K U M U D A M   N E W S
Kumudam Ad

தமிழ்நாடு

ஞானசேகரன் மீதான குண்டர் சட்டம்... காவல்துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு..!

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில் கைதான ஞானசேகரனை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் அடைத்த உத்தரவை எதிர்த்து அவரது தாயார் தாக்கல் செய்த மனு குறித்து நான்கு வாரங்களில் காவல்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

பாலியல் வழக்கில் நேரில் ஆஜராகாத சீமான்.. விளக்கக் கடிதம் அளித்த வழக்கறிஞர்..!

நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கு விசாரணைக்காக சீமான் காவல் நிலையத்தில் இன்று (பிப்.27) ஆஜராகத நிலையில், அவரது வழக்கறிஞர் கடிதம் கொடுத்து விளக்கம் அளித்தார்.

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வழக்கு: சிறப்பு நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்த உயர்நீதிமன்றம்..!

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகைகளை ஒரே வழக்கில் இணைத்து சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.

ஈஷா யோகா மையத்தில் மகா சிவராத்திரி விழா கோலாகலம்... உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்பு

கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெற்ற சிவராத்திரி விழாவில், லட்சக்கணக்கான பக்தர்கள் ஆட்டம், பாட்டம் என உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.  

மார்ச் 10-ஆம் தேதி மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படும் ஞானசேகரன்

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனை மார்ச் 10-ஆம் தேதி மகிளா நீதிமன்றத்தில் சிறப்பு புலனாய்வு குழுவினர் ஆஜர்படுத்த உள்ளனர்.  

மாணவர்கள் இடையே மொழியை திணிக்கக்கூடாது - விஜய்

மும்மொழி கொள்கையை செயல்படுத்தினால் தான் நிதி என மத்திய அரசு கூறுவது சிறு பிள்ளைத்தனமானது என தவெக தலைவர் விஜய் விமர்சித்துள்ளார்.

விமானம் மூலம் கடத்தி வரப்பட்ட ரூ. 2.8 கோடி ரூபாய் தங்கம் பறிமுதல்.. அதிகாரிகள் விசாரணை

துபாயில் இருந்து மும்பை வழியாக சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 2.8 கோடி ரூபாய் மதிப்புடைய 3.5 கிலோ தங்கத்தை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குமுதம் செய்தியாளர் மீது தாக்குதல்.. தமிழக பத்திரிகையாளர்கள் சங்கம் கண்டனம்..!

தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய்க்கு தமிழக பத்திரிகையாளர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு புதிய விதிமுறைகள் வெளியீடு..!

ஒரு பள்ளிக்கு அங்கீகாரம் பெற்றால் போதும், ஒரு நிர்வாகத்தின் கீழ் இயங்கும் மற்ற பள்ளிகளுக்கு தனியாக அங்கீகாரம் பெற தேவையில்லை என புதிய விதிமுறைகளை சிபிஎஸ்இ அறிவித்திருக்கிறது. 

தவெக 2ஆம் ஆண்டு தொடக்க விழா... 3000 தொண்டர்களுக்கு அனுமதி...!

தமிழக வெற்றிக் கழகத்தின் 2ஆம் ஆண்டு தொடக்க விழா இன்று (பிப்.26)  மகாபலிபுரத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், இந்நிகழ்வில் பங்கேற்க 3000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது.