K U M U D A M   N E W S

சிரியாவில் துயர சம்பவம்.. தேவாலயத்தில் குண்டுவெடிப்பு..!

சிரியாவில் தேவாலயத்திற்குள் மக்களோடு மக்களாக இருந்த மர்ம நபர் தற்கொலை குண்டுவெடிப்பை நிகழ்த்தியுள்ளார்.

வேறு சாதியில் திருமணம்.. 40 பேருக்கு மொட்டை அடித்த கொடூரம்

ஒடிசாவில் பெண் ஒருவர் வேறு சாதியைச் சேர்ந்தவரை திருமணம் செய்ததால், அவரது குடும்பத்தினர் 40 பேருக்கு சடங்கு என்ற பெயரில் மொட்டை அடித்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

“என் நெஞ்சில் குடியிருக்கும்”... சாதனை படைத்த ஜனநாயகன் திரைப்படத்தின் FIRST ROAR!

தமிழ் சினிமாவின் நட்சத்திர நடிகரும், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜய் தனது 51வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவரின் பிறந்த நாளை முன்னிட்டு அவரின் கடைசித் திரைப்படமான ஜனநாயகன் அடுத்த ஆண்டு ஜனவரி 9-ம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.

பேருந்துகள் வாங்க ஒதுக்கப்படும் நிதி எங்கே? டிடிவி தினகரன் கேள்வி

அரசு பேருந்து விபத்துகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், புதிய பேருந்துகள் வாங்க ஒதுக்கப்படும் நிதி எங்கே செல்கிறது என்ற கேள்வி எழுவதாகவும் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தமிழ்நாட்டில் நடமாட முடியாது.. ஆர்.பி.உதயகுமார் எச்சரிக்கை

எடப்பாடி பழனிசாமியை இழிவுப்படுத்தும் செயலில் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தொடர்ந்து ஈடுபட்டால், அவரால் தமிழ்நாட்டில் நடமாட முடியாது" என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எச்சரித்துள்ளார்.

காதல் ஆசை காட்டிய துணை நடிகை.. லட்சங்களை இழந்த ஐடி வாலிபர்

காதலித்து திருமணம் செய்து கொள்வதாக கூறி லட்சக்கணக்கில் பணம் மோசடி செய்ததாக துணை நடிகை மீது காதலன் காவல்துறை டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

மோசடி கும்பலிடம் சிக்கிய மேற்கு வங்க நபர்.. காப்பாற்றிய தமிழக சைபர் கிரைம் போலீசார்!

சீனர்கள் கட்டுப்பாட்டில் உள்ள வங்கி கணக்குகளை ஆய்வு செய்த போது, மோசடி கும்பலிடம் சிக்கிய மேற்கு வங்கத்தை சேர்ந்தவரை தமிழக சைபர் கிரைம் போலீசார் காப்பாற்றியுள்ளனர்.

பீகாரிலிருந்து கினி நாட்டுக்கு ரயில் என்ஜின் ஏற்றுமதி – தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி

பீகாரில் இருந்து கினி நாட்டுக்கு ரயில் என்ஜின் ஏற்றுமதியை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார். ஒடிசாவில் 18,600 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப் பணிகளும் இன்று தொடங்குகிறது.

ஈரான் சரணடைய வேண்டும் .. அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை..!

ஈரானில் உள்ள ஃபோர்டோ யுரேனியம் செறிவூட்டும் மையத்தை தாக்கும் ஒப்பந்தத்திற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரைன் குடியிருப்புப் பகுதியில் ரஷ்யா தாக்குதல்.. 14 பேர் உயிரிழப்பு..!

உக்ரைன் மீது ரஷ்யா மீண்டும் வான்வழி தாக்குதல் நடத்தியதில், உக்ரனை சேர்ந்த 14 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். உக்ரைன் தலைநகர் கீவ்-ல் வானுயர கட்டடத்தின் மீது இரவு நேரத்தில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் 44-க்கும் மேற்பட்டோர் காயம் என முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.