K U M U D A M   N E W S

தமிழ்நாடு

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு - மத போதகர் ஜான் ஜெபராஜ் முன் ஜாமின் கோரி மனுதாக்கல்

போக்சோ வழக்கில் தலைமறைவாக உள்ள கிறிஸ்துவ மத போதகர் ஜான் ஜெபராஜ் முன் ஜாமின் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

இன்ஸ்டாகிராம் மூலம் பழகி திருமணம்...2 மாதத்தில் காதல் ஜோடி எடுத்த விபரீத முடிவு

ரயில்வே தண்டவாளத்தில் காதல் ஜோடி சடலமாக கண்டெடுத்து காவல்துறையினர் விசாரணை

2 பேருந்துகள் ஒன்றோடொன்று மோதி விபத்து.. 15-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி!

கடலூர் மாவட்டம் ஆலப்பாக்கம் அருகே அரசு விரைவு பேருந்துடன் தனியார் பேருந்து மோதி விபத்து 15-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ள நிலையில், இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்கும் திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசு...இபிஎஸ் கண்டனம்

விசைத்தறி உரிமையாளர்களின் வேலை நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டவர முடியாமல் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்கும் திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழக ஆளுநர் விவகாரம்: எனக்கு காது கேட்க மாட்டேங்குது - நாகலாந்து ஆளுநர் பதில்

தமிழக ஆளுநர் விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்த எழுப்பப்பட்ட கேள்விக்கு நாகலாந்து ஆளுநர் இல.கணேசன் எனக்கு இந்தக் காது வேலை செய்ய மாட்டேங்குது மிஷின் வைக்க வேண்டும் என்று கூறினார்.

பாமகவில் பரபரப்பு...அன்புமணியின் பதவியை பறித்த ராமதாஸ்

பாமக தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்குவதாக அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.

சிறுவன் ஏற்படுத்திய கார் விபத்தில் முதியவர் பலி.. புதிய சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு!

14 வயது சிறுவன் கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய சம்பவத்தில் 69 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து, அலட்சியமாக செயல்பட்டு மரணத்தை விளைவித்தல் என்ற புதிய சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

வீரபாண்டி ஆறுமுகம் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு.. மீண்டும் விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் அதிரடி!

மறைந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து, அவரது குடும்பத்தினரை விடுவித்து சேலம் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், வழக்கில் குற்றச்சாட்டுக்களைப் பதிவு செய்து, விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது.

நீடிக்காத சந்தோஷம்.. மீண்டும் எகிறிய தங்கம் விலை.. இன்னைக்கு ரேட் என்ன தெரியுமா?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.150 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.8,560 க்கு விற்பனையாகும் நிலையில், சவரனுக்கு ரூ.1200 உயர்ந்து ஒரு சவரன் ரூ.68,480க்கு விற்பனையாகிறது. கடந்த வாரத்தில் குறைந்த தங்கம் விலை, தற்போது மீண்டும் உச்சத்தை எட்டியுள்ளது. நேற்று ஒரே நாளில் தங்கத்தில் விலை இரண்டு முறை உயர்ந்தது. அதனைத்தொடர்ந்து இன்று ஒரே நாளில் ரூ.1200 உயர்ந்து மீண்டும் தங்கம் வாங்க காத்திருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சென்னையில் போதைப்பொருள் விற்பனை செய்யும் கும்பல் கைது.. போலீசார் அதிரடி

சென்னையில் மெத்தபெட்டமைன், ஹெராயின் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட வழக்கில் நைஜீரியா நாட்டு கும்பல், திரிபுரா மாநில கும்பலை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.