K U M U D A M   N E W S

சென்னை

https://magazine.kumudam.ai/api/v1/getUNNews?site=kumudamnews&limit=25&offset=0&order=created_at&post_tags=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88

சென்னையில் மேலும் 10 இடங்களில் ஸ்மார்ட் வாட்டர் ஏடிஎம்கள் வரவு - மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகளிலும் விரிவாக்கம்!

பொதுமக்களுக்குச் சுத்தமான குடிநீர் வழங்கும் நோக்கில், சென்னை மெட்ரோ வாட்டர், மேலும் 10 புதிய இடங்களில் திறன்மிகு தானியங்கி குடிநீர் வழங்கும் இயந்திரங்களை (Smart Water ATM) அமைக்கத் திட்டமிட்டுள்ளது.

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்: தமிழகத்தில் 14 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை!

வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால், இன்று (அக். 3) சென்னை உட்பட 14 மாவட்டங்களுக்குக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இது இன்று இரவுக்குள் ஒடிசா - ஆந்திரா கடலோரப் பகுதியில் புயலாகக் கரையை கடக்க வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

கரூர் கூட்ட நெரிசல் விவகாரம்: சிபிஐ விசாரணைக்கு மறுப்பு தெரிவித்த உயர் நீதிமன்றம்!

கரூர் தவெக கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரிய மனுக்களைச் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

வடசென்னைப் பிரபல ரவுடி நாகேந்திரன் உடல்நிலை மோசம்: ஸ்டான்லி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!

வடசென்னையின் பிரபல தாதாவும், ஆயுள் தண்டனைக் கைதியுமான நாகேந்திரன் (ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு A1) கல்லீரல் பாதிப்பு காரணமாக உடல்நிலை மோசமடைந்துள்ளது. அவர் தற்போதுச் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையின் சிறைக் கைதிகள் வார்டில் தீவிர சிகிச்சைப் பெற்று வருகிறார்.

சென்னையில் பரபரப்பு.. முதலமைச்சர் ஸ்டாலின், நடிகை த்ரிஷா உட்படப் பலரின் இல்லங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

சென்னை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இல்லம், கிண்டி ஆளுநர் மாளிகை, நடிகை த்ரிஷா மற்றும் எஸ்.வி. சேகர் ஆகியோரின் வீடுகளுக்கு ஒரே நேரத்தில் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

கஜகஸ்தானில் சாம்பியன் பட்டம்.. உலக செஸ் சாம்பியன் ஷர்வானிகாவுக்கு பிரம்மாண்ட வரவேற்பு!

கஜகஸ்தானில் நடைபெற்ற உலக 'கேடட்' செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் 10 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற அரியலூரைச் சேர்ந்த இளம் வீராங்கனை ஷர்வானிகாவுக்கு, சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

35 கோடி ரூபாய் கோகைன் கடத்திய ‘ஸ்டூடண்ட் ஆஃப் தி இயர்’ பட நடிகர் சென்னையில் கைது!

பாலிவுட் நடிகர் ஒருவர் சென்னை விமான நிலையத்தில் 3.5 கிலோ கோகைன் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டார். சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த நடிகர், தனது டிராலியில் ரகசிய அறை அமைத்து, ரூ.35 கோடி மதிப்புள்ள போதைப்பொருளைக் கடத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்: தமிழகத்தில் அக்டோபர் 2 முதல் கனமழைக்கு வாய்ப்பு!

வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, அக்டோபர் 2 முதல் 4ஆம் தேதி வரை தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மகன் மீது பொய் வழக்கு- டிஜிபி அலுவலகம் முன்பு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தீக்குளிக்க முயற்சி; பரபரப்பு!

திருவல்லிக்கேணி போலீஸ் தனது மகன் மீது பொய் வழக்குப் பதிவு செய்ததாகக் குற்றம்சாட்டி, சென்னை டிஜிபி அலுவலகம் முன் ராணி, மணி மற்றும் மணிமாறன் ஆகிய மூவர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

அமராவதி உணவகத்தில் 2-வது நாளாக ED சோதனை: சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் குறித்து தீவிர ஆய்வு!

சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் தொடர்பாக எழுந்த புகார்களின் அடிப்படையில், சென்னை டிடிகே சாலையில் உள்ள பிரபலமான அமராவதி உணவகம் மற்றும் அதன் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை (ED) அதிகாரிகள் இன்றும் இரண்டாவது நாளாக அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை ஐஐடி-யும், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனமும் ஒப்பந்தம்.. மின்சார வாகனத் தொழில்நுட்பத்தில் ஊழியர்களுக்குச் சிறப்புப் பயிற்சி!

மின்சார வாகனத் தொழில்நுட்பம், ஆராய்ச்சி மற்றும் ஊழியர் திறன் மேம்பாட்டை ஊக்குவிக்க, சென்னை ஐஐடி மற்றும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

சென்னை விமான நிலையக் கோவிலில் அதிர்ச்சி.. சாமி தரிசனம் செய்ய வந்த பெண் பலி!

சென்னை விமான நிலைய வளாகத்தில் உள்ள சக்தி சந்தியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்த கோமதி (49), திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். இவர் இதய நோய்க்குச் சிகிச்சை பெற்று வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

“உலகின் மிகப்பெரிய செல்வம் கல்வி” – நடிகர் சிவகார்த்திகேயன்

எந்த பின்னணியும் இல்லாமல் ஒரு துறைக்குள் நுழைவதே அசாத்தியமான விஷயம் என நடிகர் சிவகார்த்திகேயன் பேச்சு

பெரம்பூரில் ரயில் கேரேஜில் தீ விபத்து - ஊழியர்கள் துரிதமாக செயல்பட்டதால் அசம்பாவிதம் தவிர்ப்பு

ஊழியர்களின் துரிதமாக செயலால் பெரும் அசாம்விதம் தவிர்க்கப்பட்டது

சென்னையில் லேசான மழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

நீலகிரி, கோயம்புத்தூர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 5 மாவட்டங்களில் இன்று (செப்.25) கனமழைக்கு வாய்ப்பு

ஆன்லைன் டிரேடிங்: மூதாட்டியிடம் ரூ.2.49 கோடி மோசடி...2 பேர் கைது

ஆன்லைன் டிரேடிங் மூலம் மூதாட்டியிடம் ரூ.2.49 கோடி மோசடி செய்த வழக்கில் 2 பேர் கைது

நீலகிரி, கோவைக்கு கனமழை; பிற மாவட்டங்களில் வெயில் சுட்டெரிக்கும் - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் தமிழகத்தில் நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் கனமழை பெய்யும். மற்ற மாவட்டங்களில் வெப்பநிலையும் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் மர்ம காய்ச்சலுக்கு 6 வயது சிறுமி உயிரிழப்பு

சென்னை வடபழனியில் மர்ம காய்ச்சல் காரணமாக 6 வயது சிறுமி உயிரிழப்பு குறித்து போலீசார் விசாரணை

மாதம்பட்டி ரங்கராஜுக்கு போலீசார் சம்மன்

வருகிற 26ஆம் தேதி நீலாங்கரை காவல் நிலையத்தில் மாதம்பட்டி ரங்கராஜு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பட்டுள்ளதாக தகவல்

அரசு மருத்துவமனை வளாகத்தில் மோதல்: கல்லூரி மாணவர்கள் வெறிச்செயல்!

சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகத்தில் இரண்டு கல்லூரி மாணவர் குழுக்களிடையே மோதல் ஏற்பட்டது. ஒரு மாணவரிடம் இருந்து நகைகள் பறிக்கப்பட்ட நிலையில், இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீட்டில் புகுந்து தாக்குதல்: ஓய்வு பெற்ற அதிகாரி குடும்பத்தினர் மீது ரவுடி, திருநங்கைகள் கும்பல் வெறிச்செயல்!

சென்னை கோயம்பேட்டில் வாடகை வீட்டு விவகாரத்தில், ஓய்வு பெற்ற வணிக வரித்துறை அதிகாரியின் வீட்டில் புகுந்து தாக்கிய ரவுடி, வழக்கறிஞர்கள் மற்றும் திருநங்கைகள் உள்ளிட்ட 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சூளைமேடு விவகாரம்: 'பொறுப்பு அதிகாரி யார்? - மாநகராட்சிக்கு மீண்டும் கடிதம் அனுப்பிய போலீஸ்!

சென்னை சூளைமேட்டில் மழைநீர் வடிகாலில் விழுந்து பெண் உயிரிழந்த விவகாரத்தில், பொறுப்பு அதிகாரி யார் என விளக்கம் கேட்டு சென்னை மாநகராட்சிக்கு சூளைமேடு போலீசார் மீண்டும் கடிதம் அனுப்பியுள்ளனர்.

சுகுணா குழுமத்தில் வருமானவரித்துறை சோதனை- முக்கிய ஆவணங்கள் சிக்கியது?

சோதனையில் தங்கம், ரியல் எஸ்டேட் முதலீடு ஆவணங்கள் சிக்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது

கொளத்தூரில் பயங்கரம்: நண்பனுக்காகச் சண்டையிடச் சென்ற 16 வயது சிறுவன் அடித்துக் கொலை!

சென்னை கொளத்தூரில் நண்பனுக்காகச் சண்டையிடச் சென்ற 16 வயது சிறுவன், மற்றொரு கும்பலால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வீட்டில் 9.7 கிலோ குட்கா பதுக்கல் - வடபழனியில் முதியவர் கைது; போலீசார் தீவிர விசாரணை!

வடபழனியில் வீட்டில் குட்கா பதுக்கி வைத்து விற்பனை செய்த 68 வயதான முதியவர் ஒருவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 9.7 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.