K U M U D A M   N E W S

தமிழ்நாடு

Gold price today: 3 நாட்களுக்கு பிறகு மீண்டும் தங்கம் விலை ஏற்றம்.. இன்றைய நிலவரம்

தங்கத்தின் விலை ஒருபக்கம் அதிகரித்துள்ள நிலையில், வெள்ளியின் விலையானது நேற்றைய விலையுடன் ஒப்பிடுகையில் இன்று 20 காசுகள் அதிகரித்துள்ளது.

இனி தமிழ் மொழியில் மட்டுமே அரசாணை- தமிழக அரசு அதிரடி உத்தரவு!

தமிழக அரசு சார்பில் வெளியிடப்படும் அரசாணைகள், சுற்றறிக்கைகள் தமிழில் மட்டுமே இருக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஆர்டிஓ வீட்டில் கத்தி முனையில் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம்- மேலும் 3 பேர் கைது

கெங்கவல்லி அருகே ஆர்டிஓ வீட்டில் 60 பவுன் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போக்சோ வழக்கு.. கிறிஸ்துவ மத போதகர் ஜான் ஜெபராஜ் முன் ஜாமீன் மனு தள்ளுபடி!

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் கிறிஸ்துவ மத போதகர் ஜான் ஜெபராஜ் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி அவர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

'சாட்டை'-க்கும் நாதகவுக்கும் தொடர்பில்லை’ - சீமான் அறிக்கை

"சாட்டை துரைமுருகன் நடத்தும் சாட்டை யூடியூப் பக்கத்திற்கும், நாம் தமிழர் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், அதில் வரும் கருத்துகள், செய்திகள் அனைத்தும் துரைமுருகனின் தனிப்பட்ட கருத்து; அவற்றிற்கு எந்தவகையிலும் நாம் தமிழர் கட்சி பொறுப்பு ஏற்காது” என்று நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

டாஸ்மாக் முறைகேடு வழக்கு.. முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்ய ED-க்கு நீதிமன்றம் உத்தரவு!

டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக தமிழக காவல்துறை மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கைகளை தாக்கல் செய்ய அமலாக்கத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ரோட்டரி சார்பில் ”கோல்டன் ஸ்பேரோ”.. பெண்களே உங்கள் திறமையினை நிரூபிக்க சரியான மேடை

ரோட்டரி மாவட்டம்-3233 சார்பில் பெண்களின் திறமையை, அறிவை, சுதந்திரத்தை, பெருமையை உலகிற்கு பறைசாற்றும் நோக்கத்தோடு வருகிற ஏப்ரல் 19 ஆம் தேதி கோல்டன் ஸ்பேரோ நிகழ்வு திட்டமிடப்பட்டுள்ளது.

சிபிஐ வழக்கை ரத்து செய்யக்கோரி அமைச்சரின் தம்பி வழக்கு... ED-க்கு உயர்நீதிமன்றம் க்ரீன் சிக்னல்!

தனக்கெதிராக சிபிஐ பதிவு செய்த மோசடி வழக்கை ரத்து செய்யக்கோரி அமைச்சர் நேருவின் சகோதரர் கே. என்.ரவிச்சந்திரன் தாக்கல் செய்த வழக்கில், அமலாக்கத் துறை இடையீட்டு மனு தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

வக்ஃபு நிலத்தில் ஆக்கிரமிப்பு? நடு ரோட்டில் நிற்கும் கிராமம்! பரிதவிக்கும் இந்து குடும்பங்கள்!

வேலூரில் உள்ள ஒரு கிராமத்தில் 150 இந்துக்குடும்பங்கள் வசிக்கும் வீடுகளை வக்ஃபு சொத்து எனக் கூறி நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது. இதனால் அதிர்ச்சியடைந்துள்ள மக்கள் ஆட்சியரை அணுகியுள்ளனர்.

பேரிடர் காலங்களில் மீனவர்களை மீட்க இந்திய கடற்படை பைலட்களுக்கு பயிற்சி!

மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி கடற்பகுதிகளில் பேரிடர் காலங்களில் மீனவர்களை மீட்பது, கடலின் மிதந்து வரும் சந்தேகமான பொருளை ஹெலிகாப்டரில் இருந்து கயிறு மூலமாக இறங்கி சோதனை செய்வது தொடர்பாக இந்திய கடற்படை பைலட்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.