K U M U D A M   N E W S

அரசியல்

மாநிலங்களவை தேர்தல்: அதிமுக-திமுக வேட்பாளர்கள் நாளை வேட்பு மனு தாக்கல்!

தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் நாளை வேட்பு மனு தாக்கல் செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதே நேரத்தில், திமுக வேட்பாளர்களும் நாளை வேட்புமனுத்தாக்கல் செய்வார்கள என்று தகவல் வெளியாகியுள்ளது.

மாநில பாடத்திட்டத்தை வலுப்படுத்த வேண்டும்.. அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

ஐஐடி நுழைவுத்தேர்வு தேர்ச்சி விகிதத்தில் தமிழ்நாடு கடைசியிலிருந்து மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது என்றும், இதனால் மாநில பாடத்திட்டத்தை வலுப்படுத்த வேண்டும் என்றும் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

அரசு பேருந்தில் ’தமிழ்நாடு’ பெயர் விவகாரம்.. ஆதாரத்தை நீட்டிய அமைச்சர் சிவசங்கர்

’தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம்’ என்றிருந்ததை ’அரசு போக்குவரத்து கழகம்’ என கடந்த 2012 ஆம் ஆண்டு மறைந்த ஜெயலலிதா அவர்களது ஆட்சி காலத்திலேயே மாற்றப்பட்டுள்ளதாக ஆதாரத்துடன் விளக்கமளித்துள்ளார், போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர்.

போகாத ஊருக்கு முதலமைச்சர் வழி சொல்கிறார்.. நயினார் நாகேந்திரன் விமர்சனம்

அரசியல் ஆதாயத்திற்காக தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவோம் என்று போகாத ஊருக்கு, வழி சொல்கிறார் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.

தவெகவில் அதிருப்தி..? அறிவாலயத்தில் ஆனந்தம்..? திமுகவின் அடுத்த மூவ்!

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் அதிருப்தி நிர்வாகிகளில் எண்ணிக்கை சற்று உயர்ந்து வருவது அறிவாலய வட்டாரத்தில் ஆனந்தத்தை பொங்கச் செய்திருப்பதாக கூறப்படுகிறது இதனால் அந்த அதிருப்தி நிர்வாகிகளில் பட்டியல திமுக கையில் எடுத்திருப்பதாக கூறப்படுகிறது

கமல் விவகாரம்: தமிழகத்தில் கன்னட திரைப்படங்கள் வெளியாகாது.. எச்சரிக்கும் வேல்முருகன்

'தக் லைஃப்' பட விவகாரத்தில் நீதிபதி நாகபிரசன்னா ஒரு கன்னடராக மட்டுமே இருந்து தீர்ப்பளித்துள்ளார் என்று வேல்முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.

திருச்சி பண்பலையில் ஹிந்தியா? MP துரை வைகோ எடுத்த நடவடிக்கை

திருச்சி பண்பலை 102.1-இல் பகலில் தமிழும், இரவில் ஹிந்தியுமாக ஒலிபரப்பு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தத்தோடு, முழு நேரமும் தமிழில் ஒலிபரப்பு மேற்கொள்ள திருச்சி மக்களவைத் தொகுதி எம்பி துரை வைகோ வைத்த வேண்டுகோள் தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

நீதிமன்றத்திற்கு பயந்து ஆளுநர் மசோதாவுக்கு ஒப்புதல் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ஜனநாயகம், சமூகநீதி, சமத்துவம், சகோதரத்துவம் , மதசார்பின்மைக்காக போராடியவர் கருணாநிதி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

இந்த வழக்குக்கு எல்லாம் நீதி எப்போ? முதல்வருக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி

அண்ணா பல்கலைக் கழக பாலியல் வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளி ஞானசேகரனுக்கு சென்னை மகளிர் நீதிமன்றத்தால் 30 ஆண்டுகளுக்கும் குறையாத ஆயுள் தண்டனை வழங்கப்பட்டிருப்பதை வரவேற்றுள்ளார் பாஜகவின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்.

தி.மு.க பொதுக் குழு கூட்டத்தில் முப்படைக்கு தீர்மானம் நிறைவேற்றி இருக்கலாம் - தமிழிசை சௌந்தரராஜன் ஆதங்கம்

நாட்டின் முப்படை தளபதிகள் வீரர்கள் ஆகியோர் உயிரை பணயம் வைத்து ஆபரேஷன் சிந்தூரை நடத்திக் காண்பித்துள்ள நிலையில் மதுரை தி.மு.க பொதுக் குழு கூட்டத்தில் முப்படையை பாராட்டி ஒரு தீர்மானமாவது நிறைவேற்றி இருக்கலாம் என்று பா.ஜ.க மூத்த தலைவரும், முன்னாள் ஆளுநரமான தமிழிசை சௌந்தரராஜன் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.