K U M U D A M   N E W S

தமிழ்நாடு

https://magazine.kumudam.ai/api/v1/getUNNews?site=kumudamnews&limit=25&offset=3000&order=created_at&category_id=3

திடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு.. மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்

தவிர்க்க முடியாத தொழில்நுட்ப கோளாறு காரணமாக மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

பட்டப்பகலில் நடந்த கொள்ளை.. வழிப்பறியில் ஈடுபட்டவர்களுக்கு காத்திருந்த ஷாக்

பட்டப்பகலில் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீஸார் அதிரடியாக கைது செய்தனர்.

ஆல் பாஸ் ரத்து.. தமிழகத்திற்கு பொருந்துமா..? அன்பில் மகேஷ் விளக்கம்

தமிழக பள்ளிகளில் தற்போது பின்பற்றப்படும் நடைமுறையே தொடரும் என அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.

5 - 8ம் வகுப்புகளுக்கு இனி ALL PASS கிடையாது என மத்திய அரசு அதிரடி அறிவிப்பு.. இடைநிற்றலை அதிகரிக்கும் என  கல்வியாளர்கள் கருத்து..!

5 மற்றும் 8ஆம் வகுப்பில் கட்டாய தேர்ச்சி முறையை மத்திய அரசு ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது கட்டாய தேர்ச்சி என்ற நடைமுறை உள்ள நிலையில், மாற்றப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

விதி மீறிய கட்டிடங்களுக்கு இரக்கம் காட்ட முடியாது.. சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டம்

விதிமீறி கட்டப்பட்டுள்ள பள்ளிகள், தேவாலயங்கள், மசூதிகள், கோவில்களுக்கு இரக்கம் காட்ட முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

திமுக எம். பி. ஆ.ராசாவுக்கு எதிரான விசாரணைக்கு தடை கோரிய மனு.. தள்ளுபடி செய்ய அமலாக்கத்துறை வலியுறுத்தல்..!

திமுக எம். பி. ராசாவுக்கு எதிரான சட்டவிரோத பணப் பரிமாற்ற  தடைச் சட்ட வழக்கில், குற்றச்சாட்டு பதிவு உள்ளிட்ட விசாரணையை துவங்க கூடாது என தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என அமலாக்கத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓட்டுநர் இல்லாமல் இயக்கப்படும் மெட்ரோ ரயில்... புதிய ஒப்பந்தம் கையெழுத்து..!

சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ இரயில் திட்டத்தில் ஓட்டுநர் இல்லாமல் இயக்கப்படும் இரயில்களை தயாரிப்பதற்கான புதிய ஒப்பந்தம் ரூ.3,657.53 கோடி மதிப்பில் வழங்கப்பட்டுள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

சுதந்திர போராட்ட தியாகி கக்கனின் சிதிலமடைந்த கக்கன் மணிமண்டபம்... அரசுக்கு பொதுமக்கள் வேண்டுகோள்..!

சுதந்திர போராட்ட தியாகி மற்றும் தமிழக அரசியலில் எளிமையின் சிகரமாக திகழ்ந்த கக்கனின் 43ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படும் நிலையில், அவரின் மணிமண்டபம் மற்றும் அஸ்தி வைக்கும் இடத்தை பராமரிக்க பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

திருப்பதி தரிசனத்திற்கு பத்தாயிரம் ரூபாயா..! பக்தர்களிடம் மோசடியில் ஈடுபட்ட மர்ம கும்பல்

திருப்பதில் சாமி தரிசனம் செய்வதற்கு ஏற்பாடு செய்து தருவதாக கூறி பெண் மருத்துவரிடம் ஆயிரக்கணக்கில் பணத்தை ஏமாற்றிய மோசடி கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர். 

அரசு ஊழியர்கள் சொத்து குறித்த விவரம் தனிப்பட்டது அல்ல.. நீதிமன்றம் திட்டவட்டம்

அரசு ஊழியரின் சொத்துக்கள் மற்றும் கடன்கள் குறித்த விவரங்கள், தனிப்பட்ட விவரங்கள் அல்ல என சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

மன்சூர் அலிகான் மகன் போதைப்பொருள் வழக்கு... ஜாமீன் மனு நாளை விசாரணை..!

போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் மன்சூர் அலிகான் மகன், ஜாமீன் கோரி சென்னை போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்த நிலையில், இந்த மனு  நாளை விசாரணைக்கு வர உள்ளது.

மதுரையில் டங்ஸ்டன் திட்டத்திற்கு எதிர்ப்பு.. விவசயிகள் போராட்டம்..!

மதுரையில் டங்ஸ்டன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் ஏர், கலப்பை, நெல் பயிர், வாழைக்கன்றுகளை கைகளில் ஏந்தி போராட்டம் நடத்தினர்.

டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடி உத்தரவு.. பாதுகாப்பு பணியில் கூடுதல் போலீஸார் நியமனம்

டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் மயிலாடுதுறை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் கூடுதலாக ஆயுதப்படை போலீசார் இரண்டு பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

வீட்டு உரிமையாளருடன் தகராறு.. தலைக்கேறிய மதுபோதை.. வாகனங்கள் தீ வைத்து எரிப்பு

வீட்டு உரிமையாளருடன் ஏற்பட்ட தகராறில் மது போதையில் ஐந்து  இருசக்கர வாகனங்களை தீவைத்து எரித்த வாடகைத்தாரரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

பட்டினப்பாக்கத்தில் மீண்டும் ஒரு சம்பவம்.. மேற்கூரை இடிந்து விழுந்து இளைஞர் படுகாயம்

குடிசை மாற்றுவாரிய குடியிருப்பின் பால்கனி இடிந்து விழுந்து இளைஞர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செல்போன் பேசினால் பணியிடை நீக்கம்.. அரசு பேருந்து ஓட்டுநர்களுக்கு வைத்த செக்

அரசுப் பேருந்தை இயக்கும் போது ஓட்டுநர்கள் செல்போன் பயன்படுத்தினால் 29 நாட்கள் பணியிடை நீக்கம் செய்யப்படுவர் என்று தமிழ்நாடு அரசு போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.

13 வயது சிறுமி  கர்ப்பமானதால் பரபரப்பு.. வளர்ப்பு தந்தை போக்சோவில் கைது

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக வளர்ப்பு தந்தை கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வானிலை நிலவரம்.. தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுவதால் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மெட்ரோ சுரங்கம் தோண்டும் பணி.. திடீரென உள்வாங்கிய வீடால் பரபரப்பு

மெட்ரோ பணிக்காக சுரங்கம் தோண்டும் போது குறிப்பிட்ட பகுதிகளில் ஏற்பட்ட மண் அழுத்தம் காரணமாக மாம்பலம் லாலா தோட்டத்தில் இருக்கும் ஒரு வீடு மட்டும் ஒரு சில இன்ச் உள்வாங்கியுள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இளைஞர் கொலை.. நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு.. டிஜிபி உத்தரவு

நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே இளைஞர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் எதிரொலியாக நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய காவலர்களை நியமிக்க டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். 

ஜாபர் சாதிக் ஜாமின் வழக்கு.. நீதிபதி விலகல்..!

ஜாபர் சாதிக் மற்றும் அவரது சகோதரர் ஜாமீன் மனு மீதான விசாரணையில் இருந்து விலகுவதாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா தெரிவித்துள்ளார்.

ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த இளைஞர்.. தூக்கிட்டு தற்கொலை செய்த சோகம்...!

தாயின் கேன்சர் சிகிச்சைக்காக வைத்திருந்த பணத்தை ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

உள்ளாட்சி தேர்தல் இப்போது இல்லை... சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி

"வார்டு மறுவரையறை, இட ஒதுக்கீடு நடைமுறைகள், SC/ST மற்றும் மகளிருக்கான இட ஒதுக்கீடு குறித்து முடிவு செய்யாமல் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாது” என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

தொடர் விடுமுறை எதிரொலி.. விமான கட்டணங்கள் கிடுகிடு உயர்வு..!

கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு போன்ற தொடர் விடுமுறையால் சொந்த ஊர்கள் மற்றும் சுற்றுலா தளங்களுக்கு செல்லும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், விமான கட்டணங்கள் பன்மடங்கு அதிகரித்து காணப்படுகிறது.

தேர்தல் விதி மீறல் தொடர்பான வழக்கு.. காவல் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

தேர்தல் விதி மீறல் தொடர்பான வழக்கை ரத்து செய்யக் கோரி இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் எம். பி. நவாஸ் கனி உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கும்படி காவல் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.