K U M U D A M   N E W S

தமிழ்நாடு

https://magazine.kumudam.ai/api/v1/getUNNews?site=kumudamnews&limit=25&offset=2625&order=created_at&category_id=3

தவெகவின் அரசியல் ஆலோசகராகும் ஆதவ் அர்ஜுனா?

விடுதலை சிறுத்தைகள் கட்சியிலிருந்து விலகிய ஆதவ் அர்ஜுனா, தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் ஆலோசகராக செயல்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பக்ரூதின் வழக்குகளை விரைந்து விசாரிக்க காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு

போலீஸ் பக்ரூதின் மீது நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து விசாரித்து முடிக்க தமிழக காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புகார் வரும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்க தலைமை தயங்காது- விஜய் அதிரடி

கட்சி தலைமைக்கு மாவட்ட செயலாளர்கள் குறித்து புகார்கள் வரும் பட்சத்தில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தலைமை தயங்காது என விஜய் எச்சரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: உயர் நீதிமன்ற வளாகத்திற்கு பாதுகாப்பு அளிக்க உத்தரவு

சென்னை உயர் நீதிமன்ற வளாகத்திற்கு முழுமையான பாதுகாப்பு அளிக்க காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழக விவகாரம்: உத்தரவுப்படி விசாரணை நடத்த வேண்டும்- நீதிபதிகள்

அண்ணா பல்கலைக்கழக விவகாரம் தொடர்பாக ஏற்கனவே தான் பிறப்பித்த உத்தரவுபடிதான் விசாரணை நடத்தப்பட வேண்டும் என தெளிவுப்படுத்திய நீதிபதி காவல்துறை எல்லை மீறினால்  உச்ச நீதிமன்றத்தை அணுகுமாறு வலியுறுத்தினார்.

நிறைவேற்ற முடியாத நிபந்தனைகளை விதித்து ஜாமின் வழங்குவதில் பயன் இல்லை- நீதிமன்றம்

ஜாமின் வழங்கும் போது எளிதில் நிறைவேற்றக்கூடிய நிபந்தனைகளை விதிக்குமாறு விசாரணை நீதிமன்றங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. 

அதிக அளவில் நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க  வேண்டும்.. தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை..!

திருவாரூர் மாவட்டத்தில் போதிய நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் அறுவடை செய்த நெல்லை விவசாயிகள் விற்பனை செய்ய முடியாமல் பாதிக்கப்படுவதாகவும், போதிய கொள் முதல் நிலையங்கள் திறக்க வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு வேதனையுடன் கோரிக்கை வைத்துள்ளனர்.

Erode East By Election 2025: வாக்குப்பதிவு இயந்திரத்தில் சின்னம் பொருத்தும் பணி தீவிரம்!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ள வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணி தொடங்கியது.

ஈரோடு (கி) இடைத்தேர்தல் - மக்கள் ஏன் கொட்டகைக்கு செல்ல வேண்டும்? - தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் கேள்வி..?

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி தேர்தலில் செல்வாக்கான கட்சிகள் கொட்டகை அமைத்து வாக்காளர்களை தங்க வைப்பதை தடுக்கக் கோரிய வழக்கில், தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதி தற்கொலை - 4 காவலர்கள் சஸ்பெண்ட்..!

கோவை மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் 4 காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். கைதி தற்கொலை செய்து கொண்ட போது பணியில் கவனக்குறைவாக இருந்ததாக சிறை அதிகாரிகள் மீது துறை ரீதியில் நடவடிக்கை எடுத்துள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது. 

கருவை களைப்பது தொடர்பாக சம்பந்தப்பட்ட சிறுமி தான் முடிவெடுக்க வேண்டும் - உயர் நீதிமன்றம்

மைனராக இருந்தாலும், கருவை களைப்பது தொடர்பாக சம்பந்தப்பட்ட சிறுமி தான் முடிவு செய்ய வேண்டும் என தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், அச்சிறுமியின் 24 வார சிசுவை களைக்க அனுமதி அளிக்க உத்தரவிட்டுள்ளது.

ASER கல்வி அறிக்கை: பின்தங்கிய நிலையில் தமிழக  அரசு பள்ளி மாணவர்கள்.. புள்ளி விவரங்கள் வெளியீடு..!

எழுத்துக்களை வாசிப்பதிலும், கண்டறிவதிலும் தமிழக  அரசு பள்ளி மாணவர்கள் தினறுவதாகவும், மேலும் கணித வகுத்தலிலும் பின் தங்கிய நிலை காணப்படுவதாக 2024 ஆம் ஆண்டுக்கான ASER கல்வி அறிக்கையின் புள்ளி விவரங்கள் தெரிவித்துள்ளது.

பெண்களுக்கு எதிரான குற்றத்தில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை.. சட்டம் அமலுக்கு வந்தது

பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை வழங்கும் சட்டம் கடந்த 25-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்ததாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. 

மகப்பேறு சிகிச்சைக்கு சென்ற பெண்ணின் வயிற்றில் பேண்டேஜ்.. 13 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

மகப்பேறு அறுவை சிகிச்சைக்கு பின் வயிற்றில் பேண்டேஜை வைத்து தைத்ததால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 13 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கும்படி தனியார் மருத்துவமனைக்கும், சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கும் சென்னை நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடல் ஆமைகள் உயிரிழப்பு.. என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது..?  பசுமை தீர்ப்பாயம் கேள்வி

ஆமைகள் உயிரிழப்பிற்குக் காரணமான இழுவை மடிவலைகளைப் பயன்படுத்தியதாக எத்தனை மீன்பிடி கப்பல்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது என தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பிய தென்மண்டல பசுமை தீர்ப்பாயம், இதுகுறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது. 

சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் மீதான வழக்கு.. புலன் விசாரணை தொடக்கம்

சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் மீதான வழக்கின் விசாரணையின் தடை நீக்கப்பட்டதை அடுத்து மீண்டும் புலன் விசாரணை துவங்கியுள்ளதாக  காவல்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

பஞ்சாப் கபடி போட்டி விவகாரம்.. சென்னை வந்தடைந்த வீராங்கனைகள்

பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற கபடி போட்டியின் போது தாக்குதலுக்கு உள்ளான தமிழக வீராங்கனைகள் இன்று சென்னை திரும்பினர்.

மயிலாடுதுறையில் என்.ஐ.ஏ சோதனை நிறைவு.. முக்கிய ஆவணங்கள் பறிமுதல்..!

மயிலாடுதுறையில் காலை முதல் நடைபெற்று வந்த தேசிய புலனாய்வு முகமை சோதனை நிறைவடைந்த நிலையில், செல்போன்கள், லேப்டாப் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்ட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Breaking Bad பாணியில் மெத்தபெட்டமைன் விற்பனை -3 பேர் கைது

சென்னை ராயப்பேட்டையில் மெத்தபெட்டமைன் விற்பனையில் ஈடுபட்ட இரண்டு பொறியாளர்கள் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஐஎஸ்ஐஎஸ்ஐ தீவிரவாத அமைப்புக்கு ஆள்சேர்த்த நபர்... என்ஐஏ அதிகாரிகளால் கைது..!

தீவிரவாத அமைப்பிற்கு மூளைச் சலவை செய்து இளைஞர்களை சேர்க்க முயன்ற தமிழ்நாடு பிரிவின் தலைவரான  அல்பாசித்தை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இதனைத்தொடர்ந்து தமிழகத்தில் 16 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

"அடிப்படை வசதிகள் இல்லை" - பெரியார் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரியின் வாயில் முன் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை விவகாரம்... மீண்டும் சிறையில் அடைக்கப்பட்ட ஞானசேகரன்..!

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் கைதுசெய்யப்பட்ட குற்றவாளி ஞானசேகரன் போலீசாரின் விசாரணைக்கு பின்ன்னர், மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

டிஜிட்டல் அரஸ்ட் மோசடி... மூளையாக செயல்பட்ட 2 பேர் கைது..!

டிஜிட்டல் அரஸ்ட் மோசடியில் மூளையாக செயல்பட்ட இரண்டு பேரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். சென்னை காவல்துறை வழக்கை அடிப்படையாகக் கொண்டு அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

அண்ணா பல்கலைக்கழக வழக்கு.. ஞானசேகரனை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு

சைதாப்பேட்டை  9-வது நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர்படுத்தப்பட்ட குற்றவாளி ஞானசேகரனை பிப்ரவரி 7-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை: தமிழ்நாட்டில் பல ரூபங்களில் சார்கள்- எடப்பாடி கண்டனம்

சென்னையில் மாணவிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் தமிழ்நாட்டில் பல "SIR"கள், பல ரூபங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை நிகழ்த்தி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.