K U M U D A M   N E W S
Advertisement

அரசியல்

கரூர் துயரம்.. முன்ஜாமின் கோரி என்.ஆனந்த், நிர்மல் குமார் மனு தாக்கல்!

கரூர் துயரச் சம்பவ வழக்கில் தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், துணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார் ஆகியோர் முன் ஜாமின் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

செங்கோட்டையன் ஆதரவாளர்கள் 40 பேர் நீக்கம்.. அதிமுக-வில் உச்சக்கட்ட பரபரப்பு!

ஈரோடு அதிமுக புறநகர் மேற்கு மாவட்டத்தில் செங்கோட்டையனின் ஆதரவாளர்களான 40 பேரை பொறுப்புகளில் இருந்து விடுவித்து பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

வன்முறையைத் தூண்டும் கருத்து: வெளியான சில நிமிடங்களில் ஆதவ் அர்ஜுனா பதிவு நீக்கம்!

கரூர் சம்பவம் தொடர்பாக திமுக அரசை விமர்சித்து ஆதவ் அர்ஜுனா வெளியிட்ட பதிவு சில நிமிடங்களில் நீக்கப்பட்டது. இருப்பினும் அந்தப் பதிவின் ஸ்கிரீன் ஷாட்கள் தொடர்ந்து வைரலாகி வருகிறது.

கரூர் பெருந்துயரம்: தவெக கரூர் மா.செ. கைது.. "சிறு கீறல் ஏற்பட்டாலும் போலீஸ்தான் பொறுப்பு"- மனைவி கண்ணீர் பேட்டி!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கரூர் விவகாரம்.. மலிவான அரசியல் செய்வதை தவிர்க்க வேண்டும்- செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்!

"கரூர் விவகாரத்தில் அரசியல் தலைவர்கள் மலிவான அரசியல் செய்வதை தவிர்க்க வேண்டும்" என்று செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார்.

"துணிவு இல்லாத விஜய்க்கு அரசியல் எதற்கு?"- ஆளூர் ஷா நவாஸ் கடும் விமர்சனம்!

"துணிவு சிறுதும் இல்லாத விஜய்க்கு எதற்கு அரசியல்?" என்று விசிக துணை பொதுச்செயலாளர் ஆளூர் ஷா நவாஸ் கடுமையாக விமர்சித்துள்ளார்.

கரூர் பெருந்துயரம்.. நீதிபதியிடம் தவெக முறையீடு; விஜய் நேரில் செல்வாரா? - மௌனம் காத்த நிர்மல்குமார்!

கரூர் சம்பவம் தொடர்பாக தவெகவினர் நீதிபதி எம்.தண்டபாணியை சந்தித்து முறையிட்டுள்ளனர்.

"பிணங்களின் மீது அரசியல் செய்யாதீர்".. இபிஎஸ்-க்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலடி!

"மக்களின் மனங்களின் மீது அரசியல் செய்யுங்கள். பிணங்களின் மீது அல்ல" என்று எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலடி கொடுத்துள்ளார்.

கரூர் பெருந்துயரம்.. விஜய்யின் மக்கள் சந்திப்புப் பயணம் தற்காலிக ரத்து?

கரூர் துயர சம்பவத்தைத் தொடர்ந்து, விஜய் தனது பிரசார பயணத்தை தற்காலிகமாக ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

'இதயமும் மனதும் கனத்துப் போயிருக்கிறது'.. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதியுதவி- விஜய் அறிவிப்பு!

கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்த துயரச் சம்பவத்தையடுத்து, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என விஜய் அறிவித்துள்ளார்.