K U M U D A M   N E W S

தமிழ்நாடு

பெண்ணை சீண்டிய இளைஞர்.. பெண் செய்த செயல்..தட்டி தூக்கிய போலீஸ்

சென்னையில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் சிலிமிஷம் செய்ய முயன்ற இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ரூ.2,000 கோடி போதைப்பொருள் கடத்தல்.. சட்டவிரோத பணபரிமாற்றம்.. தீவிரம் காட்டும் அமலாக்கத்துறை

ஜாபர் சாதிக் தொடர்பான மும்பை போதை பொருள் வழக்கையும், சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் சேர்த்துள்ள அமலாக்கத் துறை விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளது.

காதலர்களை மிரட்டி கூகுள்-பே மூலம் பணம் பறித்த கும்பல்.. போலீஸார் அதிரடி நடவடிக்கை

காதலர்களை மிரட்டி கூகுள்-பே மூலம் பணம் பறித்த கும்பலைச் சேர்ந்த 4 பேரை போலீஸார் செய்தனர்.

இரவு 7 மணிக்குள் இங்கெல்லாம் மழை! கவனமா இருங்க!

தமிழ்நாட்டில் இன்று (ஆகஸ்ட் 19) இரவு 7 மணிக்குள் பெரும்பாலான இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

ஆற்காடு சுரேஷ் மனைவி கைது.. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் எகிரும் பரபரப்பு..

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக கடந்த ஆண்டு படுகொலை செய்யப்பட்ட ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடியை செம்பியம் போலீஸார் கைது செய்துள்ளனர்.

100 ரூபாய் நாணயம் செல்லாக்காசு.. வேண்டுமானால் குவாட்டர் வழங்கலாம்.. சீமான் காட்டம்

100 ரூபாய் நாணயம் செல்லாக்காசு என்றும் 100 ரூபாய் நாணயத்தை டாஸ்மாக்கில் கொடுத்தால் ஒரு குவாட்டர் வேண்டுமானால் வழங்க சொல்லலாம் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

Rain Update: குடை எடுத்தாச்சா...? மழை வெளுத்து வாங்கப்போகுது மக்களே!

தமிழகத்தை வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், இன்று பல மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடலோர காவல்படை தலைமை இயக்குநர் ராகேஷ் பால் மரணம்.. ராஜ்நாத் சிங், ஸ்டாலின் அஞ்சலி!

''ராகேஷ் பால் தேச பக்தராகவும், அர்ப்பணிப்புள்ள தலைவராகவும் விளங்கினார். நாட்டுக்கு அவர் ஆற்றிய சேவை என்றென்றும் நினைவு கூறப்படும்'' என்று இந்திய கடலோர காவல் படை இரங்கல் தெரிவித்துள்ளது.

விநாயகர் சதுர்த்தி: விநாயகர் சிலைகளை வைக்க காவல்துறை கடும் கட்டுப்பாடு.. முழு விவரம்!

''மசூதிகளில் தொழுகை நேரங்களில், விநாயகர் சிலைகள் ஊர்வலத்தை அனுமதிக்க கூடாது. பதற்றமான பகுதிகள் வழியாகவும் அனுமதிக்க கூடாது'' என்று டிஜிபி சங்கர் ஜிவால் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டின் புதிய தலைமைச் செயலாளராக என்.முருகானந்தம் நியமனம்!

புதிய தலைமைச் செயலாளர் என்.முருகானந்தம் ஐஏஎஸ், முதல்வர் ஸ்டாலினின் தனிச் செயலாளராக இருந்து வந்தார். இவர் முந்தைய அதிமுக ஆட்சியில் தொழிற்துறையின் முதன்மைச் செயலாளராக பொறுப்பு வகித்தது குறிப்பிடத்தக்கது.

சொந்த ஊரிலிருந்து சென்னை திரும்பும் மக்கள்... தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்!

4 நாட்கள் தொடர் விடுமுறை முடிந்து, மக்கள் தங்களது சொந்த ஊரிலிருந்து சென்னைக்கு திரும்புகின்றனர். இதனால், தாம்பரம் ஜிஎஸ்டி சாலை, பரனூர் சுங்கச்சாவடி உள்ளிட்ட பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர்.

‘கலைஞர் நினைவு நாணயம்’ - மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டார்..

கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயத்தை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெற்றுக்கொண்டார்.

பயணிகளுக்கு குட் நியூஸ்.. சென்னை கடற்கரை-தாம்பரம் புறநகர் ரயில் சேவை சீரானது!

தாம்பரம் ரயில் நிலைய யார்ட் மறுசீரமைப்பு பணிகள் ஒருநாள் முன்னதாக, அதாவது இன்றே முடிவடைந்துள்ளது. வழக்கமான அட்டவணைப்படி சென்னை கடற்கரை-தாம்பரம்-செங்கல்பட்டு ரயில்கள் இயங்க தொடங்கியுள்ளதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சாதி மறுப்பு திருமணம்: 15 வயது சிறுமி கொலை செய்த மாமனார்.. பழி தீர்க்க மாமியாருக்கு வெட்டு..

சாதி மறுப்பு திருமணம் செய்துக்கொண்டதை ஏற்றுக்கொள்ள முடியாத தந்தை, மகளுடைய கணவரின் 15 வயது தங்கையை கொடூரமாக கொலை செய்த நிலையில், மாமியாரை தெருக்களில் துரத்தி துரத்தி வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு.. ரூ.400 கோடி மோசடி.. விசாரணையில் அதிர்ச்சி தகவல்

சீன ஆன்லைன் சூதாட்டம் மற்றும் விளையாட்டு செயலி மூலம் 400 கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்ததை அடுத்து சென்னை பொறியாளர் உட்பட நான்கு பேரை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.

தேவநாதனுக்கு சொந்தமான தொலைக்காட்சி நிறுவனத்திற்கு சீல்.. நிதி மோசடி வழக்கில் போலீஸார் அதிரடி

நிதி நிறுவன மோசடி தொடர்பாக பாஜக பிரமுகர் தேவநாதனுக்கு சொந்தமான நிதி நிறுவனம் மற்றும் தனியார் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சீல் வைத்தனர்.

அடுத்த 4 நாளில் கொட்டித் தீர்க்கப்போகும் மழை.. எந்தெந்த பகுதிகள்? முழு விவரம்!

18ம் தேதி முதல் 22ம் தேதி வரை மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

தொழில்நுட்ப தேர்வுகளுக்கான பணியிடங்களை குறைத்த டிஎன்பிஎஸ்சி.. தேர்வர்கள் ஷாக்!

தமிழ்நாடு அரசு வேலையில் சேர வேண்டும் என லட்சக்கணக்கானவர்கள் மனதில் நிறைய கனவுகளுடன், விடா முயற்சியுடன் படித்து வருகின்றனர். ஆனால் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 4 உள்ளிட்ட தேர்வு முடிகளை காலதாமதமாக வெளியிட்டு வருவதாக தேர்வர்கள் மட்டுமின்றி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

பவுர்ணமி; திருவண்ணாமலைக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கம்

நாளை (ஆகஸ்ட் 19) பவுர்ணமியை முன்னிட்டு சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாகத் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... உங்க ஊரு இந்த லிஸ்டில் இருக்கா?

தமிழ்நாட்டில் இன்று (ஆகஸ்ட் 18) 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஓய்வுபெற்ற டிஜிபிக்கு முதல்முறையாக முக்கிய பதவி.. யார் இந்த சுனில் குமார்?

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக ஓய்வு பெற்ற டிஜிபி சுனில்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.

18,000 பெண் ஊழியர்கள் தங்கும் பிரம்மாண்ட விடுதி.. முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!

முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்த பெண் பணியாளர்கள் தங்கும் விடுதி ரூ.706.50 கோடி செலவில் 20 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. 13 தொகுதிகளாக, 10 மாடிகள் கொண்டதாக கட்டப்பட்டுள்ள இந்த பிரம்மாண்ட விடுதியில் 18,720 பெண்கள் தங்கிக் கொள்ளலாம்.

ஒரே நாளில் இரண்டு கொலை.. சென்னை கோடம்பாக்கத்தில் அதிர்ச்சி சம்பவம்..

சென்னை கோடம்பாக்கத்தில் ஒரே நாளில் இரண்டு கொலை நடந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு - ரவுடி நாகேந்திரன், அஸ்வத்தாமனுக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கிலை கைது அஸ்வத்தாமன் மற்றும் அவரது தந்தை ரவுடி நாகேந்திரன் ஆகிய இருவருக்கும் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டு உள்ளது.

வறுமையால் குழந்தையை விற்ற பெற்றோர்.. வியாபாரம் நடந்தது அம்பலம்..

வியாசர்பாடியில் குழந்தை விற்கப்பட்ட விவகாரத்தில், மேலும் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் குழந்தையை வைத்து வியாபாரம் நடந்தது அம்பலமாகி உள்ளது.