K U M U D A M   N E W S

தமிழ்நாடு

பெண்ணின் காதை கடித்த 4 பாக்ஸர் நாய்கள்.. அலட்சியத்தில் உரிமையாளர்.. பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார்!

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில், வீட்டு வேலை செய்யும் பெண்ணை நான்கு 'பாக்ஸர்' வகை நாய்கள் கடித்ததில், அவரது காது கிழிந்ததுடன், பலத்த காயங்களும் ஏற்பட்டன. நாய்களை அதன் உரிமையாளர் கண்டுகொள்ளவில்லை என உஷா வேதனையுடன் புகார் அளித்த நிலையில், அபிராமபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம்; 50 சவரன் வரதட்சணை கேட்டு மிரட்டல்; திருமங்கலம் போலீசார் நடவடிக்கை!

இன்ஸ்டாகிராம் மூலம் பழகி, திருமணம் செய்ய உறுதியளித்த இளைஞர் ஆதித்யன், நிச்சயத்திற்குப் பிறகு 50 சவரன் தங்க நகைகள் வரதட்சணையாகக் கேட்டுத் திருமணம் செய்ய மறுத்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசார் ஆதித்யனைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தங்கம் விலை 'திடீர்' சரிவு: ஒரே நாளில் சவரனுக்கு ₹880 குறைந்து ₹86,720-க்கு விற்பனை!

வரலாறு காணாத உச்சத்தில் இருந்த தங்கத்தின் விலை, இன்று (அக். 3) ஒரே நாளில் சவரனுக்கு ₹880 வரை குறைந்து, ₹86,720-க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலையும் கிலோவுக்கு ₹3,000 குறைந்துள்ளது. இது நகை வாங்குவோருக்கும் முதலீட்டாளர்களுக்கும் சற்று ஆறுதல் அளித்துள்ளது.

ரோகிணி திரையரங்கில் நடந்த சலசலப்பு.. யூடியூபருக்குக் கொலை மிரட்டல் விடுத்த தவெக தொண்டர் கைது!

ரோஹிணி திரையரங்கில், கரூர் விபத்து குறித்துப் பேசிய யூடியூப்பருக்குக் கொலை மிரட்டல் விடுத்த தவெக தொண்டரான கோகுல் என்பவரைச் சிஎம்பிடி போலீசார் கைது செய்துள்ளனர்.

வடசென்னைப் பிரபல ரவுடி நாகேந்திரன் உடல்நிலை மோசம்: ஸ்டான்லி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!

வடசென்னையின் பிரபல தாதாவும், ஆயுள் தண்டனைக் கைதியுமான நாகேந்திரன் (ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு A1) கல்லீரல் பாதிப்பு காரணமாக உடல்நிலை மோசமடைந்துள்ளது. அவர் தற்போதுச் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையின் சிறைக் கைதிகள் வார்டில் தீவிர சிகிச்சைப் பெற்று வருகிறார்.

சென்னையில் பரபரப்பு.. முதலமைச்சர் ஸ்டாலின், நடிகை த்ரிஷா உட்படப் பலரின் இல்லங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

சென்னை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இல்லம், கிண்டி ஆளுநர் மாளிகை, நடிகை த்ரிஷா மற்றும் எஸ்.வி. சேகர் ஆகியோரின் வீடுகளுக்கு ஒரே நேரத்தில் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

காலையில் குறைந்த தங்கம் விலை.. மாலையில் மீண்டும் உயர்வு.. எவ்வளவு தெரியுமா?

தங்கம் விலை இன்று காலை குறைந்திருந்த நிலையில், மாலை மீண்டும் ஏற்றம் கண்டுள்ளது.

விஜய்க்கு எதிராகப் போஸ்டர் ஒட்டிய இளைஞர் தற்கொலை: த.வெ.க. நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு!

கரூர் கூட்ட நெரிசலைக் கண்டித்து போஸ்டர் ஒட்டிய நாகப்பட்டினத்தைச் சேர்ந்த பரத்வாஜ் என்பவர் தற்கொலை செய்துகொண்டார். தன்னை மிரட்டிய திவாகர் உள்ளிட்ட 4 தவெக நிர்வாகிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கொட்டித் தீர்க்கப்போகும் கனமழை.. 3 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

தமிழகத்தில் இன்று 3 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் சோகம்: வீட்டு உரிமையாளர் இறுதிச் சடங்கின்போது மின்சாரம் தாக்கி ஆந்திரத் தொழிலாளி உயிரிழப்பு!

சென்னை முகப்பேரில், வீட்டு உரிமையாளர் இறுதிச் சடங்கின்போது, மின்சார இணைப்புப் பணியில் இருந்த ஆந்திர மாநிலத் தொழிலாளி நாராயணன் (40), மதுபோதையில் மின்சார ஜங்ஷன் பாக்சை தொட்டதால் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.