K U M U D A M   N E W S
Kumudam Ad

தமிழ்நாடு

பயணிகளிடம் அத்துமீறிய அரசு பேருந்து நடத்துநர்.. கழுத்தை பிடித்து கீழே தள்ளி அராஜகம்

காஞ்சிபுரத்தில் அரசு சொகுசு விரைவு பேருந்து நடத்துநர், பயணிகளை கழுத்தை பிடித்து கீழே தள்ளி அராஜகத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு.. வெளியான வானிலை அப்டேட்

தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் மிக கனமழையும், குறிப்பாக தென்மாவட்டங்களான திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மீனவர்கள் பிரச்சினைக்காக தவெக சார்பில் ஆர்ப்பாட்டம்.. விஜய் பங்கேற்பு..!

மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணவும், மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தவெக தலைவர் விஜய் பங்கேற்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மின்சார ரயில்கள் ரத்து - அலைமோதும் பயணிகள்

சென்னை கடற்கரையிலிருந்து, தாம்பரம் செல்லும் மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதால் தாம்பரம் பேருந்து நிலையத்தில் அலைமோதும் பயணிகள் கூட்டம் அதிரகரித்து காணப்படுகிறது.

சிவில் வழக்கு: விதிகளை பின்பற்ற காவல்துறைக்கு உத்தரவு

சொத்து தொடர்பான சிவில் பிரச்சினை வழக்குகளை கையாளும் போது ஏற்கனவே உள்ள  விதிகளை  முறையாக பின்பற்ற வேண்டும் என்று காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இளம்பெண்ணை காதலித்து ஏமாற்றிய நபர்.. 5 ஆண்டுகளுக்கு பிறகு கைது..!

இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்து வெளிநாடு தப்பிச் சென்றவர் 5 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை வந்த போது போலீசாரால் கைது செய்யப்பட்டார்..

பெண்குழந்தைகளுக்கு யாருமே உங்களை தொடக்கூடாது என்று சொல்லிக்கொடுங்கள் - உயர்நீதிமன்ற நீதிபதி பேச்சு

பெண் குழந்தைகளுக்கு நல்ல தொடுதல்,  தீய தொடுதல் குறித்து சொல்லி தருவதை விட,  உன்னை யாருமே தொட விடக்கூடாது என கற்றுத்தாருங்கள் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பவானி சுப்புராயன் தெரிவித்துள்ளார்.

சமூக ஆர்வலர்களை தாக்கிய மணல் மாஃபியாக்கள்!

மண் கடத்தல் குறித்து சமூக வலைதளங்களில் தகவல் வெளியிட்ட சமூக ஆர்வலர் மீது திமுக நிர்வாகி கொலை வெறி தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து, தமிழகத்தில் சமூக ஆர்வலர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு நிபந்தனையுடன் அனுமதி- சென்னை உயர் நீதிமன்றம்

சாதி, மதம் மற்றும் அரசியல் தொடர்பான நடனமோ, பாடலோ, பேனர்களோ இருக்கக்கூடாது என்ற நிபந்தனையுடன் கடலூர் மாவட்டத்தில் இரு கோவில்கள் திருவிழாவில் ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதியளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிகில் முதல் இஃப்தார் வரை: பட்டியல் போட்டு விஜயை தாக்கிய ப்ளூசட்டை மாறன்!

”நிகழ்ச்சி ஒருங்கிணைப்பில் தொடர்ந்து கோட்டை விடும் தமிழக வெற்றிக் கழகம். ரசிகர்கள், தொண்டர்களை கட்டுப்படுத்த தெரியாத விஜய்” என பிரபல திரைப்பட விமர்சகர் ப்ளூசட்டை மாறன் பதிவிட்டுள்ள பதிவு சமூக வலைத்தளங்களில் ரணகளத்தை உண்டாக்கியுள்ளது.