K U M U D A M   N E W S

தமிழ்நாடு

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தீர்மானம் செல்லாது - உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்!

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தற்போதைய நிர்வாகிகளின் பதவிக்காலத்தை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை செல்லாது என அறிவித்து, உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதியை ஆணையராக நியமித்து தேர்தல் நடத்த உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சீமானுக்கு கொலை மிரட்டல்.. சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ராஜ்யசபா சீட் இல்லை என்றாலும் திமுகவுடன் கூட்டணி தொடரும் - துரை வைகோ

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு ராஜ்யசபா சீட் கிடைக்கிறதோ இல்லையோ திமுகவுடன் கூட்டணி தொடரும் என்று துரைவைகோ தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை கோயிலின் அறங்காவலர் குழு தலைவர் நியமனம் ரத்து!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் அறங்காவலர் குழு தலைவராக ஜீவானந்தம் நியமிக்கப்பட்டதை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

4 வயது சிறுமி தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த விவகாரம்.. மழலையர் பள்ளி உரிமம் ரத்து

மதுரையில் மழலையர் பள்ளியில் 4 வயது சிறுமி தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த விவகாரத்தில் தனியார் மழலையர் பள்ளிக்கான உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

'நான் யானை அல்ல.. குதிரை' செந்தில் பாலாஜி ஆதரவாளர்களின் போஸ்டர் யுத்தத்தால் பரபரப்பு!

கோவையில் செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கிய தமிழக அரசிற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது ஆதரவாளர்கள் ஒட்டியுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ரியல் எஸ்டேட் தொழிலில் ஏற்பட்ட பிரச்சனை.. 3 பேரை கடத்திய கும்பல்.. போலீசார் அதிரடி

ரியல் எஸ்டேட் தொழிலில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக 3 பேர் கடத்தப்பட்ட நிலையில் அவர்களை போலீசார் 2 மணிநேரத்தில் மீட்டனர்.

60 கிலோ போதைப்பொருள் பறிமுதல்.. இளைஞர்களை கைது செய்த போலீசார்

ஆந்திராவில் இருந்து பாண்டிச்சேரிக்கு கடத்த முயன்ற 60 கிலோ போதைப்பொருளை பறிமுதல் செய்த போலீசார் இருவரை கைது செய்தனர்.

சுற்றுலா வாகனங்களுக்கு 8 ஆண்டுகளுக்கு மட்டுமே வழங்கப்படும் - சென்னை உயர்நீதிமன்றம்

சுற்றுலா வாகனங்களுக்கான அகில இந்திய உரிமம் 8 ஆண்டுகளுக்கு மட்டுமே வழங்கப்படும் என்ற தமிழக போக்குவரத்து துறையின் முடிவில் தலையிட முடியாது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திரைப்பட தயாரிப்பாளர் சங்க வழக்கு.. ஃபெப்சி உள்ளிட்ட திரைத்துறை சங்கங்கள் பதிலளிக்க உத்தரவு

படப்பிடிப்பு மற்றும் பட தயாரிப்பு பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க மறுப்பதை எதிர்த்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் தொடர்ந்த வழக்கில், ஃபெப்சி உள்ளிட்ட திரைத்துறை சங்கங்கள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெகாசஸ் வழக்கு: சேதவிரோதிகள் செல்போனை ஒட்டுகேட்பதில் தவறில்லை - உச்சநீதிமன்றம்

தனிநபர்களின் உரிமையை பாதிக்காதவரை தேசத்தின் பாதுகாப்புக்காக மத்திய அரசு உளவு மென்பொருளை பயன்படுத்துவதில் தவறில்லை என பெகாசஸ் வழக்கில் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

Find my device ஆப் மூலம் காணாமல் போன செல்ஃபோனை கண்டுபிடித்த பெண்!

நெற்றியில் தாக்கிவிட்டு, வைத்து தாக்கி செல்போனை பறித்து சென்ற கும்பலை, find my device ஆப் மூலம் சில நிமிடங்களில் செல்போன் பறித்துசென்ற திருடர்களை துரத்தி பிடித்த செல்போன் பறிகொடுத்தவரின் மனைவி மீட்டுள்ளார்

நெல்லையப்பர் கோயிலில் ரீல்ஸ் செய்த இளைஞர்கள்.. காவல் நிலையத்திற்கு பறந்த புகார்

வரலாற்று சிறப்புமிக்க நெல்லையப்பர் கோயில் வளாகத்தில் ரீல்ஸ் செய்து வீடியோ வெளியிட்ட இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

த.வெ.க வழக்கு.. ஜூன் மாதம் தள்ளிவைத்த நீதிமன்றம்!

தமிழக வெற்றிக்கழகத்தின் கட்சியின் கொடியில் இடம்பெற்றுள்ள யானை சின்னத்தை பயன்படுத்த தடை கோரிய வழக்கு விசாரணையை ஜூன் 4 ஆம் தேதிக்கு தள்ளிவைத்து சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பள்ளியின் தண்ணீர் தொட்டியில் விழுந்து 4 வயது குழந்தை உயிரிழப்பு!

மதுரையில் மழலையர் பள்ளியில் உள்ள தண்ணீர் தொட்டியில் விழுந்து, நான்கு வயது குழந்தை உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக, தாளாளர், ஆசிரியர்கள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

அதிக கட்டணம் வசூலித்த கல்லூரிகள்.. நடவடிக்கை எடுக்காத அரசு.. சிஏஜி அறிக்கை

தமிழக அரசு உத்தரவை மீறி மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூலித்த கல்லூரிகள் மீது அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என சிஏஜி அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

மத்திய அரசும், மாநில ஆளுநரும் பாம்பு, நரியும் போல் செயல்படுகின்றனர் - முதலமைச்சர் உவமை

மத்திய அரசும், மாநில ஆளுநரும் பாம்பு, நரியும் போல் செயல்படுவதாகவும், அவர்களின் நெருக்கடிகளைத் தாண்டி தமிழக அரசு சாதனை படைத்து வருவதாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வழக்கு.. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க பிறப்பித்த உத்தரவை மாற்றியமைக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

பொள்ளாச்சி வழக்கு.. நீதிபதி மாற்றம்.. தீர்ப்பு வழங்குவதில் சிக்கலா?

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் திட்டமிட்டப்படி மே 13-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

ஆன்லைன் ரம்மி: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்த நீதிமன்றம்

ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்களை ஒழுங்குப்படுத்தும் விதிகளுக்கு எதிரான வழக்குகளின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.

அமைதி பூங்காவாக தமிழகம்...காவல்துறைக்கு முதல்வர் புகழாரம்

சாதி, மதக்கலவரம் இல்லாத அமைதியான சூழல் தமிழ்நாட்டில் உள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

கோவை நீதிமன்றத்தில் பரபரப்பு.. குற்றவாளி தீர்ப்பிற்கு முன் தப்பியோட்டம்!

கோவையில் பரபரப்பை ஏற்படுத்திய வழிப்பறி மற்றும் கொலை முயற்சி வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி, நீதிமன்ற தீர்ப்புக்கு பயந்து தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பஹல்காம் தாக்குதல்: "பிரார்த்தனை செய்கிறேன்"...நடிகர் அஜித்

பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு பிரார்த்தனை செய்வதாக நடிகர் அஜித் தெரிவித்துள்ளார்.

களமிறங்கும் "ரோபோட்டிக் காப்" –சென்னை போலீஸ் அறிவிப்பு

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் 24 மணி நேரமும் இயங்கக் கூடிய ரோபோ காப் வசதி அறிமுக செய்ய உள்ளதாக சென்னை போலீஸ் அறிவித்துள்ளது.

வேலூரில் உடலை எரிக்க வந்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி...விசாரணை நடத்தப்படும் என மாநகராட்சி விளக்கம்

வேலூரில் உடலை எரிக்காமலேயே அஸ்தி வழங்குவதாகவும், உடலை வைத்து ஏதோ தவறு நடப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு