K U M U D A M   N E W S

ED

https://magazine.kumudam.ai/api/v1/getUNNews?site=kumudamnews&limit=25&offset=700&order=created_at&post_tags=ed

நேபாள் கலவரம்: உயிரிழந்தவர்கள் தியாகிகளாக அறிவிப்பு- நேபாள் பிரதமர் சுஷிலா கார்கி

நேபாளத்தில் நடந்த வன்முறையில் உயிரிழந்தவர்கள் தியாகிகளாக அறிவிக்கப்படுவார் என்று அந்நாட்டு இடைக்கால பிரதமர் சுஷிலா கார்கி தெரிவித்துள்ளார்.

சிலர் மலிவான அரசியல் செய்கின்றனர்- முதல்வர் ஸ்டாலின் பேச்சு!

"சிலர் எதையும் தெரிந்து கொள்ளாமல் மலிவான அரசியல் செய்கின்றனர்" என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

தனியார் பள்ளியில் போதைப்பொருள் தயாரிப்பு.. போலீசார் அதிரடி நடவடிக்கை!

ஐதராபாத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியின் கட்டிடத்தில், போதைப்பொருள் தயாரித்து வந்த ஒரு கும்பலை காவல்துறை அதிரடியாக கைது செய்துள்ளது.

மகளின் காதலனைத் தாக்கிய முன்னாள் பாஜக நிர்வாகி.. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது!

சென்னை அயனாவரத்தில் மகளின் காதலன் சந்திக்க வரும்போது தாக்குதல் நடத்திய முன்னாள் பாஜக நிர்வாகியான தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர்

திமுகவின் வாக்குறுதிகள் என்ன ஆனது? - திருச்சியில் சரமாரி கேள்வி எழுப்பிய தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தனது தேர்தல் பரப்புரைப் பயணத்தைத் திருச்சியில் இன்று தொடங்கினார். அப்போது ஆளும் திமுக அரசைக் கடுமையாக விமர்சித்த அவர், 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் அளித்த 505 வாக்குறுதிகளில் எத்தனை நிறைவேற்றப்பட்டன எனச் சரமாரிக் கேள்விகளை எழுப்பினார்.

ரிசர்வ் வங்கி பெயரைப் பயன்படுத்தி மோசடி: இரிடியம் மோசடியில் 30 பேர் கைது!

ரிசர்வ் வங்கியின் பெயரைத் தவறாகப் பயன்படுத்தி, இரிடியம் விற்பனை மூலம் வெளிநாட்டிலிருந்து பணம் வருவதாகக் கூறிப் பொதுமக்களிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்த கும்பலைச் சேர்ந்த 30 பேரை சிபிசிஐடி போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

மேயர் பிரியா, அமைச்சர் சேகர்பாபு அவதூறு வீடியோ: பாஜக, தவெக ரசிகர்கள் மீது வழக்கு!

சென்னை மேயர் பிரியா மற்றும் அமைச்சர் சேகர்பாபு குறித்து அவதூறாகச் சித்தரித்து வீடியோ வெளியிட்ட விவகாரத்தில், புகார் அளித்த தமிழர் முன்னேற்றப் படை கட்சியின் தலைவர் வீரலட்சுமி போலீசாரிடம் சாட்சியங்களை அளித்தார்.

கோவை விமான நிலையத்தில் ரூ.45 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்! - கடத்தலில் ஈடுபட்ட 7 பேர் கைது!

கோவை விமான நிலையத்தில் பல்வேறு வகையான சிகரெட்டுகளும் உரிய ஆவணங்களின்றி எடுத்துவரப்பட்ட லேப்டாப்புகள், மைக்ரோபோன்கள் ட்ரோன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு 7 பேர் கைது செய்யபட்டனர்.

கோவை அரசு மருத்துவமனை மீது சிகிச்சை அலட்சியம் புகார்: முதல்வர் தனிப்பிரிவுக்கு நோட்டீஸ் - மருத்துவமனை முதல்வர் விளக்கம்!

கோவை அரசு மருத்துவமனையில் தனது தந்தைக்கு உரிய சிகிச்சை அளிக்கவில்லை எனவும் கிரிஸ்டல் ஊழியர்கள் லஞ்சம் கேட்பதாக முதலமைச்சரின் தனிப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

வடபழனி முருகன் கோவில் வழக்கு: பக்தரின் மனுமீது நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னை வடபழனி முருகன் கோவிலின் வாகன நிறுத்துமிடங்களில் திருமண மண்டபம் மற்றும் பணியாளர் குடியிருப்புகள் கட்டுவதற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவையில் வீல் சேர் பிரச்சனைக்குத் தீர்வு.. சுகாதாரத்துறை அமைச்சர் உத்தரவு!

கோவையில் தனது மகனால் தோளில் தாங்கியபடி அழைத்துச் செல்லப்பட்ட முதியவரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு, ₹1.3 லட்சம் மதிப்பில் 10 வீல் சேர்கள் மற்றும் 10 ஸ்ட்ரெச்சர்கள் வாங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தூய்மைப் பணியாளர்கள் மீண்டும் போராட்டம் | Chennai | Cleaners Protest | Kumudam News

தூய்மைப் பணியாளர்கள் மீண்டும் போராட்டம் | Chennai | Cleaners Protest | Kumudam News

கோயம்பேட்டில் அரசு பேருந்து திருட்டு.. நெல்லூரில் பிடிபட்ட ஒடிசா இளைஞர்!

கோயம்பேட்டில் நிறுத்தப்பட்டிருந்த அரசு பேருந்தை திருடி சென்ற காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத ஒடிசா இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

போதைப் பொருள் கடத்திய 4 பேர் கைது | Kovai Arrest | Kumudam News

போதைப் பொருள் கடத்திய 4 பேர் கைது | Kovai Arrest | Kumudam News

திருமணத்தை மீறிய உறவு: பொக்லைன் ஓட்டுநர் கொடூர கொலை.. நண்பர் கைது!

திருமணத்தை மீறிய உறவு விவகாரத்தில் நண்பனின் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

நேபாள கைதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவல்: 60 பேர் கைது; பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பு!

இந்தியாவுக்குள் நுழையமுயன்ற 60 நேபாள கைதிகளை மத்திய அரசின் எஸ்எஸ்பி படையினர் பிடித்துள்ளனர்.

சென்னை புறநகர் ரயில்களில் எச்சரிக்கை: விதிகளை மீறினால் தண்டனை!

புறநகர் ரயில்களில் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் பயணிகள் மீது கடும் நடவடிக்கை; விதிகளை மீறுவது தண்டனைக்குரிய குற்றம் எனத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

கனகசபை தரிசனம்: தீட்சிதர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனகசபை மீதேறி தரிசனம் செய்ய யார் யாருக்கு அனுமதி வழங்கப்படும் என்பது குறித்து மனுவாக தாக்கல் செய்ய பொது தீட்சிதர்கள் தரப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாஞ்சில் விஜயன் மீது பாலியல் புகார்: சர்ச்சைக்குப் பதிலளித்த நாஞ்சில் விஜயன், மரியா தம்பதியினர்!

நகைச்சுவை நடிகர் நாஞ்சில் விஜயன், திருநங்கை வைஷு என்பவர் அளித்த பாலியல் மற்றும் மோசடிப் புகார் தொடர்பாக, தன் மனைவி மரியாவுடன் இணைந்து வீடியோ ஒன்றை வெளியிட்டு கண்ணீர் மல்க விளக்கம் அளித்துள்ளனர்.

சென்னை வங்கி மோசடி வழக்கு: 14 வருடங்களாகத் தேடப்பட்ட குற்றவாளி குவைத்தில் கைது!

சென்னை பாங்க் ஆஃப் பரோடாவில் ₹3.5 கோடி மோசடி செய்துவிட்டு, 14 வருடங்களாக வெளிநாட்டில் தலைமறைவாக இருந்த தேடப்படும் குற்றவாளி முனாவர் கான், சர்வதேச போலீசாரின் உதவியுடன் குவைத் நாட்டில் கைது செய்யப்பட்டு இந்தியா அழைத்து வரப்பட்டார்.

பெரம்பலூரில் விஜய் பிரசாரம் செய்ய அனுமதி | Vijay Propaganda | TVK Leader | Kumudam News

பெரம்பலூரில் விஜய் பிரசாரம் செய்ய அனுமதி | Vijay Propaganda | TVK Leader | Kumudam News

காவல் நிலையத்தில் ரகளையில் ஈடுபட்ட ரவுடிகள்: தப்பிச்செல்ல முயன்றபோது கை, காலில் எலும்பு முறிவு!

சென்னையில் செல்போன் பறிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு, போலீசாரைத் தாக்கி காவல் நிலையத்தில் ரகளையில் ஈடுபட்ட இரண்டு ரவுடிகள், தப்பிச் செல்ல முயன்றபோது தடுக்கி விழுந்து கை, கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின்னர் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

கடன் தொல்லை.. நகைக்கடைக்காரர்களை குறிவைத்து தொடர் திருட்டு.. 2 பேர் கைது!

நகைக் கடைக்காரர்களின் கவனத்தைத் திசைதிருப்பித் தங்க நகைகளைத் திருடி வந்த, டிப்-டாப் உடையணிந்த இரண்டு நபர்களை நுங்கம்பாக்கம் போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் சென்னையில் 20-க்கும் மேற்பட்ட கடைகளில் கைவரிசை காட்டியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இபிஎஸ் தலைமை இருக்கும் வரை அதிமுக ஆட்சிக்கு வராது- டிடிவி தினகரன் விமர்சனம்!

அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி நீடிக்கும் வரை, அந்தக் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வருவது கடினம் என்று டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.

உ.பி. பள்ளியில் பயங்கரம்: 12-ஆம் வகுப்பு மாணவனை கத்தியால் குத்திக் கொன்ற சக மாணவர்கள்!

உத்தரப் பிரதேசத்தில் 12 ஆம் வகுப்பு மாணவன், சக மாணவர்களால் பள்ளி வளாகத்தில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.