K U M U D A M   N E W S
Advertisement

ஆந்திர பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை.. காவலர்கள் மீது குண்டாஸ்!

திருவண்ணாமலையில் ஆந்திர மாநில பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதான 2 காவலர்கள் சுரேஷ் ராஜ், சுந்தர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்கிய ரேபிடோ ஓட்டுநர்.. பணம் கொடுக்க மறுத்ததால் பொய்ப் புகாரா?

சென்னையில் வசித்து வரும் திரிபுராவை சேர்ந்த இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக அளிக்கப்பட்ட புகாரில் 'ரேபிடோ' ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலிய வீராங்கனைகள் பாலியல் தொல்லை: "இது ஒரு பாடம்"- பாஜக அமைச்சரின் பேச்சால் சர்ச்சை!

மத்திய பிரதேசத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட சம்பவம் குறித்து பாஜக அமைச்சர் கைலாஷ் விஜய்வர்கியா தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை.. இந்தூரில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்காக இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணியைச் சேர்ந்த இரண்டு வீராங்கனைகள் பாலியல் சீண்டலுக்கு ஆளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போலீஸ் எஸ்ஐ-ஆல் வன்கொடுமை.. உள்ளங்கையில் குறிப்பு எழுதி பெண் மருத்துவர் தற்கொலை!

மகாராஷ்டிராவில் பெண் மருத்துவர் தற்கொலை செய்துகொண்ட நிலையில், போலீஸ் எஸ்ஐ தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக அவர் உள்ளங்கையில் எழுதிய தற்கொலைக் குறிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாலியல் புகாரில் பாடகர் கைது.. பாலிவுட்டில் பரபரப்பு!

இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக எழுந்த புகாரில் பாலிவுட் பாடகர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர்: தட்டிக் கேட்ட 5 மாணவர்கள் மீது வழக்கு பதிவு!

நெல்லை ஸ்கேட் பொறியியல் கல்லூரியில், மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படும் பேராசிரியர் ஜான் சாமுவேல்ராஜைக் கண்டித்துத் தாக்கியதாக, 5 கல்லூரி மாணவர்கள் மீது சேரன்மகாதேவி போலீஸார் வழக்குப்பதிவு செய்த நிலையில், பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்காதது கல்வியாளர்கள் மத்தியில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

போரூர் சிறுமி பாலியல் வன்கொடுமை - கொலை வழக்கு: தஷ்வந்தின் மரண தண்டனையை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு!

சென்னை போரூர் சிறுமி ஹாசினி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், குற்றம் உறுதியாக நிரூபிக்கப்படாததால், குற்றவாளி தஷ்வந்துக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

திருவண்ணாமலை கொடுமை: ஆந்திரப் பெண் பலாத்கார வழக்கில் 6 மாதங்களில் உச்சபட்ச தண்டனை- மகளிர் ஆணையத் தலைவர் A.S.குமாரி உறுதி!

திருவண்ணாமலையில் 18 வயது ஆந்திரப் பெண்ணை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த 2 காவலர்களுக்கு 6 மாதங்களுக்குள் உச்சபட்ச தண்டனை வழங்கப்படும் என தமிழ்நாடு மகளிர் ஆணையத் தலைவர் A.S.குமாரி உறுதியளித்துள்ளார்.

ஆந்திர இளம்பெண் பாலியல் வன்கொடுமை.. தமிழர் அறத்திற்கு ஏற்பட்டுள்ள மாபெரும் இழுக்கு- சீமான் கண்டனம்!

திருவண்ணாமலை அருகே ஆந்திர மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் காவலர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது, தமிழர் அறத்திற்கும், பண்பாட்டிற்கும் ஏற்பட்டுள்ள மாபெரும் இழுக்காகும் என்று சீமான் தெரிவித்துள்ளார்.