K U M U D A M   N E W S
Kumudam Ad

தமிழ்நாடு

ரூ.5 லட்சம் இழப்பீடு.. பிரமாண பத்திரம் எழுதி வாங்கும் மாவட்ட நிர்வாகம்.. ராஜசேகரன் குற்றச்சாட்டு

ஜல்லிக்கட்டில் விபத்து மற்றும் உயிரிழப்பு நேரிடும் பட்சத்தில் நபர் ஒருவருக்கு இழப்பீடாக 5 லட்சம் ரூபாய் விழா நடத்தும் கமிட்டியினரே செலுத்த வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் எழுதி வாங்குவதால் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை மாநிலத் தலைவர் ராஜசேகரன் குற்றம்சாட்டியுள்ளார்.

போத ஏறிப் போச்சு... பஸ்ச திருடியாச்சு... மாட்டிக்கிட்ட மெக்கானிக்!

சென்னையில் நள்ளிரவில் பணிமனையில் இருந்து மாநகர பேருந்தை திருடி இயக்கிச் சென்ற கார் மெக்கானிக்கை போலீஸார் கைது செய்துள்ளனர். நடத்துநர் மீதான ஆத்திரத்தில், பேருந்தை கடத்தியவர் சிக்கிக் கொண்டது குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு...

பர்தா அணிந்து திருட்டு பெண் பட்டதாரியின் ஸ்கெட்ச் திருடியதற்கான காரணம் தான் ஹைலைட்!

சென்னையில் பர்தா அணிந்து பக்கத்து வீட்டில் வசிக்கும் முதியவரை தாக்கி நகையை பறித்துள்ள பெண் பட்டதாரியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சிசிடிவியை ஆராய்ந்து பெண்ணை கைது செய்த போலீசிடம் அவர் கொடுத்த வாக்குமூலம் என்ன? திருட்டுக்கான பின்னணி என்ன? பார்க்கலாம் இந்த தொகுப்பில்..

” *** உனக்கு கண்டக்டர் சீட் கேட்குதா!” முதியவரை தாக்கிய நடத்துனர் அரசு பஸ்ஸில் அநியாயம்

அரசு பேருந்தில் நடத்துனர் ஒருவர் முதியவரை தாக்கிய வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதியவர் என்று பாராமல் சட்டையை பிடித்து, இழுத்து தாக்கும் அளவிற்க்கு என்ன நடந்தது? ’92A’ பஸ்ஸில் நடந்தது என்ன? பார்க்கலாம் இந்த தொகுப்பில்...

கொலையில் முடிந்த தகராறு.. மனைவி தலையில் ஒரே போடு! உடலை காரில் வைத்து சுற்றுலா

தென்காசியில் பெண்ணை கொலை செய்து தீவைத்து எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெண் கொலை வழக்கில் கணவன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தென்காசியை திணற வைத்துள்ள கொலை சம்பவத்தை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்..

டீ குடிக்கச் சென்ற கணவன் வீட்டில் சடலமான மனைவி.. கேப்பில் கொலை செய்த மர்ம நபர்?

அதிகாலையில் கணவன் டீ குடிக்கச் சென்ற இடைவெளியில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மனைவியை மர்மநபர் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. திண்டுக்கல் அருகே நிகழ்ந்துள்ள பகீர் கொலை குறித்து பார்ப்போம்...

கழிவுநீர் தொட்டியில் விழுந்து குழந்தை பலி - இறுதி அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

விக்கிவாண்டியில் தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து குழந்தை பலியான சம்பவம் தொடர்பான வழக்கின் இறுதி அறிக்கையை 12 வாரங்களில் தாக்கல் செய்ய காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இந்தியாவிலேயே தமிழக காவல்துறை தான்  சிறப்பாக செயல்படுகிறது - டிஜிபி சங்கர் ஜிவால்

போதைப் பொருளை தடுக்கும் பணியில் இந்தியாவிலேயே தமிழக காவல்துறை தான்  சிறப்பாக செயல்படுகிறது என்று டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். 

ஓட்டுநர் உரிமம் இல்லாதவர்கள் இயக்குவது சட்டவிரோதம் - மோட்டார் வாகன விபத்து வழக்கு தீர்ப்பாயம் உத்தரவு

முறையான ஓட்டுனர் உரிமம் இல்லாதவர்கள் மூலம் 3 சக்கர பேட்டரி குப்பை வாகனத்தை இயக்குவது சட்டவிரோதம் எனத் தெரிவித்த மோட்டார் வாகன விபத்து வழக்கு தீர்ப்பாயம், குப்பை வாகனம் மோதி காயமடைந்த சிறுமிக்கு ஒரு லட்சத்து 78 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க, சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டுள்ளது.

இசையமைப்பாளர் தேவா இசை நிகழ்ச்சி.. போக்குவரத்து மாற்றம்

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் இசையமைப்பாளர் தேவா இசை நிகழ்ச்சி நடைபெறுவதை போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.