K U M U D A M   N E W S

அரசியல்

"புலி வருது, புலி வருது".. முதல்வரை விமர்சித்த இபிஎஸ்

தொகுதி மறுவரையறை குறித்து “புலி வருது, புலி வருது” என்று பூச்சாண்டி காட்டும் வேலையைத் தான் முதலமைச்சர் ஸ்டாலின் தொடர்ந்து செய்கிறார் என்றும் மடைமாற்றும் அரசியலை மக்கள் இனியும் நம்பப் போவது இல்லை" என்றும் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

பக்ரீத் பண்டிகை.. முதலமைச்சர் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வாழ்த்து!

பக்ரீத் பண்டிகை நாளை கொண்டாடப்படும் நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

மாநிலங்களவை தேர்தல்: அதிமுக, திமுக வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல்!

மாநிலங்களவை உறுப்பினா் பதவிக்கான தோ்தலில் அதிமுக, திமுக வேட்பாளா்கள் மற்றும் மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன் ஆகியோா் இன்று வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளனா்.

விஜய் இனிமேல் பதில் சொல்வார்.. கூட்டணி குறித்து நயினார் சூசகம்

விஜய் கூட்டணியில் இணைய வேண்டும் என ஏற்கனவே அழைப்பு விடுத்துள்ளதாகவும் அதற்கு இனிமேல் தான் பதில் வரும் என நினைக்கிறேன் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

பாஞ்சாலங்குறிச்சியில் துரை வைகோ கெத்து.. செண்டிமெண்ட் சிக்கலில் மதிமுக?

கட்டபொம்மன் கோட்டைக்குப் போனால் பதவிக்கு ஆபத்து என்கிற சென்டிமென்டை உடைத்து கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து கெத்து காட்டிய மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோவுக்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியிருப்பது தான் பாஞ்சாலங்குறிச்சியின் பஞ்சாயத்தாக உள்ளது.

மாநிலங்களவை தேர்தல்: அதிமுக-திமுக வேட்பாளர்கள் நாளை வேட்பு மனு தாக்கல்!

தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் நாளை வேட்பு மனு தாக்கல் செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதே நேரத்தில், திமுக வேட்பாளர்களும் நாளை வேட்புமனுத்தாக்கல் செய்வார்கள என்று தகவல் வெளியாகியுள்ளது.

மாநில பாடத்திட்டத்தை வலுப்படுத்த வேண்டும்.. அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

ஐஐடி நுழைவுத்தேர்வு தேர்ச்சி விகிதத்தில் தமிழ்நாடு கடைசியிலிருந்து மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது என்றும், இதனால் மாநில பாடத்திட்டத்தை வலுப்படுத்த வேண்டும் என்றும் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

அரசு பேருந்தில் ’தமிழ்நாடு’ பெயர் விவகாரம்.. ஆதாரத்தை நீட்டிய அமைச்சர் சிவசங்கர்

’தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம்’ என்றிருந்ததை ’அரசு போக்குவரத்து கழகம்’ என கடந்த 2012 ஆம் ஆண்டு மறைந்த ஜெயலலிதா அவர்களது ஆட்சி காலத்திலேயே மாற்றப்பட்டுள்ளதாக ஆதாரத்துடன் விளக்கமளித்துள்ளார், போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர்.

போகாத ஊருக்கு முதலமைச்சர் வழி சொல்கிறார்.. நயினார் நாகேந்திரன் விமர்சனம்

அரசியல் ஆதாயத்திற்காக தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவோம் என்று போகாத ஊருக்கு, வழி சொல்கிறார் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.

தவெகவில் அதிருப்தி..? அறிவாலயத்தில் ஆனந்தம்..? திமுகவின் அடுத்த மூவ்!

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் அதிருப்தி நிர்வாகிகளில் எண்ணிக்கை சற்று உயர்ந்து வருவது அறிவாலய வட்டாரத்தில் ஆனந்தத்தை பொங்கச் செய்திருப்பதாக கூறப்படுகிறது இதனால் அந்த அதிருப்தி நிர்வாகிகளில் பட்டியல திமுக கையில் எடுத்திருப்பதாக கூறப்படுகிறது