K U M U D A M   N E W S

தமிழ்நாடு

https://magazine.kumudam.ai/api/v1/getUNNews?site=kumudamnews&limit=25&offset=1925&order=created_at&category_id=3

கவுன்சிலர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்ட வழக்கு.. தமிழக அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

பதவி நீக்கம் செய்யப்பட்ட சென்னை மாநகராட்சி கவுன்சிலர்கள், உசிலம்பட்டி நகராட்சி தலைவர் ஆகியோர் தாக்கல் செய்த வழக்கில், ஏப்ரல் 21 ஆம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தர்பூசணி விவசாயிகளுக்காக சீமந்த விழாவில் அரங்கேறிய நெகிழ்ச்சி சம்பவம்!

ஜெயங்கொண்டம் அருகே தர்பூசணி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சீமந்த விழாவில் 700 பேருக்கு தர்பூசணி வழங்கி, விவசாயத்தை ஊக்குவித்த மருத்துவ தம்பதிகளின் செயலால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பதாகை ஏந்திய அதிமுக உறுப்பினர்கள்... சஸ்பெண்ட் உத்தரவை திரும்ப பெற்ற சபாநாயகர்!

சட்டப்பேரவையில் பதாகை ஏந்தியதாக அதிமுக உறுப்பினர்கள், கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் முதலமைச்சரின் கோரிக்கையை ஏற்று அந்த உத்தரவை சபாநாயகர் திரும்பப் பெற்றார்.

யானை வேட்டையாடியதாக விசாரணைக்கு சென்றவர் மர்ம மரணம்- அவசர வழக்காக இன்று விசாரணை!

தருமபுரியில் யானை வேட்டையாடியதாக சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணைக்கு அழைத்து சென்ற நபர் மர்ம மரணம் தொடர்பாக மறு பிரேத பரிசோதனை செய்ய கோரி முறையீடு அவசர வழக்காக இன்று பிற்பகல் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினர்கள் ஒரு நாள் சஸ்பெண்ட் - சபாநாயகர் அப்பாவு

சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி பேச அனுமதி மறுத்ததை எதிர்த்து அமளியில் ஈடுபட்ட அதிமுக உறுப்பினர்களை ஒரு நாள் சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார். சஸ்பெண்ட் செய்யப்பட்டதை அடுத்து பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

தொடர் சரிவில் தங்கம் விலை...இன்றைய விலை நிலவரம்

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு இன்று ரூ.200 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.

திருச்சி, கோவை என அடுத்தடுத்து தொடரும் ED RAID.. கே.என்.நேரு மற்றும் அவரது சகோதரர் வீட்டிலும் சோதனை!

திருச்சியில் உள்ள அமைச்சர் கே.என். நேரு மற்றும் கோவையில் மசக்காளிபாளையம் பகுதியில் உள்ள அவரது சகோதரர் மணிவண்ணன் இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

அமைச்சர் கே.என். நேருவின் மகன் மற்றும் அவரது சகோதரருக்கு சொந்தமான நிறுனங்களில் ED சோதனை!

சென்னையில் அமைச்சர் கே.என். நேரு மகன் அருண் மற்றும் அவரது சகோதரர் கே.என். ரவிசந்திரனுக்கு சொந்தமான கட்டுமான நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

தண்ணீரில் மிதந்த 5 மாத குழந்தையின் உடல்.. முன்னுக்கு பின் முரணாக பதில் சொன்ன தாய்

தண்ணீர் பேரலில் குழந்தையின் உடல் மிதந்த சம்பவத்தில் தாய் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததால் போலீஸார் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ராமநாதசுவாமி கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி சாமி தரிசனம்

பாம்பன் பாலத்தை திறந்து வைத்த பிரதமர் நரேந்திர மோடி, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் சாமி தரிசனம் மேற்கொண்டார்.

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3° செல்சியஸ் குறைந்துள்ளது.

உதகை மக்களை பார்த்து பொறாமை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

இளைஞர்களின் வேலை வாய்ப்பிற்காக நீலகிரியில் மினி டைடல் பார்க் வர உள்ளது.

“உடம்பெல்லாம் காயம்...” வாய் பேச முடியாத மகளிடம் அத்துமீறிய காமுகன்

வாய் பேச முடியாத பெண்ணிடம் அத்துமீறிய தந்தை குறித்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காமல் மகளிர் காவல் ஆய்வாளர் அலைக்கழிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

திருவண்ணாமலையில் குவிந்த பக்தர்கள்...நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம்

ராமநவமி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம்

தமிழர்களுக்கு பெருமை சேர்த்தவர் மோடி-மதுரை ஆதினம் வீடியோ வெளியிட்டு புகழாரம்

பிரதமர் நரேந்திர மோடி இலங்கைத் தமிழர்களுக்கு தனி நாடு அமைத்துக் கொடுக்க வேண்டும்

வடமாநில சிறுமி தற்கொலையில் திடீர் திருப்பம் – காதலேன கழுத்தை நெறித்து கொலை செய்தது அம்பலம்

சிறுமியை காதலனே கழுத்தை நெறித்து கொலை செய்த வழக்கில் மேலும் ஒருவர் கைது; தப்பியோடிய நபருக்கு வலை

உலக அளவில் புகழ்பெற்றது...350 டன் எடை...பிரமிக்க வைக்கும் திருவாரூர் ஆழித்தேர்

ஆழித்தேரோட்ட விழாவில் மொத்தமாக ஆழித்தேரையும் சேர்ந்து ஸ்ரீவிநாயகர், ஸ்ரீசுப்பிரமணியர், அம்பாள், சண்டிகேஸ்வரர் என 5 தேர்கள் ஆலய வீதிகளில் வரும் ஏப்ரல் 7ம் தேதி வலம் வர உள்ளன.

கோகுலம் சிட் ஃபண்ட்சில் ஒன்றரை கோடி பறிமுதல் – விதிகள் மீறியதாக ED குற்றச்சாட்டு

வெளிநாட்டில் இருந்து சுமார் 492 கோடி ஆர்பிஐ விதிகள் மீறி சந்தா வசூல் செய்ததாக ஸ்ரீ கோகுலம் சீட்ஸ் அண்ட் ஃபைனான்ஸ் நிறுவனம் மீது அமலாக்கத்துறை குற்றச்சாட்டு

அண்ணா பல்கலைக்கழக வன்கொடுமை வழக்கு.. ஆதாரம் இல்லாததால் வழக்கிலிருந்து விடுவிக்க மனுத்தாக்கல்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் தனக்கு எதிராக கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தவறானது எனவும், ஆதாரங்கள் இல்லாமல் தனக்கு எதிராக குற்றச்சாட்டுகளை காவல்துறை கூறியுள்ளதாக தெரிவித்து, வழக்கிலிருந்து தன்னை விடுவிக்க கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை - ஜி.கே. வாசன் குற்றச்சாட்டு

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளது. அதே நேரத்தில், கொலை கொள்ளை பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. நீட் தேர்வு பிரச்சினையை பொறுத்தவரை, திமுக அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே. வாசன் குற்றம் சாட்டியுள்ளார்.

கச்சத்தீவு விவகாரத்தில் திமுக, காங்கிரஸ் கட்சிக்கு சம்பந்தம் இல்லை - டி.ஆர். பாலு எம்.பி. பேச்சு

கச்சத்தீவு விவகாரத்தில் திமுகவிற்கும், காங்கிரஸ் கட்சிக்கும் சம்பந்தம் இல்லை என்றும், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மகா புத்திசாலி அவரது பேச்சுக்கெல்லாம் பதில் சொல்லும் அளவிற்கு இல்லை, நாங்கள் எல்லாம் சாதாரணமானவர்கள் என்று நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு தெரிவித்துள்ளார்.

எம்புரான் தயாரிப்பாளர் கோகுலம் சிட் பண்ட்ஸ் நிறுவனத்தில் ரூ.1.5 கோடி பறிமுதல்!

எம்புரான் திரைப்படத்தை வெளியிட்ட கோகுலம் சிட் பண்ட்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தினர். தொடர்ந்து, மலையாள நடிகர் பிருத்விராஜ் எம்புரான் படத்திற்க்கு முன் நடித்த சில படங்களில் பெற்ற வருமானங்கள் குறித்து விளக்கமளிக்குமாறு வருமான வரித்துறையினர் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.

கனிமவள முறைகேடு: தமிழகத்தில் 15 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை!

கனிமவள முறைகேடு தொடர்பாக தமிழகத்தில் 15 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் இன்று காலையில் இருந்து சோதனை நடத்தி வருகின்றனர். ரூ. 5832 கோடி அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

“கூடா நட்பு கேடாய் முடியும்” –விருதுநகரில் பாஜக போஸ்டரால் பரபரப்பு

கூடா நட்பு கேடாய் முடியும்.. வேண்டும் மீண்டும் அண்ணாமலை.. என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டரை பாஜக நிர்வாகி ஒட்டியுள்ளதால் விருதுநகரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு...9 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் அரசு தரப்பு சாட்சி விசாரணை நடைபெற்று முடிந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்ட 9 பேரும் கோவை மகளிர் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர்