உலகம் முழுவதும் சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாடப்படும் சூழ்நிலையில், இந்தியாவின் ஜனாதிபதி, பிரதமர் உட்பட பல்வேறு அரசியல் மற்றும் திரையுலக பிரபலங்கள் இன்று யோகா பயிற்சியில் ஈடுபட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
அகமதாபாத் விமான விபத்துக்கு பிறகு, ஏர் இந்தியா விமானத்தின் முன்பதிவு 20 சதவீதம் வரை குறைந்துள்ளதாக இந்திய சுற்றுலா ஆபரேட்டர்களின் சங்க தலைவர் ரவி கோசைன் தெரிவித்துள்ளார்.
பீகாரில் இருந்து கினி நாட்டுக்கு ரயில் என்ஜின் ஏற்றுமதியை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார். ஒடிசாவில் 18,600 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப் பணிகளும் இன்று தொடங்குகிறது.
கர்நாடக அரசு விழாக்கள், நிகழ்ச்சிகளில் கூட்ட நெரிசல் ஏற்பட்டால் சம்மந்தப்பட்ட விழாவின் ஏற்பாட்டாளருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் புதிய சட்டத்தை கொண்டு வரவுள்ளது. பெங்களூருவில் ஆர்சிபி அணி வெற்றிக் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து மாநில அரசு நடவடிக்கை எடுக்கக்கப்பட்டுள்ளதாகவும், அரசியல் மற்றும் மத கூட்டங்களுக்கும் இந்த தண்டனை பொருந்தும் என சட்ட முன்வடிவில் கூறப்பட்டுள்ளது.
விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் கருப்பு பெட்டி அமெரிக்காவுக்கு அனுப்பப்படுவதாக தகவல் வெளியான நிலையில், இந்த விவகாரத்தில் விமான விபத்து புலனாய்வுப் பணியகம் தான் முடிவு எடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கையில் வெறும் ரூ.1,120 மட்டும் வைத்துக்கொண்டு, தன்னுடைய மனைவிக்கு மங்களசூத்திரம் (தாலி) வாங்க நடைக்கடைக்குள் வந்த 93 வயது முதியவர் தொடர்பான காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.