K U M U D A M   N E W S

தமிழ்நாடு

https://magazine.kumudam.ai/api/v1/getUNNews?site=kumudamnews&limit=25&offset=375&order=created_at&category_id=3

குற்றவாளிகளை விமானத்தில் சென்று கைது செய்யலாம்: தமிழக டிஜிபி சுற்றறிக்கை!

வழக்கு விசாரணை, குற்றவாளிகளைக் கைது செய்தல் மற்றும் சொத்துக்களை மீட்பதற்காக, புலனாய்வு அதிகாரிகள் பிற மாநிலங்களுக்கு விமானத்தில் செல்லலாம் என தமிழக பொறுப்பு டிஜிபி ஜி. வெங்கடராமன் காவல்துறை அதிகாரிகளுக்குச் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். தமிழக அரசின் அரசாணையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ. 45 லட்சம் மோசடி: ஒருவர் கைது!

மருத்துவத்துறை மற்றும் மின்சாரத்துறைகளில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 45,41,000 மோசடி செய்த வழக்கில், பினகாஷ் எர்னஸ்ட் என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இவரது மனைவி வான்மதியைத் போலீசார் தேடி வருகின்றனர்.

ஆணவப் படுகொலை மிரட்டல்: காதல் ஜோடி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சம்!

வேறு சாதியைச் சேர்ந்தவரைத் திருமணம் செய்துகொண்டதால், குடும்பத்தினரால் ஆணவப் படுகொலை மிரட்டலுக்கு உள்ளான காதல் ஜோடி, உயிருக்குப் பயந்து கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சம் புகுந்துள்ளது.

கர்ப்பிணி உட்பட 27 பேருக்கு நடுக்கம் ஏன்? - சீர்காழி அரசு மருத்துவமனை விளக்கம்

சீர்காழி மருத்துவமனையில் நடுக்கம் ஏற்பட்ட நோயாளிகள் அனைவருக்கும் உடல்நிலை சீராக இருப்பதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

வாக்குறுதிகளில் 10 சதவீதம் கூட திமுக நிறைவேற்றவில்லை – அண்ணாமலை

சட்டசபையில் துறை வாரியாக வெளியிடப்பட்ட அறிவிப்புகளில், 256 அறிவிப்புகளை கைவிட தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் அரசை அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

வீடு புகுந்து கல்லூரி மாணவர்களை வெட்டிய 2 பேருக்கு மாவுக்கட்டு

தப்பி ஓடியபோது தவறி விழுந்து எலும்பு முறிவு ஏற்பட்டதாக போலீஸ் தகவல்

திமுக முப்பெரும் விழாவிற்கு சென்ற பேருந்து மோதி கர்ப்பிணி உயிரிழப்பு- படுகாயத்துடன் கணவர் அனுமதி

திமுக முப்பெரும் விழாவை முடித்துவிட்டு அதிவேகத்தில் வந்த பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதி 7 மாத கர்ப்பிணி பெண் உயிரிழப்பு

பயணிகளை ஏற்றிச்சென்ற சொகுசு பேருந்து...தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு

சுங்கச்சாவடி நெடுஞ்சாலை ரோந்து பணியாளர்களின் உதவியுடன் பேருந்து அவசர கால வழியில் இறங்கி பயணிகள் உயிர்தப்பினர்

அனைவரும் அறிவாளியாக இருந்தால் வாக்குவாதம் ஏற்படும்- ராஜேந்திர பாலாஜி பேச்சால் சிரிப்பலை

அதிமுகவே வெற்றிபெறும் என்று தென்காசியில் ராஜேந்திர பாலாஜி பங்கேற்ற நிகழ்ச்சியில் திமுக நகர கழகத் துணைச் செயலாளர் பேசியதால் பரபரப்பு

கொலை மிரட்டல் புகார் - தவெக நிர்வாகி உட்பட 4 பேர் கைது

கட்சி பொறுப்பு வழங்கியது தொட்ரபாக கொலை மிரட்டல் விடுத்த தவெக நிர்வாகி உட்பட 4 பேர் கைது

ஓய்வு பெற்ற அரசு அதிகாரியிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்த கும்பல்- இறந்தது போன்று வீடியோ எடுத்து நாடகமாடியது அம்பலம்

திருமண நாடகமாடி இரண்டரை கோடி மதிப்புள்ள சொத்துக்களை அபகரித்ததாக ஓய்வு பெற்ற அரசு அதிகாரி குற்றச்சாட்டு

வாணியம்பாடியில் ஆடுகளை காரில் திருடிச்சென்ற வழக்கறிஞர் கைது

வாணியம்பாடி அருகே மேய்ச்சலில் இருந்த ஆடுகளை காரில் திருடிச்சென்ற வழக்கறிஞர் மற்றும் அவரது நண்பரை போலீசார் கைது செய்தனர்.

தி.மு.க. விழாவுக்குச் சென்ற தனியார் பேருந்துகள்: அரசுப் பேருந்தில் ‘உறங்கிய’ ஊழியர்களால் பொதுமக்கள் அவதி!

தி.மு.க.வின் முப்பெரும் விழாவுக்குக் கரூர் சென்ற தனியார் பேருந்துகளால், கோவை மாநகரில் இன்று பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். பேருந்து கிடைக்காமல் பொதுமக்கள் தவித்துக் கொண்டிருந்தபோது, அரசுப் பேருந்து ஒன்றின் ஓட்டுநரும், நடத்துநரும் உள்ளே உறங்கிக்கொண்டிருந்த சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

குட் பேட் அக்லி படத்திற்கு ஏற்பட்ட சிக்கல்: இளையராஜா பாடல்கள் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி மனு!

குட் பேட் அக்லி படத்தில் இளையராஜா பாடல்களை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தாக்கல் செய்த மனுவுக்கு, இசையமைப்பாளர் இளையராஜா பதிலளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆளுநர் மாளிகை, எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்!

சென்னை, ஆளுநர் மாளிகை மற்றும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் வீட்டிற்கு வந்த வெடிகுண்டு மிரட்டலால், சென்னை முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

விருதுநகர் அருகே வெடி விபத்தில் உயிரிழப்பு – முதலமைச்சர் நிதியுதவி அறிவிப்பு

விருதுநகர் அருகே கங்கர்செவல் கிராமத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார்.

விளையாட்டை விதைத்து ஒற்றுமையை அறுவடை செய்யும்' ஈஷா கிராமோத்சவம்!

மக்கள் இடையே இருக்கும் சாதி, மத மற்றும் இன அடையாளங்களை அழித்து ஒற்றுமையை கொண்டு வர விளையாட்டை ஒரு கருவியாக சத்குரு பயன்படுத்துகிறார் என்றால் அது மிகையல்ல. ஆமாம் சத்குருவால் துவங்கப்பட்ட ஈஷா கிராமோத்சவ திருவிழா விளையாட்டுகள் மூலம் கிராமங்களில் ஒற்றுமையை உருவாக்கி வருகிறது.

ஈஷா கிராமோத்சவத்தால் எங்க ஊர்ல பசங்க குடிப்பழக்கத்தை விட்டுட்டாங்க - ஒருசேரிபுதூர் பூபதி

ஈரோடு அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள், ஈஷா கிராமோத்சவம் விளையாட்டுப் போட்டிகளால் குடிப்பழக்கத்திலிருந்து மீண்டதாகத் தெரிவித்துள்ளனர்.

ஈஷா கிராமோத்சவம் எங்களை அங்கீகரித்து அடையாளம் தருகிறது - ஒரு கையில் வாலிபால் ஆடி அசத்தும் கடலூர் தேவா

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி பகுதியைச் சேர்ந்தவர் தேவா(22). வாலிபால் விளையாட்டில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். சில வருடங்களுக்கு முன்பு தீபாவளி நாளில் எதிர்பாராத விதமாக நிகழ்ந்த விபத்தில் தன்னுடைய ஒரு கரத்தினை இழந்து உள்ளார். தன் ஒரு பக்க கரத்தினை இழந்த பிறகும் கூட தொடர் முயற்சி மற்றும் பயிற்சியின் மூலம் தொடர்ந்து வாலிபால் போட்டிகளில் விளையாடி பலரையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறார்.

நடிகர் விஷால் குறித்து அவதூறு கருத்து - யூடியூப்பர் வாராகி கைது

நடிகர் விஷால் குறித்து அவதூறு கருத்து தெரிவித்த வழக்கிலும், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை முன்னாள் டீன் தேரணிராஜன் புகாரிலும் youtuber வாராகி கைது

சென்னை விமான நிலையத்தில் ₹20 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்.. கென்யா நாட்டு இளைஞர் கைது!

ஆப்பிரிக்க நாடான கென்யாவிலிருந்து, சுமார் 2 கிலோ அளவிலான கொக்கைன் போதைப்பொருள் கடத்தி வந்த இளைஞரை, சென்னை விமான நிலையத்தில் மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் கைது செய்து, போதைப்பொருளைப் பறிமுதல் செய்தனர். இதன் சர்வதேச மதிப்பு ₹20 கோடியென மதிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மூன்று நாட்களுக்குக் கனமழை தொடரும்: வானிலை மையம் தகவல்!

தமிழகத்தில் மூன்று தினங்களுக்கு கனமழை தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

விஜய் ஏதோ பேசுகிறார் என்பதற்காக த.வெ.க. மாற்றாக வர முடியாது- எச்.ராஜா விமர்சனம்

தமிழகத்தில் அடுத்த தலைமுறை மக்களை அழித்துக்கொண்டிருக்கும் பேரழிவு சக்தி தான் ஸ்டாலின் அரசு என எச்.ராஜா விமர்சனம்

பிங்க் பெயிண்ட் அடித்தால் பிங்க் பஸ் ஆகிவிடாது - தி.மு.க-வை சாடிய வானதி சீனிவாசன்!

பிங்க் பெயிண்ட் அடித்தால் பிங்க் பஸ் ஆகிவிடாது என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பேச்சுக்கு வானதி ஸ்ரீனிவாசன் பதிலடி கொடுத்துள்ளார்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு.. பக்தர்களுக்குத் தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு!

திருப்பதியில் ஏழுமலையானை இலவசமாகத் தரிசிக்க 24 மணி நேரம் காத்திருக்கும் சூழல் இருப்பதால், பக்தர்களுக்குச் சிறப்பு வசதிகளைத் தேவஸ்தானம் செய்து வருகிறது.