K U M U D A M   N E W S

தமிழ்நாடு

https://magazine.kumudam.ai/api/v1/getUNNews?site=kumudamnews&limit=25&offset=475&order=created_at&category_id=3

காவல் நிலையத்தில் ரகளையில் ஈடுபட்ட ரவுடிகள்: தப்பிச்செல்ல முயன்றபோது கை, காலில் எலும்பு முறிவு!

சென்னையில் செல்போன் பறிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு, போலீசாரைத் தாக்கி காவல் நிலையத்தில் ரகளையில் ஈடுபட்ட இரண்டு ரவுடிகள், தப்பிச் செல்ல முயன்றபோது தடுக்கி விழுந்து கை, கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின்னர் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

போக்குவரத்து அபராத நிலுவைத்தொகைக்கு புதிய செக்! - இன்சூரன்ஸ் புதுப்பித்தால் மட்டுமே அபராதம் கட்ட முடியும்?

நிலுவையில் உள்ள அபராதங்களை வசூலிக்கப் புதிய நடைமுறையை செயல்படுத்த, போக்குவரத்து துறைக்குப் பரிந்துரை செய்யக் காவல்துறை திட்டமிட்டுள்ளது.

கடன் தொல்லை.. நகைக்கடைக்காரர்களை குறிவைத்து தொடர் திருட்டு.. 2 பேர் கைது!

நகைக் கடைக்காரர்களின் கவனத்தைத் திசைதிருப்பித் தங்க நகைகளைத் திருடி வந்த, டிப்-டாப் உடையணிந்த இரண்டு நபர்களை நுங்கம்பாக்கம் போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் சென்னையில் 20-க்கும் மேற்பட்ட கடைகளில் கைவரிசை காட்டியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

ரூ.26,000 கோடி முதலீடுகளுக்கு ஒப்பந்தம்.. நாம் படைத்த சாதனைகளை நாமே முறியடிக்கிறோம்- முதல்வர் ஸ்டாலின்

தொழில்துறையில் தமிழகம் படைத்த சாதனைகளை தமிழகமே முறியடித்து வருவதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

வாகன ஓட்டிகள் கவனத்திற்கு.. அபராதம் செலுத்தினால் மட்டுமே இன்ஸூரன்ஸ் புதுப்பிக்கலாம்!

வாகனங்களுக்கான அபராத நிலுவைத் தொகையை செலுத்தினால்தான், இன்சூரன்ஸ் புதுப்பிக்க முடியும் என்ற புதிய நடைமுறையை அமல்படுத்த சென்னை போக்குவரத்து காவல்துறை திட்டமிட்டுள்ளது.

பட்டியலின பெண் தற்கொலை.. காதலனை கைது செய்ய வலியுறுத்தி குடும்பத்தினர் சாலை மறியல்!

ஸ்ரீபெரும்புதூர் அருகே பட்டியலின பெண் ஒருவர், காதல் விவகாரத்தில் தற்கொலை செய்துகொண்ட நிலையில், காதலன் மற்றும் அவரது குடும்பத்தினரைக் கைது செய்ய வலியுறுத்தி, பெண்ணின் குடும்பத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Heavy Rain: தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு!

தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதிமுக தொண்டர்களை அசைக்க முடியாது; 2026-ல் எடப்பாடியார் ஆட்சி மலரும் - ஆர்.பி.உதயகுமார் பதிலடி

எடப்பாடியாரின் எழுச்சிப் பயணத்தைக் கண்டு வயிற்றெரிச்சல் கொண்டவர்கள் அதிமுகவிற்குப் பின்னடைவை ஏற்படுத்த நினைத்தால், அம்மாவின் ஆன்மாவும் தமிழக மக்களும் அவர்களுக்குத் தோல்வியைத் தான் தருவார்கள் என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் ஆவேசமாக பதிலடி கொடுத்துள்ளார்.

ஞாபக மறதியால் தவித்த மூதாட்டி: காவல்துறை உதவியால் குடும்பத்துடன் இணைப்பு!

சென்னையின் தெருவில் மீட்கப்பட்ட 80 வயது மூதாட்டி; காவல்துறை உதவியால் உத்திரமேரூர் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாப்பூரில் போதை மாத்திரைகள் விற்பனை: 2 இளைஞர்கள் கைது!

மயிலாப்பூர் பகுதியில் உடல் வலி நிவாரண மாத்திரைகளைச் சட்டவிரோத விற்பனைக்காக வைத்திருந்த 2 நபர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், 83 உடல் வலி நிவாரண மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

நிலம் வாங்கித் தருவதாகக் கூறி 3.71 கோடி ரூபாய் மோசடி! சகோதரிகள் கைது!

லட்சுமி கிளாசிக் ஹோம்ஸ் என்ற பெயரில் 26 பேரிடம் பணத்தை ஏமாற்றி மோசடி செய்த அந்நிறுவனத்தின் இயக்குநர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மோசடி வழக்கில் நடிகை கௌதமி காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்!

நம்பிக்கை மோசடி வழக்கு தொடர்பாக, பிரபல நடிகை கௌதமி இன்று காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

செல்போன் திருடர்கள் கைது.. ஆய்வாளர் அறை கண்ணாடியை உடைத்த ரவுடிகள்!

சென்னையில் செல்போன் பறிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட இரண்டு ரவுடிகள், காவல் நிலையத்திற்குள் சென்று ரகளை செய்து, போலீசாரைத் தாக்கியதுடன், காவல் ஆய்வாளர் அறையின் கண்ணாடியை உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் இரண்டு காவலர்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தெரு நாய்களைக் கருணைக் கொலை செய்ய வேண்டும்.. விலங்குகள் நல ஆர்வலர்கள் ஆவேசம்!

தெரு நாய்களைக் கருணைக் கொலை செய்ய வேண்டும் என்று பேசிய நபர் மீது விலங்கு வதை தடுப்புச் சட்டத்திற்கு எதிராகப் நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஏர்போர்ட் மூர்த்தி மீது குண்டர் சட்டம் பாய வேண்டும் - விசிக வழக்கறிஞர்கள் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்!

ஏர்போர்ட் மூர்த்தி மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் விசிக வழக்கறிஞர் பிரிவினர் புகார் அளித்துள்ளனர்.

போலி நம்பர் பிளேட் காரில் கஞ்சா கடத்தல்: 50 கிலோ கஞ்சாவுடன் 3 பேர் கைது!

விசாகப்பட்டினத்திலிருந்து சென்னைக்கு கஞ்சா கடத்திய வழக்கில் 3 பேர் கைதுசெய்யப்பட்ட நிலையில், தப்பியோடிய ஒரு நபரைப் போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர்.

சைபர் கிரைம் போலீசாரின் அதிரடி நடவடிக்கை.. 500-க்கும் மேற்பட்ட மோசடி இணையதளங்கள் முடக்கம்!

கடந்த மூன்று மாதங்களில் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட மோசடி இணையதளங்களிருந்து வந்த ஆபத்தான லிங்குகள் முடக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அடுத்த இரண்டு தினங்களுக்குக் கனமழை தொடரும்: தேனி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

தமிழகத்தில் அடுத்த இரண்டு தினங்களுக்குக் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் இபிஎஸ்தான்- துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!

"அ.தி.மு.க.வின் நிரந்தர பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி மட்டும்தான் இருக்க முடியும்" என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.

சேலம், ஈரோடு உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும்!

தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

காவலர்கள் மனுக்கள்: குறைகளை நிவர்த்தி செய்ய ஆணையர் உத்தரவு!

காவலர்களின் குடும்ப நலன் மற்றும் பணியிட குறைகளை சரி செய்ய, சென்னை காவல் ஆணையர் தலைமையில் நடைபெற்ற சிறப்பு முகாமில் 146 பேர் மனுக்களை அளித்தனர். மனுக்களைப் பெற்றுக்கொண்ட ஆணையர், அவற்றின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

சென்னை காவல்துறை: சிறப்பாகச் செயல்பட்ட காவல் அதிகாரிகளுக்குப் பாராட்டு!

பல்வேறு வழக்குகளில் சிறப்பாகப் பணியாற்றிய சென்னை காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு, சென்னை பெருநகர காவல் ஆணையர் ஆ. அருண், இ.கா.ப. வெகுமதி வழங்கிப் பாராட்டினார்.

வங்கி கணக்குகளை வாடகைக்கு விடாதீர்கள்.. சைபர் கிரைம் குறித்து தமிழக காவல்துறை கடும் எச்சரிக்கை!

இணையவழி மோசடிகளைத் தடுக்க, இந்திய தேசிய பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் (NPCI) ஒரு புதிய திட்டத்தை அமல்படுத்தியுள்ளது.

'படையாண்ட மாவீரா' திரைப்படம்: காடுவெட்டி குருவின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்ததன் பின்னணி..படக்குழுவினர் விளக்கம்!

காடுவெட்டி குருவின் வரலாற்றை ஆவணப்படுத்தியதன் பின்னணியில் இருந்த வலி, வேதனை மற்றும் கனவுகளைத் திரையுலகினர் முன்னிலையில் இயக்குநர் வெளிப்படுத்தினார்.

ரயிலில் பகிரங்கமாக விற்பனையாகும் குட்கா.. சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோ!

தமிழகத்தில் குட்கா மற்றும் போதைப்பொருட்களை ஒழிக்கக் காவல்துறையினர் பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், ரயிலில் ஒரு நபர் சர்வசாதாரணமாகக் குட்காவை விற்பனை செய்யும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.