K U M U D A M   N E W S

தமிழ்நாடு

விதிகளை பின்பற்றியே அரசு பணி நியமனம்... தலைமைச் செயலாளர் பிரமாண பத்திரம் தாக்கல் செய்வாரா? என தமிழக அரசுக்கு நீதிமன்றம் கேள்வி..!

எதிர்காலத்தில் அரசு துறைகளில் விதிகளை பின்பற்றியே பணி நியமனங்கள் மேற்கொள்ளப்படும் என தமிழக தலைமைச் செயலாளர் பிரமாண பத்திரம் தாக்கல் செய்வாரா என்பது குறித்து பதில் அளிக்கும்படி தமிழக அரசுத்தரப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஞானசேகரனிடம் தடயவியல் துறை அலுவலகத்தில் 2 மணி நேரம் குரல் மாதிரி பரிசோதனை..!

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு, கைது செய்யப்பட்ட ஞானசேகரனிடம் தடயவியல் துறை அலுவலகத்தில் குரல் மாதிரி பரிசோதனை 2மணி நேரமாக நடைப்பெற்றது. 

சட்டவிரோதமாக வீட்டை இடித்த வழக்கு: நடிகை கவுதமிக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சட்டவிரோதமாக தனது வீட்டை இடித்ததற்காக இரண்டு கோடி ரூபாய் இழப்பீடுக்கோரி வழக்கு தொடர அனுமதிக்கோரி நாச்சாள் என்பவர் தாக்கல் செய்த மனு குறித்து அதிமுக நிர்வாகியும் நடிகையுமான கவுதமி பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மாணவர்களிடம் தமிழ் மொழியை எளிமையாக சேர்க்க புத்தாக்கப் பயிற்சி..!

தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், உலகத் தமிழ் சங்கம் மற்றும் குமரகுரு பன்முக கலை அறிவியல் கல்லூரி  இணைந்து நடத்தும் தமிழ் ஆசிரியர் மாணவர் புத்தாக்க பயிற்சி நடைபெற்றுவருகிறது.

பணியிட மாறுதலுக்காக சக காவலரிடம் பணம் பெற்று மோசடி.. 3 காவலர்கள் கைது..!

பணியிட மாறுதல் வாங்கித் தருவதாக கூறி சக காவலரிடம் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டு தாக்கிய வழக்கில் 3 காவலர்களை போலீசார் கைது செய்த நிலையில், தற்போது அந்த காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

பாலியல் புகார்: ஆசியர்களுக்கு ஆதரவாக ஆஜராகமாட்டோம் - வழக்கறிக்கறிஞர்கள் திட்டவட்டம்

கிருஷ்ணகிரி அருகே பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியர்கள் 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு ஆதரவாக, கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த வழக்கறிஞர்கள் ஆஜராக மாட்டார்கள் என்று வழக்கறிஞர்கள் சங்கம் அறிவித்துள்ளது. 

அண்ணா பல்கலைக்கழக விவகாரம்.. குற்றவாளி ஞானசேகரனுக்கு குரல் பரிசோதனை

அண்ணா பல்கலைக்கழக விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஞானசேகரனுக்கு தடவியல் துறை அதிகாரிகள் தலைமையில் குரல் பரிசோதனை செய்யப்படவுள்ளது.

பண மோசடியில் ஈடுபட்ட காவலர்கள்.. போலீசார் 3 பேரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு

பணியிட மாறுதல் வாங்கித் தருவதாக கூறி சக காவலரிடம் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டு தாக்கிய வழக்கில் 3 காவலர்களை போலீசார் கைது செய்த நிலையில் கைதான காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

இளம்பெண் ஆட்டோவில் கடத்தப்பட்ட விவகாரம்.. இருவர் அதிரடி கைது

சென்னை கிளாம்பாக்கத்தில் பேருந்துக்காக காத்திருந்த இளம்பெண்ணை ஆட்டோவில் கடத்தி சென்று பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுநர் உட்பட இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.

சென்னையில் வருமான வரி சோதனை..  கோடிக்கணக்கில் ரூ.2000 நோட்டுகள் சிக்கியதால் பரபரப்பு

சென்னையில் யாக்கூப் என்பவர் வீட்டில் அதிரடி சோதனை மேற்கொண்ட வருமான வரித்துறையினர் 9.50 கோடி போலி  இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.