K U M U D A M   N E W S

தமிழ்நாடு

தமிழகத்தில் இருந்து மருந்து நிறுவனம் செயல்பட்டது மாநில சுகாதாரத் துறைக்குத் தெரியாதா? - எடப்பாடி பழனிசாமி கேள்வி

தமிழகத்தில் இருந்து சட்டவிரோதமாகச் செயல்பட்டதாகக் கூறப்படும் ஒரு மருந்து நிறுவனம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: தமிழகத்தில் வெப்பநிலை 3 டிகிரி குறையும் - வானிலை ஆய்வு மையம்!

தமிழகத்தில் நிலவும் வளிமண்டலச் சுழற்சிகள் காரணமாக, இன்று (அக். 10) கோவை, நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி உட்பட 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதால், சராசரி வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை குறையும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கொளத்தூர் நில மோசடி: ரூ.1.5 கோடி இடத்தை அபகரிக்க முயன்ற பிரபல தியேட்டர் உரிமையாளர் கைது!

கொளத்தூரில் ஓய்வுபெற்ற அரசு அதிகாரிக்குச் சொந்தமான ரூ.1.5 கோடி மதிப்பிலான நிலத்தை, போலியான ஆவணங்கள் மூலம் அபகரிக்க முயன்ற வழக்கில், பிரபல தியேட்டர் உரிமையாளர் சீனிவாசன் மற்றும் அவரது உறவினர் இளஞ்செழியன் உட்பட இரண்டு பேரை மத்திய குற்றப்பிரிவு (CCB) போலீசார் கைது செய்தனர்.

ஏறுமுகத்தில் தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.320 அதிகரிப்பு!

தங்கம் விலை இன்று ஒரே நாளில் ரூ.320 உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

கிருஷ்ணகிரி ஊத்தங்கரை அருகே கல்லூரி வாகனம் கவிழ்ந்து விபத்து - 15 மாணவர்கள் படுகாயம்!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே, யூனிக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களை ஏற்றிச் சென்ற வாகனம் பைபாஸ் வளைவில் நிலைதடுமாறிக் கவிழ்ந்ததில் 15க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படுகாயமடைந்தனர்.

நீலகிரிக்கு ஆரஞ் அலர்ட்.. 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளார்.

எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை அவலம்: எக்ஸ்ரே ஃபிலிம் இல்லாததால் முடிவுகள் எழுத்துவடிவில் தாமதம் - பெற்றோர் கடும் அவதி!

சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில், எக்ஸ்ரே ஃபிலிம் இல்லாததால் நோயாளிகளுக்கு முடிவுகள் வெறும் எழுத்து வடிவிலும், தாமதமாகவும் வழங்கப்படுகின்றன.

தி மியூசிக் அகாடமி விழா.. இளம் பரதக் கலைஞர் மிருதிகாவுக்கு 'நிருத்ய மயூரி' விருது!

சென்னையில் உள்ள தி மியூசிக் அகாடமியில் நடந்த பரத விழாவில், இளம் பரதக் கலைஞர் மிருதிகாவின் நடனம் பெரும் வரவேற்பைப் பெற்றது. அவரது கலைத்திறமையைப் பாராட்டி, பிரபலங்கள் முன்னிலையில் அவருக்கு 'நிருத்ய மயூரி' என்ற சிறப்பு விருது வழங்கப்பட்டது.அண்மையில் சென்னையில் உள்ள 'தி மியூசிக் அகாதமி'யில் நடைபெற்ற பரத விழாவில், இளம் பரதக் கலைஞர் மிருதிகாவின் நடனம் சபையோரின் பெரும் வரவேற்பைப் பெற்றது. அவரது கலைத்திறமையைப் பாராட்டி அவருக்கு 'நிருத்ய மயூரி' என்ற சிறப்பு விருது வழங்கப்பட்டது. இந்த விருது வழங்கும் நிகழ்வில் கலையுலகம் மற்றும் நிர்வாகத் துறையின் பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு மிருதிகாவைப் பாராட்டினர். விழாவில் கலந்துகொண்ட முக்கியப் பிரமுகர்கள் கலைமாமணி எம்.வி.என். முருகி, கவிதா ராமன் IAS, சி.ஆர். பாஸ்கர், கார்த்திக் (வெள்ளம்மல் குழு), பரமேஸ்வரி (வரி கழகம்), லட்சுமி ஜெயபிரியா, காயத்ரி பாலசுப்ரமணியம் (தாய்), 'சௌபாக்யா' பாலசுப்ரமணியம் (தந்தை)உள்ளிட்டோர் மிருதிகாவுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

கரூர் சம்பவத்தால் ஆத்திரம்: விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது!

நடிகரும் தவெக தலைவருமான விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு விடுத்த நபர் கைது செய்யப்பட்டார்.

தவெக கூட்டணி கனவில் எடப்பாடி பழனிசாமி.. பகல் கனவு பலிக்காது என செல்வப்பெருந்தகை அதிரடி!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜகவை விட்டுவிட்டுத் தமிழக வெற்றிக் கழகத்துடன் (தவெக) கூட்டணி அமைக்க முயற்சிப்பதாகக் கூறப்படும் நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அது பலிக்காத பகல் கனவு என்று காட்டமாகக் கூறியுள்ளார்.