K U M U D A M   N E W S

தமிழ்நாடு

மக்கள் விரோத அரசு.. கும்மிடிப்பூண்டியை தாண்டினால் அட்ரஸ் இல்லாத கட்சி தான் திமுக- தமிழிசை ஆதங்கம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்கள் விரோத அரசை நடத்தி வருகிறார் என்றும் கும்மிடிப்பூண்டியை தாண்டினால் திமுகவிற்கு அட்ரஸ் கிடையாது என்றும் பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் விமர்சித்துள்ளார்.

76-வது குடியரசு தின விழா: உயர்நீதி மன்றத்தில் தேசிய கொடியை ஏற்றி வைத்த நீதிபதி

நாட்டின் 76-வது குடியரசு தினத்தையொட்டி சென்னை உயர்நீதி மன்றத்தில் தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

'விடாமுயற்சி’ உடன் பல நிலைகளை வென்றவர்.. அஜித்திற்கு ஜெயக்குமார் வாழ்த்து

'பத்ம பூஷன்'  விருது பெற உள்ள நடிகர் அஜித்குமாருக்கு வாழ்த்து தெரிவித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது சமூக வலைதளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

76-வது குடியரசு தினம்.. தேசிய கொடியை ஏற்றி வைத்து ஆளுநர் மரியாதை

சென்னையில் நடைபெற்ற 76-வது குடியரசு தின விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

போலி மதுபான ஆலை நடத்தி வந்தவர் கைது.. தலைமறைவான நபருக்கு காவல்துறை வலை வீச்சு

போலி மதுபான ஆலை நடத்தி வந்த கோபி என்பவரை போலீசார் கைது செய்த நிலையில் தலைமறைவான நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

மாணவனின் உயிரை பறித்த ப்ளூடூத் ஹெட்செட்.. நடந்தது என்ன?

ரயில் தண்டவாளத்தில் விழுந்த ப்ளூடூத் ஹெட்செட் எடுக்க சென்ற ராஜகோபால் என்ற மாணவன் ரயில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஐபிஎஸ் அதிகாரிக்கு ஒதுக்கப்பட்ட வீடு ரத்து.. தமிழக அரசு பதிலளிக்க நீதிபதி உத்தரவு

சாகித்ய அகாடமி விருது பெற்று தமிழுக்கு தொண்டாற்றியதற்காக, கனவு இல்லம் திட்டத்தின் கீழ்  ஐபிஎஸ் அதிகாரி திலகவதிக்கு ஒதுக்கப்பட்ட வீட்டை வேறு எவருக்கும் ஒதுக்கக் கூடாது என வீட்டு வசதி வாரியத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மொழிப்போர் தியாகிகள் தினம்: தாளமுத்து, நடராசன் நினைவிடம் திறப்பு

மொழிப்போரில் உயிர்நீத்த தாளமுத்து, நடராசன் இருவரின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து வீரவணக்கம் செலுத்தினார்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: நாகேந்திரனின் இரண்டாவது மகனை தேடும் போலீஸார்

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய நாகேந்திரனின் இரண்டாவது மகன் அஜித் ராஜை போலீஸார் தேடி வருகின்றனர். 

டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து.. நாளை முதலமைச்சர் ஸ்டாலின் அரிட்டாபட்டி பயணம்

அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான ஏலத்தை மத்திய அரசு ரத்து செய்த நிலையில் நாளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரிட்டாபட்டி செல்லவுள்ளார். 

17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு.. குற்றவாளிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை

அடையார் காவல் மாவட்டத்தில் 17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றவாளிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

குட்கா முறைகேடு வழக்கு.. கூடுதல் குற்றப்பத்திரிகை நகல் வழங்கி சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

குட்கா முறைகேடு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு கூடுதல் குற்றப்பத்திரிகை நகல் இன்று வழங்கி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பஞ்சாப்பில் தமிழக கபடி வீராங்கனைகள் தாக்கப்பட்ட விவகாரம்.. அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம்..!

பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்று வரும் பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான கபடி போட்டியில், தமிழக வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர் மீதான தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. விளையாட்டு வீரர்கள் மீது நடத்தப்பட்ட சம்பவத்திற்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

தேநீர் விருந்து.. த.வெ.க தலைவர் விஜய்க்கு அழைப்பு விடுத்த ஆளுநர்..!

குடியரசு தின விழாவையொட்டி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தில் பங்கேற்க தமிழக வெற்றி கழகத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் திமுக விளையாட்டு அரசியல் செய்துள்ளது - மத்திய இணை அமைச்சர் எல். முருகன் குற்றச்சாட்டு

டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் திமுக தமிழக மக்களை ஏமாற்றும் வகையில் விளையாட்டு அரசியல் செய்துள்ளது என்றும், கடந்த காலங்களில் டங்ஸ்டன் சுரங்கம் சார்ந்த அனைத்து விஷயங்களுக்கும் ஒப்புதல் அளித்துவிட்டு மக்கள் போராட்டம் நடத்திய பிறகு எதிர்ப்பு தெரிவித்து திமுக அரசு நாடகம் ஆடுவதாக மத்திய இணை அமைச்சர் எல். முருகன் குற்றச்சாட்டியுள்ளார்.

முடிவுக்கு வரும் வேங்கை வயல் விவகாரம்..? 750 நாட்களுக்கு பிறகு வெளிவந்த உண்மை

வேங்கை வயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனித கழிவு கலந்தது தொடர்பாக புதுக்கோட்டை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டதாக  தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.

"ஊழலை இரும்புக்கரம் கொண்டு ஒழிப்போம்" - சென்னை உயர்நீதிமன்றம்

இரும்பை முதல் முறையாக பயன்படுத்தி இரும்பு காலத்தின் முன்னோடி தமிழகம் என பெருமைப்படும் நேரத்தில், ஊழலையும் இரும்புக்கரம் கொண்டு ஒழித்து உலகளவில் முன்னோடியாக இருப்போம் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சிறைக் கைதிகளுக்கு எதிராக காட்டப்படும் கடுமையை ஊழலை ஒழிப்பதிலும் காட்ட வேண்டும்- உயர்நீதி மன்றம்

சிறைக் கைதிகளுக்கு எதிராக காட்டப்படும் கடுமையை ஊழலை ஒழிப்பதிலும் காட்ட வேண்டும் என சென்னை உயர்நீதி மன்றம் தெரிவித்துள்ளது. 

உருட்டு கட்டையுடன் திரண்ட ஆதரவாளர்கள்..  சீமான் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறை

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீதும் அவரது வீட்டில் இருந்த நபர்கள் உட்பட 180 பேர் மீது நான்கு பிரிவின் கீழ் நீலாங்கரை போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மெரினா காமராஜர் சாலையில் பிரமாண்டமாக நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை 

குடியரசு தினவிழா ஜனவரி 26-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில் இதற்கான அணிவகுப்பு ஒத்திகை மெரினா காமராஜர் சாலையில் பிரமாண்டமாக நடைபெற்றது.

அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைய QR கோடு மூலம் அனுமதி.. விரைவில் அமல்படுத்த திட்டம்

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதைத் தொடர்ந்து  பல்கலைக்கழக வளாகத்தில் நுழைவதற்கு கியூஆர் கோடுடன் கூடிய அனுமதி வழங்கும் வகையில் விசிட்டர் மேனேஜ்மெண்ட் சிஸ்டம் அமைக்கப்பட உள்ளது. 

ஊழல் வழக்கு.. அனிதா ராதாகிருஷ்ணனின் சொத்துக்கள் முடக்கம்..!

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு செந்லான ரூ.1.26 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது.

குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு தொடர்பான சட்டங்கள்..  அறிக்கை தாக்கல் உயர்நீதிமன்றம் உத்தரவு..!

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு தொடர்பான சட்டங்களை அமல்படுத்தியது குறித்து  அறிக்கை தாக்கல்  செய்யும்படி, தமிழக மற்றும் புதுச்சேரி மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு கொடுத்த அழுத்தத்தின் காரணமாக டங்க்ஸ்டன் ஏலம் ரத்து - திருச்சி சிவா பேட்டி

தமிழர்களின் வாழ்வில் மிக முக்கிய நாள் இன்று, மேலும் தமிழ்நாடு அரசு கொடுத்த அழுத்தத்தின் காரணமாக டங்க்ஸ்டன் ஏலம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.

டங்ஸ்டன் கனிம சுரங்க ஏலம் ரத்து.. பட்டாசு வெடித்து கொண்டாடிய மக்கள்..!

மதுரை மாவட்டம், அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் கனிம சுரங்கத்திற்கான ஏலத்தை ரத்து செய்தது மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனைதொடர்ந்து அப்பகுதி மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.