K U M U D A M   N E W S

தமிழ்நாடு

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு.. 1.8 கிமீ தொலைவிற்கு இரும்பு தடுப்பு வேலி..!

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் காளைகள் வாடிவாசல் இருந்து வெளியேறிய பிறகு தப்பிச் செல்லாமல் இருக்க 1.8 கிமீ தொலைவிற்கு இரும்பு தடுப்பு வேலி அமைக்கும் பணி தீவிரமடைந்துள்ளது.

பெண்கள் பாதுகாப்பு.. பெப்பர் ஸ்பிரே மற்றும் SOS Alarm வழங்கிய எடப்பாடி பழனிச்சாமி..!

அதிமுக அலுவலகத்தில் நடைப்பெற்ற பொங்கல் விழாவில் பெண்களுக்கு பெப்பர் ஸ்பிரே மற்றும் SOS Alarm கருவியை எடப்பாடி பழனிச்சாமி வழங்கினார்.

கடத்தலில் 20 லட்சம் ரூபாய் பறித்த வழக்கு.. காவல், ஐ.டி அதிகாரிகளின் ஜாமின் மனு தள்ளுபடி..!

தனியார் நிறுவன ஊழியரை காரில் கடத்தி 20 லட்சம் ரூபாய் பறித்த வழக்கில் கைது செய்யப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர், வருமான வரித்துறை அதிகாரிகளின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கும்பகோணம் மாநகராட்சி ஆணையர் மீது ஒழுங்கு நடவடிக்கை.. சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!

கும்பகோணம் கோவில் குளங்களில், கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற பிறப்பித்த உத்தரவை அமல்படுத்த ஒத்துழைக்காத கும்பகோணம் மாநகராட்சி ஆணையர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

என்.ராமலிங்கம் என்.ஆர்.கன்ஸ்ட்ரக்சன் என்ற நிறுவனத்தில் 5-வது நாளாக சோதனை..!

அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் நெருங்கிய உறவினரான என்.ராமலிங்கம் என்.ஆர்.கன்ஸ்ட்ரக்சன் என்ற நிறுவனத்தில் கோவை, பெங்களூர், சென்னை உட்பட பல்வேறு இடங்களில் கட்டுமான தொழில்கள் உட்பட பல்வேறு நிறுவனங்களில் 5-வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்.

வெளியான ஆடியோ.. பள்ளி ஆசிரியர் எடுத்த விபரீத முடிவு..தென்காசியில் அதிர்ச்சி

புளியங்குடி அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் பணியாற்றிய பெண் ஆசிரியர் எட்டு மாதங்களுக்கு முன்னர் தற்கொலை செய்து கொண்ட காரணமாக வெளியான ஆடியோ விவகாரம்

உயர்ந்த விமானக் கட்டணம்.. உறைந்து போன பயணிகள்

மதுரை, திருச்சி, கோவை, தூத்துக்குடி, சேலம், திருவனந்தபுரம் விமான கட்டணங்கள் பலமடங்கு உயர்வு

யானை வழித்தடத்தில் மண் எடுத்த விவகாரம்.. சிறப்பு புலனாய்வு குழுவை நியமனம்..!

கோவையில் யானை வழித்தடத்தில்  மண் எடுத்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழுவை நியமித்து  சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழக விவகாரம்.. முதல்வர் VS எதிர்கட்சி தலைவர் சட்டப்பேரவையில் காரசார விவாதம்..!

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் தொடங்கி பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வரை முதலமைச்சருக்கும் எதிர்க்கட்சித்தலைவருக்கும் இடையிலான விவாதம் இறுதியில் சவாலில் நிறைவடைந்தது. 

தந்தை பெரியாரை கொச்சைப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் - திருமாவளவன்

எங்களை ஜாதியை பாகுபாடு காட்டி ஓரங்கட்டப்பட்டாலும், ஒதுக்கி வைத்தாலும் விடுதலைச் சிறுத்தைகள் தான் மைய புள்ளி என்றும், தந்தை பெரியாரை கொச்சைப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.