K U M U D A M   N E W S

தமிழ்நாடு

https://magazine.kumudam.ai/api/v1/getUNNews?site=kumudamnews&limit=25&offset=450&order=created_at&category_id=3

திமுகவை யாராலும் அசைக்க முடியாது - தொண்டர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!

திராவிட முன்னேற்றக் கழகத்தின் 75வது ஆண்டு முப்பெரும் விழா 2025 செப்டம்பர் 17 அன்று கரூரில் நடைபெறும் நிலையில், திமுக தொண்டர்களுக்கு முதலைமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

தீவுத்திடல் கண்காட்சி வழக்கு: பார்க்கிங் நிலத்தில் இடையூறு செய்யக்கூடாது - உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு!

சென்னை தீவுத்திடலில் தாஜ்மகால் மெகா கண்காட்சிக்கான பாரக்கிங் நிலத்தில் இடையூறு செய்யக் கூடாது என தமிழ்நாடு அரசின் பொதுப்பணித் துறை, சென்னை மாநகராட்சி உள்ளிட்டோருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இரிடியம் மோசடி: மூளையாகச் செயல்பட்ட சாமிநாதன் கைது - போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்!

இரிடியம் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மூளையாக செயல்பட்ட சாமிநாதனிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஸ்பைஸ்ஜெட் விமானம்: சக்கரம் கழன்றதால் பரபரப்பு - மும்பையில் அவசரகால தரையிறக்கம்!

விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் சக்கரம் கழன்றதால் மும்பையில் 75 பேருடன் ஸ்பைஸ்ஜெட் விமானம் அவசரமாகத் தரையிறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

காவல் நிலையத்தில் போதையில் ரகளை: காவலர் பிரபு மீது உயர் அதிகாரிகள் விசாரணை!

காவல் ஆய்வாளர் மற்றும் சக போலீசாரை தரக்குறைவாகப் பேசியதாகக் குற்றச்சாட்டு; வீடியோ வெளியாகிப் பரபரப்பு!

கோவை அரசு மருத்துவமனை மீது சிகிச்சை அலட்சியம் புகார்: முதல்வர் தனிப்பிரிவுக்கு நோட்டீஸ் - மருத்துவமனை முதல்வர் விளக்கம்!

கோவை அரசு மருத்துவமனையில் தனது தந்தைக்கு உரிய சிகிச்சை அளிக்கவில்லை எனவும் கிரிஸ்டல் ஊழியர்கள் லஞ்சம் கேட்பதாக முதலமைச்சரின் தனிப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை புறநகர் ரயிலில் கல்லூரி மாணவர்கள் மோதல்: கற்களை எறிந்து தாக்குதல் நடத்திய விவகாரத்தில் ஒருவர் கைது!

கல்லூரி மாணவர்களிடையே நீண்ட காலமாக இருந்து வரும் 'ரூட்டு தல' பிரச்சனை, சென்னை புறநகர் ரயிலிலும் தொடர்கிறது. அரக்கோணத்திலிருந்து சென்னை கடற்கரை நோக்கிச் சென்ற ரயிலில் மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வடபழனி முருகன் கோவில் வழக்கு: பக்தரின் மனுமீது நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னை வடபழனி முருகன் கோவிலின் வாகன நிறுத்துமிடங்களில் திருமண மண்டபம் மற்றும் பணியாளர் குடியிருப்புகள் கட்டுவதற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி! பால் பண்ணை அமைக்க அண்ணாமலை திட்டம்!

தன்னைப்பற்றி பரவி வரும் தவறான தகவல்களுக்கு, தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார். தனது குடும்பத்தின் எதிர்காலத்திற்காகவும், தான் ஆர்வத்துடன் ஈடுபட்டு வரும் இயற்கை விவசாய முயற்சிகளை விரிவாக்கவும் சில விஷயங்களை மேற்கொண்டு வருவதாக அவர் கூறியுள்ளார்.

காஞ்சிபுரம் டிஎஸ்பி கைது விவகாரம்: மாவட்ட காவல்துறையை கண்டித்து வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்!

காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறையை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே காவலான் கேட் பகுதியில் காஞ்சிபுரம் மாவட்ட வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவையில் வீல் சேர் பிரச்சனைக்குத் தீர்வு.. சுகாதாரத்துறை அமைச்சர் உத்தரவு!

கோவையில் தனது மகனால் தோளில் தாங்கியபடி அழைத்துச் செல்லப்பட்ட முதியவரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு, ₹1.3 லட்சம் மதிப்பில் 10 வீல் சேர்கள் மற்றும் 10 ஸ்ட்ரெச்சர்கள் வாங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஈவெரா மணியம்மையார் சிலைக்கு மனுக்கொடுத்து தூய்மைப் பணியாளர்களின் நூதனப் போராட்டம்: சென்னை வேப்பேரியில் பரபரப்பு!

தனியார் மயமாக்கலுக்கு எதிர்ப்பு தெரிவித்து தூய்மைப் பணியாளர்கள் ஈவெரா மணியம்மையார் சிலைக்கு மனு கொடுத்து நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோயம்பேட்டில் அரசு பேருந்து திருட்டு.. நெல்லூரில் பிடிபட்ட ஒடிசா இளைஞர்!

கோயம்பேட்டில் நிறுத்தப்பட்டிருந்த அரசு பேருந்தை திருடி சென்ற காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத ஒடிசா இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

தமிழகம் முழுவதும் போத்தீஸ் கடைகளில் வருமான வரித்துறை அதிரடி சோதனை!

பிரபலமான போத்தீஸ் ஜவுளிக் கடைகள் மற்றும் அதன் உரிமையாளருக்கு சொந்தமான வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

வரலாற்றில் புதிய உச்சம்: தங்கம் விலை அதிரடி உயர்வு.. எவ்வளவு தெரியுமா?

சென்னையில் இன்று ஒரே நாளில் 22 காரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.720 அதிகரித்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

திருமணத்தை மீறிய உறவு: பொக்லைன் ஓட்டுநர் கொடூர கொலை.. நண்பர் கைது!

திருமணத்தை மீறிய உறவு விவகாரத்தில் நண்பனின் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Heavy Rain: கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அடுத்த இரு தினங்களுக்குக் கனமழை: சென்னைக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் அடுத்த இரண்டு தினங்களுக்கு டெல்டா மாவட்டங்கள் உட்பட வட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னை புறநகர் ரயில்களில் எச்சரிக்கை: விதிகளை மீறினால் தண்டனை!

புறநகர் ரயில்களில் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் பயணிகள் மீது கடும் நடவடிக்கை; விதிகளை மீறுவது தண்டனைக்குரிய குற்றம் எனத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

கனகசபை தரிசனம்: தீட்சிதர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனகசபை மீதேறி தரிசனம் செய்ய யார் யாருக்கு அனுமதி வழங்கப்படும் என்பது குறித்து மனுவாக தாக்கல் செய்ய பொது தீட்சிதர்கள் தரப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாஞ்சில் விஜயன் மீது பாலியல் புகார்: சர்ச்சைக்குப் பதிலளித்த நாஞ்சில் விஜயன், மரியா தம்பதியினர்!

நகைச்சுவை நடிகர் நாஞ்சில் விஜயன், திருநங்கை வைஷு என்பவர் அளித்த பாலியல் மற்றும் மோசடிப் புகார் தொடர்பாக, தன் மனைவி மரியாவுடன் இணைந்து வீடியோ ஒன்றை வெளியிட்டு கண்ணீர் மல்க விளக்கம் அளித்துள்ளனர்.

ட்ரம்ப் ஆதரவாளர் சார்லி கிர்க் சுட்டுக் கொலை - அமெரிக்கா அரசியலில் பரபரப்பு!

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் தீவிர ஆதரவாளரும், பழமைவாத அரசியல் ஆர்வலருமான சார்லி கிர்க், யூட்டா பல்கலைக்கழகத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றபோது சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அமெரிக்க அரசியலில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வங்கி மோசடி வழக்கு: 14 வருடங்களாகத் தேடப்பட்ட குற்றவாளி குவைத்தில் கைது!

சென்னை பாங்க் ஆஃப் பரோடாவில் ₹3.5 கோடி மோசடி செய்துவிட்டு, 14 வருடங்களாக வெளிநாட்டில் தலைமறைவாக இருந்த தேடப்படும் குற்றவாளி முனாவர் கான், சர்வதேச போலீசாரின் உதவியுடன் குவைத் நாட்டில் கைது செய்யப்பட்டு இந்தியா அழைத்து வரப்பட்டார்.

கோவையில் 7,000 சந்தேக நபர்களின் கைவிரல் ரேகை சேகரிப்பு..குற்றங்களைக் கட்டுப்படுத்தப் புதிய யுக்தி!

கோவை, மாநகர பகுதியில் சந்தேக நபர்கள் 7,000 பேரிடம் கையே விரல் ரேகை சேகரிக்கப்பட்டு உள்ளதாகக் காவல்துறை ஆணையர் சரவண சுந்தர் தெரிவித்துள்ளார்.

சென்னை மின்சார ரயில்: மதுபோதையில் ரகளை - வீடியோ வைரல்!

கும்மிடிப்பூண்டியிலிருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி வந்த மின்சார ரயிலில், மது அருந்தியபடி "ஜாலி" பயணம் செய்த இரண்டு வடமாநில இளைஞர்களை ரயில்வே பாதுகாப்புப் படையினர் மடக்கிப் பிடித்தனர். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில், ஒரு இளைஞர் கன்னத்தில் ஓங்கி அறையப்பட்டு ரயில்வே தண்டவாளத்தில் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.