K U M U D A M   N E W S

அரசியல்

விஜய்யுடன் பேச்சுவார்த்தையா? எங்களுக்கு எந்த தொடர்புமில்லை: ஜாக்டோ ஜியோ விளக்கம்

கடந்த ஜூன் 13 ஆம் தேதியன்று ஜாக்டோ ஜியோ சார்பில் நடிகரும், அரசியல் கட்சித் தலைவருமான விஜய்யை சந்தித்து கோரிக்கை விடுத்ததாக வெளியான ஊடகச்செய்திக்கு, ஜாக்டோ-ஜியோவின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் சார்பாக மறுப்பு தெரிவித்துக் கொள்கிறோம் என வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமதாஸ்-அன்புமணி மோதலுக்கிடையே செயற்குழு கூட்டம்..புதிய நிர்வாகி நியமனம்

தியாக தீபங்களான தந்தையரை எல்லா நாளும் வணங்குவோம் என அன்புமணி எக்ஸ் தளப்பக்கத்தில் தந்தையர் தின வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார்.

உண்மையான அப்பாக்களுக்கு வாழ்த்துகள்.. எடப்பாடி பழனிசாமி

குடும்பத்தின் அடித்தளமாய்த் திகழும் அனைத்து உண்மையான "அப்பா"க்களுக்கும் தந்தையர் தின வாழ்த்துகளை தெரிவிப்பதாக எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

தலைவிரித்தாடும் துப்பாக்கி கலாச்சாரம்.. அன்புமணி குற்றச்சாட்டு

தமிழ்நாட்டில் துப்பாக்கி கலாச்சாரம் தலைவிரித்தாடுவதைப் பார்க்கும் போது நாம் பாதுகாப்பாகத் தான் வாழ்கிறோமா? என்ற கேள்வி எழுவதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

காவல் நிலையத்திற்கே பாதுகாப்பில்லை.. இபிஎஸ் குற்றசாட்டு

திமுக ஆட்சியில் பொதுமக்களுக்கும் போலீசாருக்கும் பாதுகாப்பு இல்லாத நிலையில், தற்போது காவல் நிலையத்திற்கே பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

உலோக மாசு குறித்து விரிவான விசாரணை.. டிடிவி தினகரன் வலியுறுத்தல்

எண்ணூரில் உள்ள தனியார் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் நச்சு கலந்த உலோக மாசுக்களால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாகவும், இதுகுறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்றும் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

நீங்கள்தான் போலி விவசாயி.. முதல்வருக்கு இபிஎஸ் பதிலடி

விவசாயத்தைப் பற்றி ஒன்றும் தெரியாத முதலமைச்சர் ஸ்டாலின்தான் போலி விவசாயி என்பதை தமிழக மக்கள் நன்கறிவார்கள் என்று எதிர்க்கட்சி எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றுக.. டிடிவி தினகரன் வலியுறுத்தல்

தேர்தலுக்கு முன் வாக்குறுதிகளை அள்ளிவீசிய திமுக, ஆட்சிக்கு வந்தபின்பு தூய்மைப் பணியாளர்கள் மீது அடக்குமுறையை ஏவியிருப்பதாகவும், அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

மாப்பிள்ளை கட்சியாகும் தவெக! வாசலில் தவித்த மாஜிக்கள்!

'வணக்கம்டா மாப்ள பனையூர்ல இருந்து' என கடந்த வாரம் தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகளைச் சேர்ந்த மாஜிக்கள் திடீரென பனையூரில் ஆஜராகியிருந்தனர். அவர்கள் விஜய் முன்னிலையில் த.வெ.க.வில் இணைய வந்தவர்கள் என்ற விவரம் பிறகுதான் தெரியவந்தது. இந்த இணைப்பு நிகழ்வு நடந்தேறிய பிறகு, மாஜிக்களை கட்சி அலுவலகத்திற்குள் விடாமல் கதவைப் பூட்டி அவமானப்படுத்தி அனுப்பிய சம்பவம் கடும் அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது.

ஜனவரி 5 வரை வெயிட் பண்ணுங்க..அமித்ஷா கொடுத்த அப்டேட்.!

தேர்தலுக்கு முன்பாக பணப்பட்டுவாடாவிற்கு பாஜக ரெடியாக இருப்பதாகவும், அதற்கு ஜனவரி 5 ஆம் தேதி வரை வெயிட் செய்ய வேண்டும் என்றும் அப்டேட் கொடுத்துள்ள அமித்ஷா, பாஜகவினருக்கு சில முக்கிய டாஸ்குகளை கொடுத்துள்ளதாக கமலாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.