K U M U D A M   N E W S

தமிழ்நாடு

மூச்சு விடாமல் சீரியஸாக பேசிய மேயர் பிரியா - சிரிப்பு காட்டிய அமைச்சர் சேகர்!

Mayor Priya Press Meet: சென்னை மேயர் பிரியா செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது மூச்சுவிடாமல் சீரியஸாக பேசியதால் சிரிப்பு காட்டிய அமைச்சர்

காரில் கடத்தி நிர்வாணமாக்கி கொடூர தாக்குதல்.. கடத்தல் கும்பல் தலைவன் காங். நிர்வாகி என தகவல்

காரில் கடத்தி கொடூரமாக தாக்கி அவரிடமிருந்து 13,62,500 ரூபாயை அபகரித்ததாக காங்கிரஸ் கட்சி பிரமுகரும் பிரபல ரவுடியுமான ஓ.வீ.ஆர்.ரஞ்சித் மற்றும் கூட்டாளிகள் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தென்னைக்கு இடையே அவகோடா.. லாபத்தை அள்ளித்தரும் என விவசாயி உறுதி!..

பல அடுக்கு பலபயிர் சாகுபடி முறையைப் பயன்படுத்தி உருவாக்கினால், நோய் தாக்குதலின்றி வெற்றிகரமாக அவகோடா சாகுபடி செய்யலாம் என்று திண்டுக்கல் விவசாயி ரவிச்சந்திரன் உறுதிபட தெரிவித்துள்ளார்.

திருமணத்தை மீறிய உறவு.. இடைஞ்சலாக இருந்த குழந்தையை கொன்ற கொடூர தாய்..

பரமத்திவேலூர் அருகே திருமணத்தை மீறிய உறவுக்கு இடையூறாக குழந்தையை தாயே கிணற்றில் வீசி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மருத்துவக் கல்லூரி மாணவி விபரீத முடிவு... 5வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை... காரணம் என்ன?

காஞ்சிபுரம் மருத்துவக் கல்லூரியில் மாணவி ஒருவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குப்பைகள் போல் கொட்டிக் கிடந்த விருதுகள்.. பணம் கட்டி ஏமாந்த திரை பிரபலங்கள் அதிருப்தி..

விருது வழங்கும் நிகழ்ச்சியில் குப்பைகள் போல் கொட்டிக்கிடந்த விருதுகளை எடுத்துச்செல்லக் கூறியதால், அதிருப்தி அடைந்த விருது பெற்றவர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றதும், செலுத்திய பணத்தை திரும்ப கேட்டதும் சலசலப்பை ஏற்படுத்தியது.

Chennai Car Race: ஃபார்முலா 4 கார் பந்தயம் கோலாகலமாக நிறைவு... முதலமைச்சர், பிரபலங்கள் பாராட்டு!

சென்னையில் கடந்த இரண்டு தினங்களாக நடைபெற்ற ஃபார்முலா 4 கார் பந்தயம் கோலாகலமாக நிறைவுபெற்றது. இதனையடுத்து முதலமைச்சர் ஸ்டாலின், முன்னாள் கிரிக்கெட் வீரர் கங்குலி உள்ளிட்ட பிரபலங்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

விறுவிறுப்பாக நடந்த கார் பந்தயம்.. ஜெட் வேகத்தில் பாய்ந்த கார்கள்.. ஆவலுடன் கண்டு ரசித்த பிரபலங்கள்!

சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தங்கள் குழந்தைகளுடன் திரண்டு வந்த பொதுமக்கள் அதிவேகத்தில் கார்கள் சீறிப்பாய்ந்து செல்வதை பிரமிப்புடன் கண்டு ரசித்தனர். கார் பந்தயத்தில் பங்கேற்ற சில வீரர்களின் கார்களின் பழுதடைந்து அவர்களுக்கு ஏமாற்றம் அளித்தன. மேலும் போட்டி விறுவிறுப்பாக நடந்தபோது நாய் ஒன்று குறுக்கே ஓடி வந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

தமிழ்நாட்டில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு... ஜாக்கிரதையா இருங்க மக்களே!

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (செப்டம்பர் 1) தமிழகத்தில் சில மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மஞ்சுவிரட்டில் முன்விரோதம்.. இருபிரிவினர் இடையே கடும் மோதல்.. சாலை மறியலால் பரபரப்பு

மதுரை வாடிப்பட்டி அருகே மஞ்சுவிரட்டு நடத்துவதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டதை அடுத்து, பாதிக்கப்பட்டவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.