K U M U D A M   N E W S

அரசியல்

தமிழை அழித்தவர்கள் திமுகவினர்.. எச்.ராஜா குற்றச்சாட்டு

தமிழகமும் தமிழும் வளர வேண்டும் என்றால் போலி திராவிட கும்பல் அரசியல் களத்தில் இருந்து வேருடனும் வேரடி மண்ணுடனும் அகற்றப்படவேண்டும் என்றும், தமிழை அழித்தவர்கள் திமுகவினர் என்றும் எச்.ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.

சமுதாயத்திற்கு, கட்சிக்கும் நான் துரோகம் செய்ய மாட்டேன் - அன்புமணி ராமதாஸ் பேச்சு

என்னுடைய கட்சிக்கும், என்னுடைய சமுதாயத்திற்கும், நான் துரோகம் செய்தால் அது தான் என்னுடைய வாழ்நாளில் கடைசி நாளாக இருக்கும் என அன்புமணி ராமதாஸ் உணர்ச்சி பொங்க தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமிக்கு ஒன்றும் தெரியாது.. அமைச்சர் துரைமுருகன் விமர்சனம்

தமிழகத்தில் பல தடுப்பணைகள் கட்டப்பட்டு வருகிறது என்றும், ஏதோ பேச வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார் என்று அமைச்சர் துரைமுருகன் விமர்சித்துள்ளார்.

ஓபிஎஸ் எம்.எல்.ஏ. பதவிக்கு சிக்கல்.. சபாநாயகர் அப்பாவு பதில்

ஓ.பன்னீர் செல்வத்தின் எல்.எல்.ஏ. பதவியை பறிக்க கோரி அவரது தொகுதியை சேர்ந்த நபர் அளித்த புகாரின் பேரில் சட்ட ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

'யார் அந்த சார்' என்பதை எங்கள் ஆட்சியில் கண்டுபிடித்தோம்.. செல்லூர் ராஜு பேட்டி

"பொள்ளாச்சி வழக்கில் சிபிஐ-க்கு உத்தரவிட்டு 'யார் அந்த சார்' என்பதை எங்கள் ஆட்சியில் கண்டுபிடித்து தண்டனை வாங்கிக் கொடுத்தோம்" என்று செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

எனது அறிக்கைகள் முதல்வரை உறுத்துகிறது.. இபிஎஸ் பதிலடி

"கொடுத்த வாக்குறுதி எதையுமே நிறைவேற்றாமல், நான் அதை செய்யப் போகிறேன், இதை செய்யப் போகிறேன் என்று வாய்க்கு வந்தபடி கூறுவதுதான் அரைவேக்காட்டுத் தானம் என்று முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார்.

இபிஎஸ்காக நள்ளிரவில் தியானம் – சிறப்பு பூஜை செய்த முன்னாள் அமைச்சர்

அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நள்ளிரவில் தியானம் செய்து சிறப்பு பூஜைகள் செய்து சாமி தரிசனம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பரபரப்பான சூழ்நிலையில் பூவை ஜெகன் மூர்த்தி மகளை சந்தித்த ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி!

சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் கூலிப்படை ஏவியதாக புரட்சி பாரத கட்சியின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான ஜெகன் மூர்த்தி போலீசாரால் தேடப்பட்டு வரும் நிலையில், பூவை ஜெகன் மூர்த்தி இல்லத்திற்கு மறைந்த பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவரது மனைவி பொற்கொடி வருகை தந்துள்ளார்.

கோட்டு சூட் போட சொன்னது எதற்காக? தொண்டர்கள் முன் ஆவேசமாக பேசிய திருமா!

”ஆட்டோ ஓட்டுபவர், ஆடு மாடு மேய்பவர், கட்டிட வேலை செய்கிறவர்கள் எல்லாம் கோட்டு சூட் அணிந்து மிடுக்காக நடப்பதை நான் பார்க்கவேண்டும். அவர்கள் தங்களே அம்பேத்கராக உணர வேண்டும். அது விடுதலை சிறுத்தைகளின் எழுச்சிக்கு சான்று” என தொல்.திருமாவளவன் தொண்டர்கள் முன் உரையாற்றியுள்ளார்.

விஜய்யுடன் பேச்சுவார்த்தையா? எங்களுக்கு எந்த தொடர்புமில்லை: ஜாக்டோ ஜியோ விளக்கம்

கடந்த ஜூன் 13 ஆம் தேதியன்று ஜாக்டோ ஜியோ சார்பில் நடிகரும், அரசியல் கட்சித் தலைவருமான விஜய்யை சந்தித்து கோரிக்கை விடுத்ததாக வெளியான ஊடகச்செய்திக்கு, ஜாக்டோ-ஜியோவின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் சார்பாக மறுப்பு தெரிவித்துக் கொள்கிறோம் என வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.