K U M U D A M   N E W S

மீனவர்கள் கைது- ஜெய்சங்கருக்கு முதலமைசர் மு.க. ஸ்டாலின் கடிதம்!

இலங்கை கடற்படையால் கைதான 8 ராமேஸ்வரம் மீனவர்களை விடுவிக்க கோரி வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 8 மீனவர்களின் மீன்பிடி படகை பாதுகாப்பாக மீட்டுக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்; மீனவர்கள் கைது, உபகரணங்கள் இழப்பு பாதிக்கப்பட்டோர் குடும்பங்களுக்கு மன உளைச்சலை தருகிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நடிகர்கள் மட்டும் போதைப்பொருள் பயன்படுத்துவதில்லை – காயத்ரி ரகுராம்

அதிமுக தேர்தல் பிரசாரம் என்பது மக்கள் பிரச்னைகளை மையப்படுத்தியே இருக்கும் என காயத்ரி ரகுராம் பேச்சு

மீனவர்கள் நலனில் முதல்வருக்கு அக்கறை இல்லை.. அன்புமணி குற்றச்சாட்டு

தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் விவகாரத்தில் முதல்வர் கடிதம் எழுதுவதோடு நிறுத்திக்கொள்வதாகவும், மீனவர்கள் மீது அவருக்கு அக்கறை இல்லை என்றும் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

ரீல்ஸ் மோகம்: இளைஞரை கொன்று ஐபோன் திருடிய 2 சிறுவர்கள்..!

இன்ஸ்டாகிராமில் சிறந்த ரீல்ஸ் வீடியோக்களை பதிவிட வேண்டும் என்று ஆசையில் 2 சிறார்கள் ஒரு இளைஞரை கொலை செய்து அவரின் ஐபோனை திருடிய சம்பவம் உத்தரபிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நிலத்தடி நீருக்கு வரி.. அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு

வேளாண் பயன்பாட்டுக்கான நிலத்தடி நீருக்கு வரி விதிக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

முறைகேடுகளின் மறுபெயர் தான் திராவிட மாடல் அரசா?- அன்புமணி சரமாரி கேள்வி

கட்டி முடிக்கப்பட்ட கட்டிடத்திற்கு ஒப்பந்தப்புள்ளி விவகாரத்தில் மாநகராட்சிக்கே தெரியாமல் கட்டிக் கொடுத்தது யார்? என அரசுக்கு அன்புமணி கேள்வி எழுப்பி உள்ளார்.

மனைவியின் இன்ஸ்டா ரீல்ஸ் மோகம்.. கணவன் செய்த கொடூரம்!

கர்நாடகாவில் மனைவி தொடர்ச்சியாக இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பார்த்ததால் ஆத்திரம் அடைந்த கணவன், மனைவின் கழுத்தில் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.

இன்ஸ்டா பிரபலம் விஷ்ணு கைது.. மனைவி அளித்த புகாரில் போலீசார் நடவடிக்கை

இன்ஸ்டா பிரபலம் விஷ்ணு என்பவர் தனது மனைவியை அடித்து கொடுமைப்படுத்திய விவகாரத்தில் போலீசாரால் இன்று கைது செய்யப்பட்டார்.

மிசா இராமநாதன் இரங்கல் கூட்டம்: பேச முடியாமல் தேம்பி அழுத எம்பி திருச்சி சிவா!

மறைந்த விளானூர் மிசா இராமநாதன் இரங்கல் கூட்டத்தில் ராஜ்யசபா எம்பி திருச்சி சிவா பேசிக்கொண்டிருக்கும் போதே திடீரென்று கண்ணீர் விட்டு அழுதது, மற்றவர்களையும் கண் கலங்க வைத்தது.

நெல் ஜெயராமன் மறைவின் போது தந்த வாக்குறுதி.. சொன்ன சொல் மாறாத SK!

”நெல் ஜெயராமன் உயிரோடு இருந்திருந்தால் மகன் சீனிவாசனின் படிப்புக்கு என்னவெல்லாம் செய்திருப்பாரோ, அதற்குக் கொஞ்சமும் குறைவில்லாமல் அக்கறை காட்டுகிறார்” என மனம் நெகிழ்ந்து நடிகர் சிவகார்த்திகேயனை பாராட்டியுள்ளார் இயக்குநர் இரா.சரவணன்.