K U M U D A M   N E W S

உலகம்

மீண்டும் மீண்டுமா? விபத்தில் சிக்கிய நடிகர் அஜித் கார்.. கவலையில் ரசிகர்கள்!

அஜித்குமார் இத்தாலியில் நடைபெற்ற GT 4 ஐரோப்பியன் ரேஸ் போட்டியின் இரண்டாவது ரேஸில் பங்கேற்ற நடிகர் அஜித்குமார் விபத்தில் சிக்கினார்.

சொகுசு பயணக் கப்பலில் பயங்கர தீவிபத்து – உயிர்பிழைக்க கடலில் குதித்த பயணிகள்!

இந்தோனேசியா தலாவுத் தீவிலிருந்து மனாடோ நகரை நோக்கி 280 பேருடன் சென்ற சொகுசு கப்பலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்தத் தீ விபத்தில் உயிர் பிழைக்கக் கடலில் குதித்த பயணிகளை மீட்டும் பணிகள் தீவிரமடைந்துள்ளது.

சவூதி இளவரசர் ‘தூங்கும் இளவரசர்’ காலமானார்!

சவூதி அரேபியாவின் ‘தூங்கும் இளவரசர்’ என அழைக்கப்பட்ட அல்-வலீத் பின் காலித் பின் தலால் (Prince Al-Waleed bin Khalid bin Talal) 20 ஆண்டுகளாகக் கோமாவில் இருந்த நிலையில் அல்-வலீத் இன்று உயிரிழந்ததாக அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

டெல்டா விமானத்தின் என்ஜினில் ஏற்பட்ட தீ.. லாஸ் ஏஞ்சல்ஸில் பரபரப்பு

லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட டெல்டா விமானத்தின் என்ஜினில் தீப்பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பாராக்ளைடிங் விபத்து: 'Fearless Felix' ஃபெலிக்ஸ் பாம்கார்ட்னர் மறைவு!

இத்தாலியில் சாகசம் செய்தபோது கட்டுப்பாட்டை இழந்து நீச்சல்குளம் அருகே விழுந்து, ஆஸ்திரியாவைச் சேர்ந்த பாராக்ளைடிங் வீரர் ஃபெலிக்ஸ் பாம்கார்ட்னர் உயிரிழந்த செய்தி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை எண்ணத்தை மாற்றிய நாய்.. செல்ல நாய்க்காக அனைத்தையும் உதறிய கோடீஸ்வரர்!

ஜப்பானைச் சேர்ந்த ஹிரோடகா சாய்டோ (வயது 54) என்ற கோடீஸ்வரர், ஒரு செல்ல நாயின் மீது கொண்ட பாசத்தின் காரணமாகத் தனது ஆடம்பர வாழ்க்கையை விட்டுவிட்டு புதிய பாதையில் பயணிக்கிறார்.

புத்த துறவிகளுடன் உறவு.. கோடிக்கணக்கில் பணம் பறித்த பெண்

தாய்லாந்தில் ஒரு இளம் பெண் புத்தத் துறவிகளை தனது வலையில் சிக்கவைத்து கோடிக்கணக்கான பணம் பறித்த சம்பவம் அந்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பஹல்காம் தாக்குதல்: TRF-ஐ அமைப்பை வெளிநாட்டு பயங்கரவாத அறிவித்தது அமெரிக்கா!

பஹல்காம் தாக்குதலுக்குப் பின்னணியில் இருந்த பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாதக் குழுவான லஷ்கர்-இ-தொய்பாவின் (LeT) பிரதிநிதியான தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்டை அமெரிக்கா ஒரு வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளது.

இலங்கையில் கண்டெடுக்கப்பட்ட 65 சிறுமிகளின் எலும்புகள்...செம்மணியில் மீண்டும் பரபரப்பு

செம்மணி பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ள 65 சிறுமிகளின் எலும்புகளுடன் பள்ளிப் பைகள் மற்றும் பொம்மைகள் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இனி 16 வயதில் வாக்களிக்கலாம்.. அரசின் புதிய அறிவிப்பு

வாக்களிப்பதற்கான வயதை 18-ல் இருந்து 16 ஆக குறிப்பதாக இங்கிலாந்து அரசு அறிவித்துள்ளது.

ரஷ்யா உடனான வர்த்தகம் - இந்தியாவுக்கு NATO அமைப்பின் கடும் எச்சரிக்கை!

ரஷ்யாவுடன் தொடர்ந்து வர்த்தகம் செய்தால் கடும் பொருளாதார தடையைச் சந்திக்க நேரிடும் என இந்தியாவுக்கு NATO அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

டிரம்பின் இரட்டை நிலைப்பாடு.. உக்ரைன் போர் முடிவுக்கு வருமா?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனியார் செய்தி சேனலுக்கு அளித்த சிறப்புப் பேட்டியில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மீதுள்ள தனது நம்பிக்கையை வெளிப்படுத்தியிருப்பது உலக அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் போர் ஒரு முடிவுக்கு வராத நிலையில், டிரம்பின் இந்தக் கருத்து பல்வேறு கேள்விகளையும், எதிர்பார்ப்புகளையும் கிளப்பியுள்ளது.

200 ஆண்டுகள் பழமையான மரத்தை வெட்டிய வழக்கு: இருவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை!

இங்கிலாந்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமையான மரத்தை வெட்டிய இருவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2023ல் மரத்தை வெட்டிய கிரகாம், காருதெர்ஸ் இருவரும் அதனை வீடியோ ஆகவும் பதிவு செய்து வெளியிட்ட நிலையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பூமிக்குத் திரும்பினார் சுபான்ஷு சுக்லா.. தாயின் ஆனந்தக் கண்ணீர்!

இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா சர்வதேச விண்வெளி நிலையத்தில் தனது ஆய்வுகளை வெற்றிகரமாக முடித்துவிட்டு பூமிக்கு திரும்பினார். சுபான்ஷு சுக்லா பத்திரமாக பூமிக்கு திரும்பியதால் அவரது தாய் ஆனந்த கண்ணீராக தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

நெதர்லாந்துக்கு புறப்பட்ட விமானம்.. வெடித்து சிதறிய அதிர்ச்சி சம்பவம்

லண்டன் சவுத்தெண்ட் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது.

விபத்துக்குள்ளான மலேசிய ஹெலிகாப்டர்.. அதிர்ச்சி வீடியோ

மலேசியாவில் பயிற்சியில் ஈடுபட்ட போலீஸ் ஹெலிகாப்டர் ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பல்வேறு நாடுகளில் அடுத்தடுத்து நிலநடுக்கம்.. அச்சத்தில் உறைந்த மக்கள்!

இந்தியாவில் இமாச்சலப் பிரதேசம் மற்றும் மியான்மர் பகுதிகளில் இன்று காலை லேசான மற்றும் மிதமான நிலநடுக்கங்கள் ஏற்பட்டு, அப்பகுதி மக்கள் இடைக்கால அச்சத்தில் உறைந்தனர்.

அண்டார்டிக் பகுதி கடல் நீரில் அதிகரிக்கும் உப்புத்தன்மை.. விஞ்ஞானிகள் கவலை!

PNAS (Proceedings of the National Academy of Sciences)-ல் வெளியிடப்பட்டுள்ள ஆய்வின் படி, வழக்கத்திற்கு மாறாக நம்பமுடியாத அளவிற்கு அண்டார்டிக் பகுதி கடல் நீரானது அதிக உவர்ப்புத்தன்மை கொண்டதாக மாறி வருவது கண்டறியப்பட்டுள்ளது.

காப்பர், மருந்து பொருட்கள் மீது வரிவிதிப்பு.. டிரம்ப் அதிரடி அறிவிப்பு!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், காப்பர் (தாமிரம்) இறக்குமதியில் 50% வரியும், மருந்து பொருட்கள் இறக்குமதியில் 200% வரியும் விதிக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.

சர்வதேச விண்வெளி நிலையம்.. 13ம் தேதி பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா!

இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் வகையில், இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா சர்வதேச விண்வெளி நிலையத்தில் தனது ஆய்வுகளை வெற்றிகரமாக முடித்துவிட்டு பூமிக்கு திரும்பவுள்ளார். சுபான்ஷூ சுக்லாவுடன் சென்ற மூவரும் வரும் ஜூலை 13ம் தேதி பூமிக்கு மீண்டும் திரும்பவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

6 வயது சிறுமியை மணம் முடித்த 45 வயது நபர்.. வேடிக்கை பார்க்கும் தாலிபான் அரசு

ஆப்கானிஸ்தானில் 45 வயது நபர் 6 வயது சிறுமியை மணம் முடித்த நிலையில், அவருக்கு தண்டனை வழங்காமல் திருமணத்தை மறைமுகமாக தாலிபான்கள் அரசு ஆதரித்துள்ளதற்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.

அமெரிக்காவில் வெளிநாட்டுப் பொருட்கள் மீது கூடுதல் வரி விதிப்பு.. ரூ.8 லட்சம் கோடி வருவாய்!

வெளிநாட்டுப் பொருட்கள் மீதான கூடுதல் வரிவிதிப்பின் மூலம் அமெரிக்க அரசுக்கு இந்தாண்டு ரூ.8 லட்சம் கோடி வருவாய் கிடைத்துள்ளது. இந்த அண்டு இறுதிக்குள் ரூ.26 லட்சம் கோடியாக அதிகரிக்கும் என அமைச்சரவை கூட்டத்தில் அந்நாட்டு நிதி அமைச்சர் ஸ்காட் பெசென்ட் தெரிவித்துள்ளார்.

கவுதமாலாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: இது ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவு!

கவுதமாலா நாட்டில் இன்று (ஜூலை 9) காலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவான இந்த நிலநடுக்கம், அந்த நாட்டின் பல பகுதிகளிலும் உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதிய அரசியல் கட்சி தொடங்கிய எலான் மஸ்க் .. எக்ஸ் தளத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அமெரிக்க தொழிலதிபர் மற்றும் எக்ஸ்பேஸ், டெஸ்லா நிறுவனங்களின் நிறுவனர் எலான் மஸ்க், அரசியலிலும் தனது புதிய அரசியல் பாதையை வகுக்கத் தொடங்கியுள்ளார். அவர் “America Party” (அமெரிக்கா பார்ட்டி) என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை தொடங்கியுள்ளதாக தனது எக்ஸ் தளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.