K U M U D A M   N E W S

அவர்கள் மீது நம்பிக்கை இல்லை - விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடாதது குறித்து பிரேமலதா விளக்கம்

தேர்தல் ஆணையத்தின் மீது நம்பிக்கை இல்லை அதனால் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தேமுதிக தொண்டர்கள் வாக்களிக்காமல் புறக்கணிப்பார்கள் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.

நில மோசடி வழக்கு: முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமீன் மனு தள்ளுபடி

நில மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் 2வது முறையாக முன் ஜாமீன் கேட்டு விண்ணப்பித்த மனுவை தள்ளுபடி செய்து மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அம்பானி இல்ல திருமண விழாவில் டி20 உலகக்கோப்பை சாம்பியன்களுக்கு கெளரவம்... வாழ்த்து மழை பொழிந்த பிரபலங்கள்!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி மனைவி சாக்ஷியுடன் நிகழ்ச்சியில் பங்கேற்றார். இது தவிர டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா ஆகியோரும் ஆனந்த் அம்பானி-ராதிகா மெர்ச்சன்ட் சங்கீத் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

BSP மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை… முதலமைச்சர் ஸ்டாலினை கடுமையாக சாடிய எடப்பாடி, அண்ணாமலை

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

This Week OTT Release: கருடன், மிர்ஸாபூர் சீசன் 3... இந்த வாரம் ஓடிடி ரிலீஸ் லிஸ்ட் இதோ!

சூரியின் கருடன், மோகன் நடித்துள்ள ஹரா ஆகிய படங்கள் இந்த வாரம் (ஜூலை 5) ஓடிடியில் வெளியாகின்றன. இதனுடன் மிர்சாபூர் சீசன் 3 உள்ளிட்ட சில முக்கியமான வெப் சீரிஸ்களும் இந்த வாரம் ஓடிடி ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளன.

பிரதமர் மோடியை சந்தித்த இந்திய கிரிக்கெட் வீரர்கள்... தடபுடல் விருந்துடன் அடுத்த கொண்டாட்டம் ஆரம்பம்

டி20 உலகக் கோப்பை வென்ற இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் தனி விமானத்தில் டெல்லி திரும்பியதை அடுத்து, பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.

இந்தியா வந்தடைந்த டி20 சாம்பியன்ஸ்... கேக் வெட்டி, ஆட்டம் போட்ட ரோஹித் ஷர்மா!

டி20 உலகக் கோப்பை வென்ற இந்திய கிரிக்கெட் அணி, தனி விமானத்தில் டெல்லி வந்தடைந்தது.

மணிப்பூர்… மணிப்பூர்.. என முழங்கிய எதிர்க் கட்சியினர்… தொடர்ந்து உரை நிகழ்த்திய பிரதமர் மோடி!

மக்களவையில் எதிர்க் கட்சியினரின் தொடர் முழுக்கங்களுக்கு இடையே பிரதமர் மோடி உரை நிகழ்த்தினார்.

'மோடியின் உலகத்தில் உண்மையை அகற்றலாம்... ஆனால் நிஜ உலகில்...?'... ராகுல் காந்தி அதிரடி!

மக்களவையில் ராகுல் காந்தி பேசிய சில கருத்துகள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக ராகுல் காந்தியின் இந்து மதம் குறித்த பேச்சு அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

புதிய சட்டங்கள் மூலம் அப்பட்டமான இந்தி திணிப்பு... பாஜகவை கடுமையாக சாடிய எடப்பாடி பழனிசாமி!

''அனைத்து மாநிலங்களுக்கும் பொது மொழியான ஆங்கிலத்தில் இருந்த சட்டத்தின் பெயர்களை இந்தியில் மாற்றியிருப்பது அப்பட்டமான இந்தி திணிப்பு. இது பல மொழிகள் - பல கலாச்சாரங்கள் சங்கமித்திற்கும் நமது தேசத்தின் அடிப்படை நீதிக்கும் அரசியலமைப்பு விழுமியங்களுக்கும் எதிரானது''