K U M U D A M   N E W S
Kumudam Ad

இந்தியா

அச்சுறுத்தும் குரங்கம்மை.. உடனே இதை செய்யுங்க.. மாநிலங்களுக்கு மத்திய அரசு வார்னிங்!

18 வயது முதல் 44 வயதுக்குட்பட்ட ஆண்களையே குரங்கம்மை அதிகம் தாக்குகிறது. குறிப்பாக குரங்கம்மையால் பாதிக்கப்பட்ட 50% பேருக்கு எச்.ஐ.வி தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆகையால் எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர்களை குரங்கம்மை அதிகம் தாக்குகிறது.

குரங்கம்மை.. ICU-வை தயார் நிலையில் வையுங்கள்.. சுகாதாரத்துறை எச்சரிக்கை

மருத்துவமனைகளில் ICU-வை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்; வெளிநாடுகளில் இருந்து வருவோரை கண்காணிக்கும் பணிகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என குரங்கமை எதிரொலியால் மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

'இந்துக்கள் அல்லாதவர்கள் நுழைய தடை'.. கிராமங்களில் அறிவிப்பு பலகையால் சர்ச்சை!

''நாட்டின் ஒற்றுமையை சீர்குலைக்கும் நபர்கள் மீது உடனுக்குடன் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற சம்பவங்களை நிரந்தரமாக தடுத்து நிறுத்த முடியும்'' என்று பல்வேறு தரப்பினர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

'காங்கிரசில் இருந்து வெளியேறுங்கள்.. இல்லையென்றால்..' பஜ்ரங் புனியாவுக்கு கொலை மிரட்டல்!

ஹரியானா சட்டப்பேரவைக்கு அடுத்த மாதம் (அக்டோபர்) 5ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் சார்பில் வினேஷ் போகத்துக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது. அதே வேளையில் பஜ்ரங் புனியாவுக்கு கட்சியில் விவசாயிகள் பிரிவு தலைவர் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.

'வங்கதேசத்துடன் கிரிக்கெட் விளையாடக்கூடாது'.. திடீரென போர்க்கொடி தூக்கும் இந்தியர்கள்.. என்ன காரணம்?

வங்கதேசத்தில் வன்முறை ஓய்ந்து இயல்புநிலை திரும்பினாலும், 'மழை விட்டாலும் தூவானம் விடவில்லை' என்பதுபோல் அங்கு சிறு சிறு வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. கடந்த 2 நாட்களுக்கு முன்பு வங்கதேசத்தில் 15 வயது சிறுவன் மர்ம கும்பலால் அடித்துக் கொலை செய்யப்பட்டான்.

இந்தியாவில் குரங்கம்மை? வெளிநாட்டில் இருந்து வந்த அந்த நபர்...மத்திய சுகாதாரத்துறை கொடுத்த அலர்ட்

சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து இந்தியா வந்த இளைஞருக்கு குரங்கம்மை அறிகுறிகள் இருப்பதாக கண்டுபிடிப்பு. குரங்கம்மை தானா என உறுதி செய்ய பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

மீண்டும் வன்முறை பூமியான மணிப்பூர்.. இரு பிரிவினரிடையே மோதல்.. 6 பேர் உயிரிழப்பு!

வன்முறை மேலும் பரவாமல் தடுக்க ஹெலிகாப்டர்கள் மூலம் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். வன்முறை நடந்த பகுதிகளில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. அமைதியாக இருந்த மணிப்பூரில் மீண்டும் வன்முறை ஏற்பட்டது மாநில பாஜக அரசுக்கும், மத்திய அரசுக்கும் மீண்டும் தலைவலியாக மாறியுள்ளது.

ரீல்ஸ் வீடியோ விபரீதம்.. போட்டுத் தள்ளிய பாம்பு!

ரீல்ஸ் வீடியோவுக்காக, பாம்புக்கு மவுத் கிஸ் கொடுத்த இளைஞரை, அந்த பாம்பு தீண்டியுள்ளது. இதனால் உடலில் விஷம் ஏறி அந்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.

மருத்துவ மாணவி கொலை: தாமதமாக வந்த சிபிஐ வழக்கறிஞர்.. கடும் கோபமடைந்த நீதிபதி!

''சிபிஐ இந்த வழக்கை கையில் எடுத்து 24 நாட்கள் கடந்து விட்டன. ஆனால் இந்த வழக்கில் ஏற்பட்ட முன்னேற்றம் என்ன? என்று நாட்டு மக்கள் கேட்கின்றனர். சிபிஐ நடந்து கொள்வதை பார்த்தால் இந்த வழக்கில் சீரியஸாக செயல்படவில்லை என்பது தெரிகிறது'' என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

'நான் அப்பவே சொன்னேன்.. எல்லாம் நாடகம்'.. வினேஷ் போகத் காங்கிரசில் இணைந்தது குறித்து பிரிஜ் பூஷன்!

''ஒரு வீரர் ஒரே நாளில் இரண்டு எடைப்பிரிவு போட்டிகளில் பங்கேற்றது எப்படி என்பது குறித்து வினேஷ் போகத்திடம் கேட்க விரும்புகிறேன். நீங்கள் மல்யுத்த போட்டிகளில் வெற்றி பெறவில்லை. ஏமாற்றி பைனல் வரை சென்று விட்டீர்கள். அதற்காகத்தான் கடவுள் உங்களை தண்டித்தார்'' என்று பிரிஜ் பூஷன் கூறியுள்ளார்.