K U M U D A M   N E W S

தமிழ்நாடு

சிறுவனுக்கு பாலியல் தொல்லை செல்போனில் இருந்த ரகசியம்? துணை நடிகர் போக்சோவில் கைது!

பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனுக்கு துணை நடிகர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செல்போனில் இருந்த புகைப்படங்களை காட்டி, சிறுவர்களிடம் சில்மிஷம் செய்த துணை நடிகர் யார்..? இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்

ஓடும் ரயிலில் கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. கீழே தள்ளிவிட்டதால் பரபரப்பு

ஓடும் ரயிலில் கர்ப்பிணி பெண்ணிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டு கீழே தள்ளிவிட்ட நபரை ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் கைது செய்தனர்.

உரிய ஆவணமின்றி கொண்டுவரப்பட்ட பணம்.. இளைஞர்கள் இருவரிடம் விசாரணை

உரிய ஆவணமின்றி 75 லட்சம் ரூபாயை ஆந்திராவில் இருந்து காரில் கொண்டு வந்த இளைஞர்கள் இருவரிடம் வருமான வரித்துறை அதிகாரி விசாரணை மேற்கொண்டுள்ளார்.

தமிழகத்தில் நிலவும் கடும் பனிமூட்டம்.. சிரமத்திற்குள்ளான பொதுமக்கள்

தமிழகத்தில் நிலவும் அதிகப்படியான பனிமூட்டம் காரணமாக பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். மேலும், விமானங்கள் வருகைப்பாடு, புறப்பாடு தாமதமாகியுள்ளது.

முகத்தில் கொப்பளங்களுடன் வந்த பயணி.. குரங்கு அம்மை என்ற சந்தேகத்தால் பரபரப்பு

இலங்கையிலிருந்து வந்த திரிபுரா மாநில பயணி ஒருவருக்கு முகத்தில் கொப்பளங்கள் இருந்த நிலையில் குரங்கு அம்மனாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் அடிப்படையில் அதிகாரிகள் அவரை தனி ஆம்புலன்ஸ் மூலம் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பியதால்  விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

சட்டவிரோதமாக வீட்டை இடித்த வழக்கு: நடிகை கவுதமிக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சட்டவிரோதமாக தனது வீட்டை இடித்ததற்காக இரண்டு கோடி ரூபாய் இழப்பீடுக்கோரி வழக்கு தொடர அனுமதிக்கோரி நாச்சாள் என்பவர் தாக்கல் செய்த மனு குறித்து அதிமுக நிர்வாகியும் நடிகையுமான கவுதமி பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நம்மால் காவல்துறை இழுக்கு ஏற்படக்கூடாது எண்ணத்தோடு பணியாற்ற வேண்டும் - சென்னை காவல் ஆணையர் அருண் வேண்டுகோள்

சென்னையில் நடைபெற்ற காவலர்களின் நற்பணிக்காக முதலமைச்சர் காவலர் பதக்கம் வழங்கும் நிகழ்ச்சியில் நம்மால் காவல்துறை இழுக்கு ஏற்படக்கூடாது எண்ணத்தோடு பணியாற்ற வேண்டும் என்று சென்னை காவல் ஆணையர் அருண் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மத்திய அரசுக்கு எதிராக போராட்டம்... பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய வழக்கில்  பிப்ரவரி 20 தேதி தீர்ப்பு

மத்திய அரசுக்கு எதிராக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய வழக்கில்  விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜிக்கு எதிரான வழக்கில் பிப்ரவரி 20 தேதி தீர்ப்பு அளிக்கபடும் என  சென்னை சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

"தேர்தல் ஆணையம் உள்கட்சி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த முடியாது" - எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் வாதம்

இல்லாத அதிகாரத்தை எடுத்துக் கொண்டு தேர்தல் ஆணையம் உள்கட்சி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த முடியாது என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.

அரசு வேலைக்காக கணவன் கொலை? மனைவி மீது சந்தேகம் வெளியான அதிர்ச்சி தகவல்!

அரசு வேலைக்காக, மனைவியே அவரது கணவனை கொலை செய்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டு பகீர் கிளப்பியுள்ளது. உயிரிழந்தவரின் உடலில் காயங்கள் வந்தது எப்படி..? இது திட்டமிட்ட கொலையா..? என்ன தான் நடந்தது..? விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு...