K U M U D A M   N E W S

அரசியல்

Periyar 146: கணீர் குரல், ஆழமான சமூக சிந்தனை..புரட்சியின் முகம் தந்தை பெரியார் உதிர்த்த பொன்மொழிகள்...

பலதரப்பட்ட ஆதிக்கத்திற்கு எதிராக சமரசமின்றி களமாடிய போராளியான தந்தை பெரியாரை அவரது 146வது பிறந்த தினத்தில் நினைவுக்கூறுவோம்.. 

’முதல்வர் ஸ்டாலின் ஏமாற்றுகிறார்’.. அன்புமணி ஆவேசம்.. என்ன விஷயம்?

''முதல்வர் ஸ்டாலின் வன்னிய சமுதாயத்திற்கு மிகப்பெரிய துரோகம் செய்து கொண்டிருக்கிறார். இதை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள மாட்டோம். வன்னியருக்கு உள் ஒதுக்கீடு கொடுக்க முதல்வருக்கு மனது கிடையாது'' என்று அன்புமணி கூறியுள்ளார்.

மது விலக்கை உடனே செய்ய முடியாது.. அறிவுபூர்வமாக அணுக வேண்டும் - செல்வப்பெருந்தகை

மது விலக்கை அறிவுபூர்வமாக அணுக வேண்டும் என்றும், எடுத்தேன் கவிழ்த்தேன் என்று செய்துவிட முடியாது என்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

பாமகவை கொச்சைப்படுத்த வேண்டாம்.. திருமாவளவன் நிறுத்தி கொள்ள வேண்டும்.. அன்புமணி

பாமகவை சாதி கட்சி என்பது போன்று பேசுவதை திருமாவளவன் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் பாமகவை கொச்சைப்படுத்த வேண்டாம் என்று அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆட்சியில் பங்கு.. திமுகவிற்கு பயத்தை காட்டிவிட்டார் திருமாவளவன் - ஜெயக்குமார்

திருமாவளவன் ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு கேட்பது போன்று பேசியிருப்பது, திமுகவிற்கு பயத்தை கொடுத்து இருக்கும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

நாங்கள் எல்.கே.ஜி. தான்.. மக்கள் புரிந்துகொண்டால் போதும் - அன்புமணிக்கு திருமாவளவன் பதில்

நாங்கள் எல்கேஜி படித்திருந்தாலும், சமூக பொறுப்புடன் நடந்து கொள்கிறோம் என்பதை மக்கள் புரிந்து கொண்டால் போதும் என்று அன்புமணி ராமதாஸ் விமர்சனத்திற்கு திருமாவளவன் பதில் அளித்துள்ளார்.

’பாமக சாதிக்கட்சி என்றால், விசிக என்ன கட்சி?’.. திருமாவளவனுக்கு அன்புமணி பதிலடி!

''நானும் சரி, திருமாவளவனும் சரி ஆட்சி அதிகாரம் வேண்டும் என்றுதான் கட்சி நடத்துகிறோம். திருமாவளவனும் தன்னுடைய ஆட்சி வர வேண்டும் என்றுதான் விரும்புவாரே தவிர, திமுக ஆட்சி அமைய வேண்டும் என்று விரும்ப மாட்டார். ஆகவே திருமாவளவன் பேசியது சரி'' என்று அன்புமணி கூறியுள்ளார்.

திருமாவளவன் விவகாரம்: 'எல்லாம் அவர் பார்த்துப்பார்’.. சேகர்பாபு பதில்!

''முதல்வர் ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சியில் தொடர்ச்சியாக கோயில்களில் திருப்பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இன்று ஒரே நாளில் 101 கோயில்களில் குடமுழுக்கு நடைபெறுகிறது'' என்று அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.

‘தல’க்கு தில்ல பார்த்தியா - அரசியல் களத்தை மீண்டும் அதிர வைத்த திருமாவளவன்

‘ஆட்சியிலும், அதிகாரத்தில் பங்கு வேண்டும்’ என்று திருமாவளவன் பேசும் வீடியோ, ட்விட்டர் பக்கத்தில் 3ஆவது முறையாக பதிவேற்றம் செய்யப்பட்டதால் மீண்டும் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.

தைரியத்தை பாராட்டுறேன்.. ஆனால் உறுதியா இருக்கனும்.. திருமாவளவனுக்கு சீமான் வாழ்த்து

ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்கும் திருமாவளவனின் தைரியத்தை பாராட்டுகிறேன் என்றும் இனிவரும் காலங்களில் தன்னுடைய நிலைப்பாட்டில் திருமாவளவன் உறுதியாக இருக்க வேண்டும் என்று சீமான் தெரிவித்துள்ளார்.