மாநில உரிமைக் காப்பதில் தமிழக அரசு படுதோல்வி- அன்புமணி விமர்சனம்
ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி விவகாரத்தில் ஓராண்டு உறங்கி, கோட்டை விட்ட தமிழக அரசு மாநில உரிமைக் காப்பதில் படுதோல்வி அடைந்துள்ளதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி விவகாரத்தில் ஓராண்டு உறங்கி, கோட்டை விட்ட தமிழக அரசு மாநில உரிமைக் காப்பதில் படுதோல்வி அடைந்துள்ளதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
திமுக ஆட்சியில் இன்னும் எத்தனை கொலைகள், பாலியல் வன்கொடுமைகளை மக்கள் தாங்கிக்கொள்ள வேண்டுமோ என்று நினைக்கும்போதே நெஞ்சம் பதறுவதாக சீமான் வேதனை தெரிவித்துள்ளார்.
நாமக்கல் அருகே மூதாட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாகவும், மேற்கு மாவட்டங்களில் முதியவர்கள் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்டு வருவது காவல்துறையின் அலட்சியப் போக்கை வெளிப்படுத்துவதாகவும் டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.
சமீபத்தில் விருப்ப ஓய்வு பெற்ற முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரி அருண்ராஜூக்கு தவெகவில் கொள்கை பரப்புப் பொதுச் செயலாளர் (Propaganda & Policy General Secretary) பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதிமுக, திமுகவினை சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களும் தவெகவில் இன்று தங்களை இணைத்துக்கொண்டனர்.
தமிழரான ஜி.கே. மூப்பனார் பிரதமராவதை தடுத்து நிறுத்திய திமுகவுக்கு, பாஜகவை விமர்சிக்க எந்த உரிமையும் இல்லை என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் தெற்கு தொகுதியின் முன்னாள் அதிமுக எம்எல்ஏ குணசேகரன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார். அவரது மறைவினைத் தொடர்ந்து அதிமுக உறுப்பினர்கள், பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, சசிகலா ஆகியோர் தங்களது இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.
நாமக்கல் அருகே மூதாட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாகவும், பல்லடம் மூவர் கொலை, சிவகிரி இரட்டைக் கொலை சம்பவங்களுக்குப் பிறகும் திமுக அரசு இன்னும் திருந்தவில்லை என்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
சண்முக பாண்டியன் நடிப்பில் உருவாகியுள்ள 'படைத்தலைவன்' படத்தில் விஜயகாந்தை AI தொழில்நுட்பத்தில் நடிக்க வைத்திருப்பதாகவும் திரைப்படத்தை அனைவரும் பார்க்க வேண்டும் என்றும் பிரேமலதா விஜயகாந்த் கேட்டுக்கொண்டார்.
4 ஆண்டு கால திமுக ஆட்சியில் தமிழக மக்கள் நிம்மதியாக இல்லை என அண்ணாமலை தெரிவித்தார்.
2026ல் தேசிய ஜனநாயக கூட்டணி தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் என்றும் திமுகவை மக்கள் தூக்கி எறிவார்கள் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மதுரையில் பேசினார்.