சவரன் ரூ.80,000-ஐ தாண்டியது!

தங்கத்தின் விலை வரலாற்றில் முதல் முறையாக புதிய உச்சத்தைத் தொட்டு, ஒரு சவரன் ரூ.80,000-ஐ கடந்து விற்பனை செய்யப்படுகிறது. இந்த திடீர் விலை உயர்வு வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சாட்டை துரைமுருகன் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்!

தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் தலைவர் சுபாஷினி மற்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் குறித்து அவதூறாகப் பேசியதாக, யூடியூபர் 'சாட்டை' துரைமுருகன் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சமூக வலைதளத்தில் அவதூறு: நடவடிக்கை கோரி வடமாநிலத்தவர் ஆர்ப்பாட்டம்!

சமூக வலைதளத்தில் அவதூறாகப் பேசிய நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, வடமாநிலத்தவர்கள் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

ஐஏஎஸ் அதிகாரி வீட்டில் ரூ.4.50 லட்சம் திருட்டு: பணிப்பெண், சமையல்காரரிடம் போலீஸ் விசாரணை!

சென்னையில் ஐஏஎஸ் அதிகாரி சந்தீப் நந்தூரியின் வீட்டில் லாக்கரில் வைத்திருந்த ரூ.4.50 லட்சம் திருடு போனது தொடர்பாக, வீட்டில் வேலை செய்யும் பணிப்பெண்கள் மற்றும் சமையல்காரர் உள்ளிட்டோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழகத்தில் அடுத்தடுத்த நாட்களில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துத்துள்ளது.

உதகையில் பேரிடர் கால ஒத்திகை: வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளத் தீயணைப்புத் துறை தயார்!

வடகிழக்கு பருவமழை மற்றும் பேரிடர் காலங்களில் பொதுமக்கள் தங்களை காப்பாற்றிக் கொள்ளும் வகையில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் செயல் விளக்கம் ஒத்திகை நிகழ்ச்சி இன்று உதகையில் நடைபெற்றது.

காவல்துறையில் புதிய சாதனை: ஆய்வாளர் ராமலிங்கம் துணை காவல் கண்காணிப்பாளராகத் தேர்வு.. காவல் ஆணையாளர் பாராட்டு!

தமிழக குடிமை பணிகள் தேர்வில் வெற்றி பெற்று, துணை காவல் கண்காணிப்பாளராக தேர்வு செய்யப்பட்ட சென்னை பெருநகர காவல் ஆய்வாளர் S. ராமலிங்கத்தை, காவல் ஆணையாளர் ஆ. அருண் வெகுமதி வழங்கி பாராட்டினார்.