K U M U D A M   N E W S
Kumudam Ad

தமிழ்நாடு

FIR லீக் ஆனது எப்படி..? - சென்னை கமிஷனர் அருண் விளக்கம்

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக எஃப்ஐஆர் கசிந்திருக்கிறது. எஃப்ஐஆர் தொடர்பாக கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தவறு செய்தவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார்.

திமுக ஆட்சி ரவுடிகளின் ராஜ்ஜியமாக தான் உள்ளது - தமிழிசை சௌந்தரராஜன் குற்றச்சாட்டு..!

திமுக எப்பொழுது எல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்பொழுதெல்லாம் ரவுடிகளின் ராஜியமாக தான் உள்ளது என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.

தத்தெடுக்க விண்ணப்பித்ததால் வளர்ப்பு மகளாக அறிவிக்க முடியாது - சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டம்

ரயில் கழிப்பிடத்தில் கண்டெடுத்து வளர்த்த ஒன்றரை வயது பெண் குழந்தையை, தத்தெடுக்க விண்ணப்பித்ததன் மூலம் மட்டும், வளர்ப்பு மகளாக அறிவிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

தி.மு.க வை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை செருப்பு அணிய மாட்டேன் - அண்ணாமலை சபதம்

தமிழகத்தில் தொடர்ந்து திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதால், தி.மு.க வை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை செருப்பு அணிய மாட்டேன் என்று பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை சபதம் விடுத்துள்ளார். 

டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் திமுக அரசு நாடகம் ஆடுகிறது - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு

டங்ஸ்டன் கனிம சுரங்க விவகாரத்தில் மத்திய மாநில இரு அரசுகளும் மக்களை ஏமாற்றுகின்றனர். திமுக அரசு நாடகம் ஆடுகிறது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

ரஜினியை சந்தித்த உலக செஸ் சாம்பியன் குகேஷ்.. என்னவா இருக்கும்?

உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற இளம் வீரர் குகேஷ், முன்னணி நடிகரான ரஜினியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன் நாடகமாடியது அம்பலம்

பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் குறித்த அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.

குற்றவாளிகளை ஊக்குவிக்கும் ஸ்டாலின் அரசு.. சமூக விரோதிகளின் கூடாரம் திமுக- இபிஎஸ் கண்டனம்

சமூக விரோதிகளின் கூடாரமாக ஆளும் திமுக திகழ்கிறது என்பதற்கு அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்தேறிய பாலியல் சம்பவமே சான்றாக அமைந்துள்ளது என எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். 

மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு.. சென்னையில் வெடித்த போராட்டம்

அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் பாதிக்கப்பட்ட மாணவிக்கு நியாயம் கேட்டு பல்வேறு கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சுனாமி நினைவு தினம்.. உயிரிழந்தவர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மலர் தூவி அஞ்சலி

சுனாமி நினைவு தினத்தையொட்டி மீனவ மக்களுடன் இணைந்து கடற்கரையில் பால் ஊற்றியும், மலர் தூவியும் உயிரிழந்த நபர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அஞ்சலி செலுத்தினார்.