K U M U D A M   N E W S

அரசியல்

இந்த முறை முதல்வர் காவு கொடுத்திருப்பது அமைச்சர் நேருவை.. ஆர்.பி.உதயகுமார் அட்டாக்

தன் அப்பா மடியில் ஊர்ந்து, தவழ்ந்த ஒரே காரணத்திற்காக திமுக தலைவராகியிருக்கும் ஸ்டாலினுக்கும், ஸ்டாலின் கொத்தடிமையாக உள்ள நேருவிற்கு உழைப்பை பற்றி என்ன தெரியும்? என அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வீடியோ வாயிலாக கேள்வி எழுப்பியுள்ளார்.

‘ஸ்டிக்கர்’ ஒட்டி பழகிப்போன முதல்வர்.. எல்.முருகன் விமர்சனம்

மதுரை எய்ம்ஸ் 2026-ல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வருமென்ற செய்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு 'கிலி' ஏற்படுத்தியுள்ளது" என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார்.

திமுக ஆட்சியில் மதச்சார்பின்மை இருக்கிறதா?.. நயினார் நாகேந்திரன் கேள்வி

"ராமநாதசுவாமி கோயிலில் உள்ளூர் பக்தர்களின் உரிமைகளை பறிக்கும் விதம் கட்டண தரிசன முறையை அமல்படுத்தி இருப்பது, திமுக ஆட்சியில் மதச்சார்பின்மை இருக்கிறதா எனும் சந்தேகத்தை எழுப்புகிறது" என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

சாதிவாரிக் கணக்கெடுப்பு கண்துடைப்பாக இருக்கக்கூடாது.. விஜய் வலியுறுத்தல்

"மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் சேர்ந்த சாதிவாரிக் கணக்கெடுப்பானது உண்மையான சமூக நீதியை நிலைநாட்டுவதாக இருக்க வேண்டும்" என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

நம்ப வைத்து ஏமாற்றிய பாஜக..? வீட்டை இழந்த நாட்டாமை..? அரசியலில் இருந்து விலகலா?

நாட்டாமை பாதம் பட்டா எங்க வெள்ளாமை வெளையுமடி.. நாட்டாமை கை அசஞ்சா மாசம் நாலு மழ பொழியுமடி.. என்று சினிமாவில் பாரி வள்ளலாக வலம்வந்த சரத்குமார், தற்போது பாஜகவில் ஐக்கியமான நிலையில் கடன் தொல்லையால் கடும் சங்கடத்தில் இருக்கிறாராம். நாட்டாமைக்கே இப்படி ஒரு நிலைமையா என்று குமுறுகின்றனர் அவரை நம்பி பாஜகவில் இணைந்த முன்னாள் ச.ம.கவினர்…

தேர்தல் வாக்குறுதி எண் 54 நினைவிருக்கிறதா? முதல்வருக்கு அண்ணாமலை கேள்வி

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தனது தேர்தல் வாக்குறுதி எண் 54 நினைவிருக்கிறதா? என்று பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

கும்பகர்ண தூக்கத்தில் இருக்கும் முதல்வர்.. இபிஎஸ் காட்டம்

"தமிழ்நாட்டில் போதைப்பொருள் ஒழிக்கவோ, சட்டம் ஒழுங்கைக் காக்கவோ முதலமைச்சர் ஸ்டாலின் இனியும் நடவடிக்கை எடுப்பார் என துளியும் நம்பிக்கை இல்லை" என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

2026-ல் தமிழ்நாட்டை கையில் எடுப்போம் – நயினார் நாகேந்திரன்

வரும் 22ம் தேதி முருகரை கையில் எடுத்திருக்கிறோம், அதேபோல் வரும் 2026ம் ஆண்டில் தமிழ்நாட்டையே கையில் எடுப்போம் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

பாஜகவுக்கு 117 சீட்ஸ்..? டெல்லிக்கு அண்ணாமலை அனுப்பிய நோட்டீஸ்.! உச்சக்கட்ட கடுப்பில் எடப்பாடி..!

2026 தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் அமைய வேண்டும் என்றால், அ.தி.மு.க. போட்டியிடும் தொகுதிகளில் சரிபாதி தொகுதியில் பா.ஜ.க. போட்டியிட வேண்டும் என பிரதமர் மோடிக்கு அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார்.

திமுக அரசின் கபட நாடகம்.. டிடிவி தினகரன் விமர்சனம்

வாழ்வாதார பிரச்னைக்காக போராடும் விவசாயிகளை முதலமைச்சர் சந்திக்க மறுத்து அவர்களை கைது செய்திருப்பதன் மூலம், விவசாயிகள் மீதான திமுக அரசின் அக்கறை வெறும் கபட நாடகம் என்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது" என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.