K U M U D A M   N E W S

தமிழ்நாடு

சென்னையில் இளைஞர் வெட்டிக்கொலை – தப்பியோடிய ரவுடி கும்பலுக்கு போலீஸ் வலை

கொலை தொடர்பாக தேனாம்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழக வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல்.. விவசாயிகள் கோரிக்கை... மிகுந்த எதிர்பார்ப்பு 

தமிழ்நாடு சட்டசபையில் காலை 9.30 மணிக்கு வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.

ஜாக்டோ ஜியோ சார்பில் மாநிலம் தழுவிய உண்ணாவிரத போராட்டம் ..!

நிதிநிலை அறிக்கையில் ஜாக்டோ ஜியோ கோரிக்கைகள் சார்ந்த அறிவிப்புகள் இல்லாததால் மார்ச் 23 ஆம் தேதி மாநிலம் தழுவிய உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளதாக ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் அறிவித்துள்ளனர். 

கவுன்சிலர்களின் ஊழல் பட்டியல் விரைவில் வெளிவரும்.. பாஜக மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம் பேட்டி

ஈரோடு மாநகராட்சியில் உள்ள திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியை சேர்ந்த கவுன்சிலர்களின் ஊழல் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என பாஜக மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம் தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் வழக்கு ரத்து செய்த நீதிமன்றம்..!

முதலமைச்சர் குறித்து அவதூறு கருத்துகளை பேசியதற்காக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம் எதிர்காலத்தில் இது போன்று பேசாத வகையில்  கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என தெரிவித்துள்ளது. 

கோவையில் நடந்த துணிகரத் திருட்டு - 13 சவரன் நகை, பணம் மீட்பு ..!

கோவையில் நடைபெற்ற திருட்டு சம்பவத்தில், 13 சவரன் நகை, பணம் மீட்கப்பட்ட நிலையில், திருட்டில் ஈடுபட்ட ஒருவர் சிக்கிய நிலையில், தப்பி ஓடிய 3 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

பள்ளி கட்டிடங்களுக்கு தனியார் மூலம் தீயணைப்பு தடையில்லா சான்று..!

பள்ளி கட்டிடங்களுக்கு தனியார் மூலம் தீயணைப்பு தடையில்லா சான்று வழங்க வகை செய்யும் அரசாணை ரத்து செய்யக் கோரிய வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

படித்த படிப்புக்கு வேலை இல்லை.. தம்பியின் வாழ்க்கைக்காக தன் உயிரை மாய்த்துக்கொண்ட அண்ணன்..!

படித்த படிப்புக்கு வேலை கிடைக்காததால் பொறியியல் பட்டதாரி தூக்கிட்டு தற்கொலை கொண்டுள்ளார். தன்னால் தனது தம்பியின் வாழ்க்கையில் பாதிப்பு ஏற்படக்கூடாது என விபரீத முடிவை எடுத்துள்ளது அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

சாதிவாரி கணக்கெடுப்பு.. நாதக பேரணிக்கு அனுமதிக்கொடுத்து ட்விஸ்ட் வைத்த நீதிமன்றம்..!

அரசியல் பொதுக்கூட்டங்களுக்கு இனிவரும் காலங்களில் காவல்துறை பாதுகாப்பு வழங்குவதற்கான கட்டணத்தை  நிகழ்ச்சி நடத்தும் கட்சிகளிடம் வசூலிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இபிஎஸ்-க்கு எதிராக தயாநிதி மாறன் தாக்கல் செய்த வழக்கு.. இடைக்கால தடை விதித்த நீதிமன்றம்

எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக திமுக எம்.பி. தயாநிதி மாறன் தாக்கல் செய்த அவதூறு வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சட்டவிரோதமாக நிதி பெற்ற வழக்கு... ஜவாஹிருல்லா தண்டனையை உறுதி செய்த நீதிமன்றம்..!

வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் நிதி பெற்றது தொடர்பான வழக்கில், மனித நேய மக்கள் கட்சி எம்.எல்.ஏ. ஜவாஹிருல்லா உள்ளிட்டோருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை உறுதி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

யப்பா சாமி.. தங்கத்தின் விலை ஒரே நாளில் கிடுகிடு உயர்வு- பொதுமக்கள் அதிர்ச்சி

இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே நாளில் தங்கத்தின் விலை சவரனுக்கு பன்மடங்கு அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ரூபாய் குறியீடு மாற்றம்... பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சனம்

தமிழ்நாடு அரசின் பட்ஜெட் இலச்சினையில் ரூபாய் குறியீடு மாற்றம் செய்யப்பட்டு இருப்பது அரசியல் களத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இலச்சினையில் 'ரூ' என்ற தமிழ்வார்த்தையை தமிழ்நாடு அரசு முன்னிலைப்படுத்தியிருக்கிறது. ரூபாய் குறியீட்டை மாற்றியது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து, பா.ஜ.க தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

வளர்ச்சி பாதையில் பொருளாதாரம்.. ஆய்வு அறிக்கை வெளியீடு..!

பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் உள்ளதால், தமிழ்நாட்டின் வளர்ச்சி 8 சதவீதமாக இருக்கும் என்று தமிழ்நாடு அரசு பொருளாதார ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடிக்கு மேல் முறைகேடு.. ED வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

டாஸ்மாக்கில் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடு நடந்திருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. டாஸ்மாக் தலைமை அலுவலகம் மற்றும் மதுபான ஆலைகளில் நடத்திய சோதனையை அடுத்து இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.

சிவகாசி திமுகவில் மேயருக்கு எதிராக போர்க்கொடி.. வெளிநடப்பு செய்த மேயர்..!

சிவகாசியில் நடந்த மாமன்ற கூட்டத்தில் கவுன்சிலர்களின் கோரிக்கையை ஏற்காமல் மேயர் சங்கீதா இன்பம் வெளிநடப்பு செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திடீரென பெய்த கனமழை..நெற்பயிற்கள் சேதமடைந்ததால் விவசாயிகள் வேதனை..!

அரியலூரில் கடந்த இரு தினங்கள் பெய்த மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர் நீரில் சாய்ந்து சேதமடைந்ததால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். 

ஊட்டி, கொடைக்கானலுக்கு போறவங்க இதையெல்லாம் கவனத்துல வச்சிகோங்க...கோர்ட் போட்ட அதிரடி  ஆர்டர்

வாகன கட்டுப்பாட்டை அமல்படுத்துவதற்கு தேவையான கூடுதல் காவல்துறையினரை பணியில் அமர்த்துவதற்கு டிஜிபிக்கு உத்தரவிட்டனர்

திமுக அரசின் பொருளாதார இலக்குகள் தோல்வி...ராமதாஸ் சாடல்

தமிழகத்தில் மிகச்சிறப்பான மனிதவளம் உள்ளது. அதைக் கொண்டு எத்தகைய கடின இலக்கையும் அடைய முடியும். ஆனால், மது, கஞ்சா போதையை கட்டவிழ்த்து விட்டு மனித வளத்தை தமிழக அரசு சிதைத்துக் கொண்டிருக்கிறது.

22 ஆண்டு கால கோரிக்கை...நிறைவேற்றி கொடுத்த அமைச்சர்...நெகிழ்ந்து போன மக்கள் 

தங்கள் குழந்தைகள் பள்ளிக்கு அனுப்புவதற்கும், அவசர மருத்துவ சேவைக்கும் அழைத்துச் செல்ல தற்போது பேருந்து சேவை உள்ளதாகவும் சின்னவெண்மணி மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

தொடரும் சோகம்.. சிறுத்தை தாக்கியதில் பெண்மணி உயிரிழப்பு!

நீலகிரி மாவட்டம் மைனலை அரக்காடு கிராமத்தில் உள்ள தேயிலை தோட்டத்தில் அஞ்சலை என்ற மனநலம் பாதிக்கப்பட்ட பெண்மணியை சிறுத்தை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

பால் விவசாயிகளுக்கு தரவேண்டிய ஊக்கத்தொகை என்னாச்சு? விவசாய சங்கம் எழுப்பிய கோரிக்கை

தமிழ்நாடு அரசு ஆவின் நிறுவனத்திற்கு பால் ஊற்றி வரும் விவசாயிகளுக்கு கடந்த நான்கு மாதமாக நிலுவையில் உள்ள ரூபாய் 120 கோடிக்கும் மேற்பட்ட ஊக்கத்தொகையை உடனடியாக விடுவித்து பால் உற்பத்தி செய்யும் 8 லட்சம் விவசாயிகளின் நலனை காக்க வேண்டும் என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

40 ஆயிரம் பேர் சிறுநீரக தானத்திற்காக காத்திருக்கும் நிலை... அறுவை சிகிச்சை நிபுணர் சொன்ன அதிர்ச்சி தகவல்

சிறுநீரக செயலிழப்பால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க,  மூளை சாவு அடைந்தவர்களின்  சிறுநீரகம் மற்றும் உறுப்பு தானம் செய்ய முன்வர வேண்டும் தெரிவித்தார்.

சுதந்திர போராட்ட தியாகிகள் நிலத்தில் மருத்துவக் கழிவு.. ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு..!

சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தில் மருத்துவக் கழிவுகளை விடுவதை எதிர்த்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தோல்வியடைந்த ஆட்சி நடத்தும் திமுக.. பாஜக மாநில மகளிர் அணி தலைவி விமர்சனம்

பாலியல் குற்றங்களை முதலமைச்சர் தடுக்க தவறிவிட்டதாகவும், இந்த ஆட்சி தோல்வி அடைந்த ஆட்சி என்றும் தமிழக பாஜக மாநில மகளிர் அணி தலைவி  உமாரதி ராஜன் விமர்சனம் செய்துள்ளார்.