K U M U D A M   N E W S

இறுதிக்கட்டத்தை நெருங்கிய பணிகள்.. மாநாடு வேலை மும்முரம்

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே வரும் 27ம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு நடைபெற உள்ளது. இதற்கான இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

வீடுகளுக்குள் புகுந்த வெள்ள நீர்.. சேலத்தில் மக்கள் அவதி

சேலம் மேட்டூர் அருகே தூக்கனாம்பட்டி பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. அத்தியாவசிய பொருட்கள் நீரில் மூழ்கியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

கொட்டித் தீர்த்த கனமழை.. ஜவ்வாதுமலையில் நிலச்சரிவு.. போக்குவரத்து பாதிப்பு

திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாதுமலை, புதூர்நாடு பகுதியில் நேற்று இரவு பெய்த கனமழையால் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் கிராம மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

முடங்கிய பெங்களூர்.. பேய் ஆட்டம் ஆடிய மழை

பெங்களூருவில் கொட்டித் தீர்த்த கனமழையால் இருசக்கர வாகனங்கள், கார்கள் மழைநீரில் மூழ்கின. குடியிருப்புகள், சாலைகள் என அனைத்து பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்கள் அவதியடைந்தனர். 

சாலையில் பெருக்கெடுத்த வெள்ளம்... வாகன ஓட்டிகள் அவதி

ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அதிகாலை முதலே பெய்த கனமழையால் மழைநீர் சாலைகளில் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.

கொடைக்கானலில் கொட்டி தீர்க்கும் கனமழை.. அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் எலிவால் அருவி, பாம்பார்புரம் அருவி, வட்டக்கானல் அருவி, பேரி பால்ஸ் அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

அருந்ததியர் இடஒதுக்கீடு - திருமாவளவன் Vs L.முருகன்

அருந்ததியர் இடஒதுக்கீடு - திருமாவளவன் Vs L.முருகன்

TVK Maanadu: NO ENTRY சொன்ன தவெகவினர்.. கிளம்பிய எதிர்ப்பு.. தடுப்புகள் அகற்றம்

விழுப்புரம் வி.சாலையில் த.வெ.க மாநாடு நடைபெற உள்ள இடத்தில் அமைக்கப்பட்டிருந்த தடுப்புகள் அகற்றம்

குளம்போல் தேங்கிய மழைநீர்... "கால் வைக்கவே முடியல.." மதுரையில் கடுப்பான மக்கள்

கனமழையால் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை சுற்றி வெள்ள நீர் குளம் போல் தேங்கியது. இன்று நடைபெற்ற குறைதீர் கூட்ட முகாமிற்கு மனு அளிக்க வந்த பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

“திராவிடர்கள் என்பது மரபினம்; தமிழர்கள் என்பது தேசிய இனம்” - சீமானுக்கு பதிலடி கொடுத்த திருமாவளவன்!

சீமானுக்கு திராவிட அரசியல் மீது ஒரு எதிர்ப்புணர்ச்சி இருக்கிறது என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.