K U M U D A M   N E W S
Advertisement

தமிழ்நாடு

என்னடா ஒரே பித்தலாட்டமா இருக்கு.. செல்போன் ஆர்டர் செய்தவருக்கு சென்ட் பாட்டில் டெலிவரி

அமேசானில் செல்போன் ஆர்டர் செய்த நிலையில் சென்ட் பாட்டில் டெலிவரி செய்யப்பட்டுள்ளது. அதனை மாற்றி கொடுக்காமல் ஏமாற்றியதாக அமேசான் நிறுவனம் மீது டிஜிபி அலுவலகத்தில் ஒருவர் புகார் அளித்துள்ளார்.

பயிர் கடன் விவகாரம்.. உண்ணாவிரத போராட்டம் நடத்த விவசாயிகள் முடிவு!

தமிழ்நாடு அரசு கூட்டுறவு சங்கங்களில் பயிர் கடன் பெறுவதற்கு சிபில் ரிப்போர்ட் பார்க்கப்படும் என்கிற சுற்றறிக்கையை ரத்து செய்யக்கோரி அனைத்து விவசாய சங்கங்களின் சார்பில் சென்னையில் வருகிற ஜூலை-10 அன்று மாபெரும் ஒரு நாள் கோரிக்கை அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

'நீங்க அழாதீங்க மேடம்'.. திருநங்கைகளின் பாசத்தால் கண் கலங்கிய கலெக்டர்

குடியிருப்பு, சுயதொழில் என தங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திய நாமக்கல் மாவட்ட ஆட்சியருக்கு கண்ணீருடன் பிரியா விடை கொடுத்தனர் திருநங்கைகள். இதுத்தொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பழவேற்காடு அருகே 'சாகர் கவாச்' பாதுகாப்பு ஒத்திகை.. துறைமுகத்திற்குள் ஊடுருவ முயன்ற 11 பேர் கைது!

பழவேற்காடு அருகே நடைபெற்ற ‘சாகர் கவாச்’ பாதுகாப்பு ஒத்திகையின் போது, கடல் வழியாக அதானி துறைமுகத்திற்குள் ஊடுருவ முயன்ற 9 பேரும், சாலை வழியாக முயன்ற 2 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கு.. நடிகர் கிருஷ்ணாவை பிடிக்க 5 தனிப்படைகள் அமைப்பு

கிருஷ்ணாவின் செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ள நிலையில் தனிப்படைகள் அமைத்து தேடிவந்த காவல்துறையினர் சைபர் கிரைம் நிபுணர்களுடன் அவரது இருப்பிடத்தை கண்டறியும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பூ செடிகளுக்கு நடுவே கஞ்சா செடி வளர்த்த விவசாயி கைது!

கொடைரோடு அருகே மாவூத்தான் பட்டியில், வீட்டு தோட்டத்தில் உள்ள பூச்செடிகளுக்கிடையே மறைவாக கஞ்சா செடி வளர்த்து வந்த விவசாயியை குற்றப்பிரிவு தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு.. தொழில் மற்றும் வணிகத்துறை இயக்குனருக்கு அபராதம்!

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தமிழக தொழில் மற்றும் வணிகத்துறை இயக்குனருக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நெல்லுக்கு உரிய விலை வழங்கவில்லை.. விவசாயிகள் சாலை மறியல்.. அதிகாரிகள் பேச்சுவார்த்தை

வேலூர் அருகே டோல்கேட் பகுதியில் நெல்லுக்கு உரியவிலை கேட்டு விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால், விவசாயிகளிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்த பின்னர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

"ஒரு நாள் பழக்கத்தால் இந்த நிலைமைக்கு வந்து விட்டேன்"- ‘தீங்கிரை’யால் போதைக்கு இரையான நடிகர் ஸ்ரீகாந்த்

போதைப்பொருள் வழக்குகளில் திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் கைது என்ற செய்தியை நாம் பிற மாநிலங்களில் நிகழ்ந்ததாக அடிக்கடி பார்த்து இருப்போம், படித்து இருப்போம். ஆனால் முதல் முறையாக தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் தமிழ் திரைப்பட நடிகர் ஸ்ரீகாந்த் கைதான செய்தி வைரலாகி உள்ளது. தமிழ் திரை உலகில் போதைப்பொருள் நடமாட்டம் இருப்பதாக பலரது தரப்பில் இருந்து குற்றச்சாட்டுகள் எழுந்தது.

பாட்டியை பலாத்காரம் செய்து கொலை செய்த பேரன்...நாடகமாடியது அம்பலம்

பாட்டியை கொலை செய்து விட்டு கோவிலில் மொட்டை அடித்து கொண்டு மனைவியின் ஊரில் தலைமறைவாக இருந்தவரை போலீசார் கைது செய்துள்ளனர்.