K U M U D A M   N E W S

அரசியல்

விஜய்யின் அடுத்த இலக்கு டெல்லியா? அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!

தமிழ்நாட்டில் விஜய்யின் அரசியல் செல்வாக்கை நாடு முழுவதும் கொண்டு செல்லும் முயற்சிகள் நடைபெற்று வருவதாக கூறப்படும் நிலையில், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சட்டமன்றத்தில் தமிழ்நாட்டில் இருந்து எதிர்காலத்தில் ஒரு பிரதமர் உருவாக வேண்டும் என பேசியுள்ளது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஜயபாஸ்கர் vs மதியழகன்.. கரூர் தவெகவில் வெடித்த மோதல்!

கரூர் தவெகவில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் மாவட்டச் செயலாளர் மதியழகன் ஆதரவாளர்களிடையே கருத்து வேறுபாடு மற்றும் கோஷ்டி மோதல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தி.மு.க.வில் மாவட்ட செயலாளர்களுக்கு ‘செக்’...அதிரடி முடிவை அறிவித்த ஸ்டாலின்!

தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து, கட்சியில் அதிரடி மாற்றங்களை மேற்கொள்ள தி.மு.க. தலைமை தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பள்ளி மாணவன் அடித்துக்கொலை: நிர்வாகத்திறனற்ற கோமாளி சர்க்கார்.. உதயநிதி கடும் தாக்கு!

சென்னை அருகே பள்ளி மாணவன் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தேர்தல் தோல்வி.. திமுகவில் அதிரடி மாற்றம்.. மு.க.ஸ்டாலின் பிளான் என்ன?

தேர்தல் தோல்வியை தொடர்ந்து, திமுகவில் அதிரடி மாற்றங்கள் நிகழவுள்ளதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

"தவெகவிற்கு வாக்களித்த மக்களுக்கு நல்ல சாவே வராது" - பகிர் கிளப்பிய ஆர்.எஸ்.பாரதி

முகவுக்கு வாக்களிக்காமல் தவெகவுக்கு வாக்களித்த மக்களுக்கு நல்ல சாவே வராது என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசிய சம்பவம் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

"100 நாள் ஆட்சியில் ரீல்ஸ் மட்டுமே போட்டுள்ளார்" - விஜயை கடுமையாக சாடிய எடப்பாடி!

தவெக ஆட்சி அமைந்த 100 நாட்களில் ரீல்ஸ் போடுவதிலும், ரீல் விடுவதிலும்தான்கவனம் செலுத்தியதே தவிர, மக்களுக்கான புதிய திட்டங்கள் எதுவும் செயல்படுத்தப்படவில்லை என்றுஅதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

"திமுக - பாஜக தற்போது நேரடி கூட்டணி" - உண்மையை உடைத்தாரா நிர்மல் குமார்?

திமுகவும் பாஜகவும் மறைமுகமாக கூட்டணியில் இருப்பதாக தமிழ்நாட்டு அரசியல் களத்தில் தொடர்ந்து விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது இரு கட்சிகளுக்கும் இடையே நேரடிக் கூட்டணி இருப்பதாக அமைச்சர் நிர்மல்குமார் குற்றம்சாட்டியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

"சுண்டெலிப் போல் மவுனம் காக்கும் ஊடகம்" - ராகுல் காந்தி சாடல்

மத்திய அரசுக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே மாணவர்கள் போராட்டம் தொடர்பான விவகாரத்தில் மோதல் நீடித்து வரும் நிலையில், "ஊடகங்கள் சுண்டெலியைப் போல அமைதியாக இருக்கக்கூடாது," என காங்கிரஸை சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் விமர்சித்தார்.

காங்கிரஸ் குழுத் தலைவர் மாற்றம்! குளச்சல் எம்.எல்.ஏ-க்கு பதவி...

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் நீண்ட நாட்களாக காலியாக இருந்த பதவியான சட்டப்பேரவை குழுத் தலைவருக்கு குளச்சல் தொகுதி எம்.எல்.ஏ. தாரகை கத்பர்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.