K U M U D A M   N E W S

Today Headlines : 09 மணி தலைப்புச் செய்திகள்

கரையை கடந்தது டானா புயல், தாம்ரா, பத்ராக் பகுதிகளில் கொட்டித் தீர்த்த கனமழை போன்ற முக்கிய செய்திகள் காண

5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தென்காசி, திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிக கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்

கரையை கடந்தது டானா புயல்

ஒடிசா அருகே கரையை கடந்தது டானா புயல்

"அவர் இதை தான் எதிர் பார்க்கிறார்.. ஆனால் அது நடக்காது" இபிஎஸ்-ஐ சைலண்டாக தாக்கிய திருமா

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இதை தான் எதிர்-பார்க்கிறார் ஆனால் அது நடக்காது இபிஎஸ்-ஐ-சைலண்டாக-தாக்கிய-திருமா

கொட்டித்தீர்த்த கனமழை – வீடுகளுக்குள் பெருக்கெடுத்த வெள்ளம்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் 2 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழை. கனமழை காரணமாக சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகன ஓட்டிகள் சிரமம்

IND VS NZ: நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட்... தமிழக வீரர்கள் வாஷிங்டன் சுந்தர், அஸ்வின் அசத்தல்!

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், நியூசிலாந்து அணி முதல் நாளில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 259 ரன்கள் எடுத்துள்ளது.

முதலமைச்சர், துணை முதலமைச்சர் மீது வழக்கு பதிய அனுமதி வேண்டும்... ஆளுநரிடம் சென்ற பாஜக

முதலமைச்சர், துணை முதலமைச்சர் மீது வழக்குப்பதிய அனுமதி கேட்டு ஆளுநருக்கு தமிழக பாஜக கடிதம் எழுதியுள்ளது. அந்த கடிதத்தை ஆளுநரை சந்தித்து பாஜக செயலாளர் அஸ்வத்தமன் வழங்கினார்.

19 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழைநீருடன் கலந்த கழிவுநீர்... வீடுகளுக்குள் புகுந்ததால் மக்கள் அவதி

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே கழிவுநீருடன் மழைநீர் கலந்து வீடுகளுக்குள் புகுந்ததால் மக்கள் அவதியடைந்துள்ளனர். நெடுஞ்சாலைத்துறை வடிகால் வசதி ஏற்படுத்தாததால் குடியிருப்புக்குள் மழைநீர் தேங்குவதாக மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

தவெக மாநாடு.. விஜய் பெற்றோர் அன்னதானம் வழங்கி சிறப்பு பூஜை!

தவெக மாநாடு வெற்றிகரமாக நடைபெற வேண்டும் என்றும் தமிழ்நாட்டிற்கு ஒரு பொக்கிஷம் கிடைக்க வேண்டும் எனவும் விஜய்யின் தந்தையும் இயக்குநருமான சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.