K U M U D A M   N E W S

அரசியல்

ரூ.10 கோடி நஷ்ட ஈடு - செல்வப்பெருந்தகை எடுத்த அதிரடி முடிவு!

Selvaperunthagai Press Meet: பகுஜன் சமாஜ் மாநிலச் செயலாளர் ஜெய்சங்கரின் நடவடிக்கையால் தனது புகழுக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாகக் கூறி தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வபெருந்தகை நஷ்ட ஈடு கேட்டுள்ளார்.

‘வாழ்விழந்த மீனவர்கள்.. 40 எம்.பி.க்கள் எங்கே?’..எடப்பாடி பழனிசாமி ஆவேசம்!

''தமிழக மீனவர் பிரச்சனையை தீர்க்க மத்திய அரசின் உறுதியான நடவடிக்கையை விடியா திமுக அரசால் நிர்ப்பந்தித்து பெறமுடியவில்லை. தனக்கோ, தன்குடும்பத்திற்கோ தேவையென்றால், ஒரு நொடியில் சாதித்துக் கொள்ளும் ஸ்டாலின், தமிழக மீனவர்களுக்கோ, தமிழக நலனுக்கோ பாதிப்பு ஏற்படும்போது ஏனோதானோ என்று கடிதத்துடன் நிறுத்திக்கொள்கிறீர்கள்'' என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

TVK Vijay: ”மது அருந்திவிட்டு மாநாட்டுக்கு வரக் கூடாது..” தவெக தோழர்களுக்கு பறந்த 8 கட்டளைகள்!

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு அடுத்த மாதம் 27ம் தேதி நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் தொண்டர்களுக்கு முக்கியமான உத்தரவு பிறப்பித்துள்ளார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த்.

Sadhguru : திருப்பதி லட்டு விவகாரம்: “பக்தி இல்லாத இடத்தில்...” சத்குரு ஆவேசம்

Sadhguru About Thirupathi Ladoo Issue : கோயில் பிரசாதத்தில் மாட்டு கொழுப்பு கலந்து பக்தர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது வார்த்தைகளால சொல்லமுடியாத அளவிற்கு கேவலமான ஒன்று என தனது ஆதங்கத்தை எக்ஸ் வலைதள பக்கத்தில் சத்குரு தெரிவித்துள்ளார்.

எல்லா காலமும் ஏமாற்ற முடியாது.. முதல்வரை சாடிய எடப்பாடி பழனிசாமி!

நான்கு முறை வெளிநாட்டு சுற்றுப் பயணம் மேற்கொண்டு குறைவான முதலீட்டை ஈர்த்த விடியா திமுக முதலமைச்சர் உடனடியாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

ஒத்தைக்கு ஒத்தை பேசலாம் வாங்க.. திமுகவுக்கு நேரடி அழைப்பு விடுத்த எஸ்.பி.வேலுமணி

எம்.ஜி‌.ஆர் இன்னும் 2 ஆண்டுகள் உயிரோடு இருந்திருந்தால் இலங்கையில் தமிழர்களுக்கு தனிநாடு கிடைத்திருக்கும் என அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.  சூலூர் அடுத்த கிட்டாம்பாளையத்தில் நடைபெற்ற பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், கோவை மாவட்டத்திற்கு செய்த நலத்திட்டங்கள் குறித்து விவாதிக்க திமுக தயாரா என சவால் விடுத்தார்..

சர்வாதிகாரி மோடியும் காமராஜரும் ஒன்றா? தமிழிசைக்கு செல்வப்பெருந்தகை கேள்வி

சர்வாதிகார பாசிச முறையில் செயல்பட்டு வருகிற பிரதமர் மோடியின் ஆட்சியை காமராஜர் ஆட்சியோடு ஒப்பிடுவது தமிழிசை சௌந்தரராஜனின் அறியாமையை காட்டுவதாக மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

பசுமைப்பூங்கா அமைப்பது வரவேற்கத்தக்கது - அன்புமணி ராமதாஸ் கருத்து

கிண்டியில் மீட்கப்பட்ட நிலத்தில் 118 ஏக்கர் பரப்பில் பசுமைப்பூங்கா அமைப்பது வரவேற்கத்தக்கது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

திருப்பதி லட்டு சர்ச்சை..தொடங்கியது தோஷ நிவர்த்தி சாந்தி யாகம்

திருப்பதி லட்டுகளில் விலங்குகளின் கொழுப்பு கலந்துள்ளது என்ற குற்றச்சாட்டு இந்தியா முழுவதும் பேசும்பொருளாகியுள்ளது. இந்நிலையில் இதன் ஒரு பகுதியாக ஏழுமலையான் கோயிலில் சாந்தி யாகம் தொடங்கியது.

இலங்கையில் முதல் இடதுசாரி ஆட்சி..அதிபர் அநுர குமார திசநாயகவின் வரலாறு..

இலங்கையின் புதிய அதிபராக வெற்றி வாகை சூடியுள்ளார் தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் அநுர குமார திசநாயக. இடதுசாரி கொள்கையைப் பின்பற்றி அவர் கடந்து வந்த வாழ்க்கைப் பயணம் குறித்து விலக்குகிறது இக்கட்டுரை..