K U M U D A M   N E W S

அரசியல்

பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேற வேண்டும்.. பெ.சண்முகம் அறிவுறுத்தல்

அதிமுக தன்னை காப்பாற்றிக்கொள்ள பாஜக கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும் என்று பெ. சண்முகம் அறிவுறுத்தியுள்ளார்.

அண்ணா பெயரை உச்சரிக்க அருகதை இருக்கிறதா?.. இபிஎஸ் காட்டம்

குடும்ப ஆட்சி நடத்திக் கொண்டு, கமிஷன்- கலெக்ஷன்- கரப்ஷன் மட்டுமே கொள்கையாகக் கொண்டிருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் எங்களுக்கு பெரியார், அண்ணா பற்றி பாடம் எடுக்க வேண்டாம்” என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

விஜய் பெரியாரை முழுமையாக ஏற்றுக் கொண்டாரா? திருமாவளவன் கேள்வி

”பெரியாரைப் பற்றி அவதூறு பரப்பப்பட்டுள்ள சூழ்நிலையில் அதற்கு கண்டனம் தெரிவிக்கவில்லை என்றால் உண்மையாகவே பெரியாரை கொள்கைத் தலைவராக விஜய் ஏற்றுக் கொண்டாரா? என்பது கேள்விக்குறியாக உள்ளது” என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

அரசு ஊழியர்களின் பணி பாதுகாப்பை உறுதி செய்திடுக.. டிடிவி தினகரன் வலியுறுத்தல்

வருவாய்த்துறையினர் போராட்டத்தால் பொதுமக்கள் பாதிப்படைவதாகவும் அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற திமுக அரசு முன்வர வேண்டும்” என்று டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

சாத்தான் வேதம் ஒதுவது போல் உள்ளது.. இபிஎஸ் விமர்சனம்

தமிழக மக்களின் சந்தோஷங்களை எல்லாம் கொள்ளையடித்த ஒரு நபர், களவாடுவது பற்றி புலம்புவது 'சாத்தான் வேதம் ஒதுவது போல்' உள்ளது” என எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

மாணவிகளை அலைக்கழிப்பது ஏன்? அண்ணாமலை கேள்வி

"மாணவ, மாணவியர் விடுதிகளிலும், முறையான அடிப்படை வசதிகள் உள்ளனவா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்" என அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

திமுக கூட்டணியில் எந்த புகைச்சலும் இல்லை.. அமைச்சர் கே.என்.நேரு

திமுக கூட்டணியில் எந்த புகைச்சலும் இல்லை எனவும் கூட்டணிக்குள் ஏதாவது பிரச்சனை வரவேண்டும் என எதிர்க்கட்சியினர் ஆசைப்படுகிறார்கள் எனவும் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

அதிமுகவினரின் செயல் ஏற்புடையது அல்ல.. ஜவாஹிருல்லா கண்டனம்

முருக பக்தர்கள் மாநாட்டில் அண்ணா, பெரியார் குறித்து ஒளிபரப்பப்பட்ட வீடியோவுக்கு அதிமுகவினர் தாமதமாக கண்டனம் தெரிவித்தது ஏற்புடையதல்ல என்று ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

அதிமுக - பாஜக கூட்டணி ஸ்ட்ராங்கா இருக்கு.. வானதி ஸ்ரீனிவாசன்

அதிமுக - பாஜக கூட்டணி மிக உறுதியாக இருப்பதாகவும் இதை எந்த சக்தியாலும் உடைக்க முடியாது என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் பதவி வகிப்போருக்கு நாவடக்கம் தேவை.. நயினார் நாகேந்திரன்

“மக்களின் பிரதிநிதியாக நாடாளுமன்றத்தில் பதவி வகிப்போருக்கு நாவடக்கம் தேவை” என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.