K U M U D A M   N E W S
Advertisement

இந்தியாவிலேயே தமிழக காவல்துறை தான்  சிறப்பாக செயல்படுகிறது - டிஜிபி சங்கர் ஜிவால்

போதைப் பொருளை தடுக்கும் பணியில் இந்தியாவிலேயே தமிழக காவல்துறை தான்  சிறப்பாக செயல்படுகிறது என்று டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். 

தனியாருக்கு பாதுகாப்பு வழங்கும் நடைமுறையை தவிர்க்க வேண்டும் - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

பொதுமக்கள் வரிப் பணத்தில் ஊதியம் பெறும் காவல்துறையினர் பொது மக்களுக்கு தான் சேவை செய்ய வேண்டுமே தவிர, தனியாருக்கு பாதுகாப்பு வழங்க பயன்படுத்தக் கூடாது என அறிவுறுத்திய சென்னை உயர் நீதிமன்றம், காவல்துறையினரை தனியாருக்கு பாதுகாப்பு வழங்க பயன்படுத்தும் நடைமுறையை தவிர்க்க வேண்டும் என்று தமிழக அரசுக்கும், டி.ஜி.பி.க்கும் உத்தரவிட்டுள்ளது

விஜய்-பிரசாந்த் கிஷோர் சந்திப்பு.. கூட்டணியா? தனித்தா?.. என்ன செய்ய போகிறது தவெக?

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு 8 முதல் 10 சதவீத வாக்குகள் வரை கிடைக்கக் கூடும் என தேர்தல் வியூக பொறுப்பாளர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்கள் இழப்பீடு கிடைக்காவிட்டால் மனு அளிக்கலாம் - சென்னை உயர்நீதிமன்றம் அறிவிப்பு

கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்கள் இழப்பீடு கிடைத்திருக்காவிட்டால், அரசிடம் மனு அளித்தால் பரிசீலிக்கப்படும் என தமிழக அரசுத்தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

ஆளுநருக்கு எதிரான வழக்கு – உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கோரிக்கை

அமைச்சரவை முடிவுபடி தான் ஆளுநர் செயல்பட முடியும் என்றுதான் அவருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது - அரசு

படகோட்டிக்கு ரூ.2 கோடி அபராதம்

தமிழக மீனவர்கள் 14 பேருக்கு தலா ரூ.50,000 விதித்தது இலங்கை நீதிமன்றம்

வாக்காளர்களை நீக்கியதே ஆம் ஆத்மி கட்சியின் தோல்விக்கு காரணம் - தமிழக ஒருங்கிணைப்பாளர் வசீகரன் கருத்து

டெல்லியில் சட்டப்பேரவை தொகுதிகளில் வாக்களார்களை நீக்கியதே ஆம் ஆத்மி  கட்சியின் தோல்விக்கு காரணம் என்று தமிழக ஒருங்கிணைப்பாளர் வசீகரன் குமுதம் செய்திகளுக்கு பிரத்யேகமாக பேட்டியளித்துள்ளார்.

தமிழ் மிகவும் பழமையான தொன்மையான மொழி - ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாராம்

தமிழ் மிகவும் பழமையான தொன்மையான மொழி அதனை அனைவரும் கற்று தெரிந்து கொள்ள வேண்டும்  பழங்குடியினரின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதற்கு மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாக ஆளுநர் பேசியுள்ளார். 

ஈரம் கூட காயாத தாலி..! மணமகன் மர்ம மரணம்..!

கட்டிய தாலியின் ஈரம் கூட காயாத நிலையில், நண்பர்களைப் பார்க்க செல்வதாக கூறிவிட்டு சென்ற புது மாப்பிள்ளை மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மரபணு குறைபாடு: குழந்தைக்காக ஒன்றிணைந்த தல – தளபதி ரசிகர்கள்…!

மரபணு குறைபாடு நோயால் பாதிக்கப்பட்டுள்ள திருவாரூரைச் சேர்ந்த 6 மாத பெண் குழந்தையின் சிகிச்சைக்காக அஜித் ரசிகர்கள் மற்றும் தவெக நிர்வாகிகள் இணைந்து நிதி திரட்டி வருகின்றனர். இந்த நிலையில், தங்கள் மகளை காப்பாற்றத் துடிக்கும் பெற்றோரின் அவலநிலை, பார்ப்போரை கண்கலங்க வைக்கிறது.