K U M U D A M   N E W S
Kumudam Ad

தமிழ்நாடு

வழிப்பறி வழக்கில் கைதான அரசு அதிகாரிகள்.. ஜாமின் வழங்கிய நீதிமன்றம்

சென்னையில் முகமது கவுஸ் என்பவரை கடத்தி 20 லட்சம் ரூபாய் பறித்த வழங்கில் கைது செய்யப்பட்ட அரசு அதிகாரிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.

அண்ணா வழியில் திமுக நடக்கவில்லை-  அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சாடல்

அண்ணா வழியில் திமுக நடக்கவில்லை என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது தந்தைக்கு தான் சிலை வைக்கிறரே தவிர அண்ணாவின் பெயரை எதற்கும் வைக்கவில்லை என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

நாகேந்திரனுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க கோரி மனு.. அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நாகேந்திரனுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்ட  வழக்கை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர்.

பெண்களை விடாமல் துரத்திய கார்.. வெளியான பரபரப்பு சிசிடிவி காட்சி

ஈசிஆரில் பெண்கள் சென்ற காரை சொகுசு காரில் சென்ற இளைஞர்கள் சிலர் துரத்திய சம்பவம் தொடர்பான புதிய சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேர்வாணையத்தின் முறைகேட்டை வெளிப்படுத்தியதால் உயிரை பறிக்க சதி.. பெண் அதிகாரி புகார்

கடந்த ஆண்டு தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் ஏடிஜிபியாகவும் தற்போது தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் ஏடிஜிபியாக பணிபுரிந்து வரும் கல்பனா நாயக், தன்னை கொல்ல சதித்திட்டம் நடந்திருக்குமோ? என்ற அடிப்படையில் புகார் அளித்திருக்கும் விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தவெக தொடக்க விழா.. பேச்சும் இல்லை, எழுச்சியும் இல்லை.. விஜய் தயங்குவது ஏன்?

தமிழக வெற்றிக் கழக தொடக்க விழாவில் விஜய் உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் பேசுவதை தவிர்த்த சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்விரோதத்தால் நண்பரை கொலை செய்த கொடூரம்.. மதுபான கடை முன்பு தூக்கி வீசப்பட்ட தலை

மதுரையில் முன்விரோதம் காரணமாக நண்பரை கொலை செய்து தலையை எடுத்து நான்கு கிலோமீட்டர் தூரம் தூக்கி வந்து போட்டுச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

நான் எந்த கட்சியும் சேர்ந்தவன் அல்ல.. ஈசிஆர் சம்பவத்தில் கைதான சந்துரு வீடியோ

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் சொகுசு காரில் சென்ற இளைஞர்கள் சிலர் காரில் சென்ற இளம் பெண்களை துரத்திய சம்பவத்தில் கைதான சந்துரு என்பவரின் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வழிப்பறி வழக்குகளில் அடுத்தடுத்து சிக்கும் முக்கிய அரசு அதிகாரிகள்.. மேலும் ஒரு வழக்குப் பதிவு

சென்னையில் தொடர் வழிப்பறி வழக்கில் ஏற்கனவே வருமானவரித்துறை அதிகாரிகள் மூன்று நபர்கள், காவல்துறை அதிகாரிகள் இரண்டு நபர்களை திருவல்லிக்கேணி போலீசார் கைது செய்துள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு வழக்கில் வணிகவரித்துறை அதிகாரிகள் இருவர் மீது ஆயிரம் விளக்கு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

ஜனநாயக சரித்திரத்தைப் படைத்திடும் போராட்டம்.. ஆட்சியை விரைவில் கட்டமைப்போம்- ஆதவ் அர்ஜுனா

தமிழ்நாடு அரசியலில் மாபெரும் ஜனநாயக சரித்திரத்தைப் படைத்திடும் போராட்டத்தில் தமிழக வெற்றிக் கழகம் இரண்டாம் ஆண்டு அடியெடுத்து வைப்பதாக தவெக தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா பெருமிதம் தெரிவித்துள்ளார்.