K U M U D A M   N E W S

2 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு

திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய 2 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெளுக்கப்போகும் கனமழை.... லிஸ்டில் உங்க மாவட்டம் இருக்கா?

வடதமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இன்று (அக். 19) 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வன்மத்தை கக்குகிறார் ஸ்டாலின்... திமுகவினர் திராணியற்றவர்கள்... எல்.முருகன் கடும் சாடல்!

பொதிகை என இருந்த சென்னை தொலைக்காட்சி நிலையத்தின் பெயரை டிடி தமிழ் என பெயர் மாற்றம் செய்து சாதனை படைத்தது பாஜக அரசு தான் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

20ம் தேதி முதல் பேராபத்து நிச்சயம்.. ஆட்டம் காட்டப்போகும் இயற்கை..

வங்கக்கடலில் வரும் 22ம் தேதி மீண்டும் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் எனவும், வரும் 24ஆம் தேதி அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்: இருதயக் கூடு எரிகிறது.. கவிஞர் வைரமுத்து ஆக்ரோஷம்!

தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை தவறாக பாடியதற்கு கவிப்பேரரசு வைரமுத்து கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார்.

ராணிப்பேட்டை; அதிகாலை முதல் பரவலாக மழை ராணிப்பேட்டை |

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அதிகாலை முதல் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்து வருகிறது.

ஆளுநரைத் திரும்பப் பேற வேண்டும்; அரசியல் தலைவர்கள் ஆவேசம்!

தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலை திருத்துவதற்கு உரிமையில்லை, ஆளுநரை திரும்பப் பெறுக என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை - விடிந்ததும் வந்த அறிவிப்பு

கனமழை காரணமாக புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை.

தமிழ் தாய் வாழ்த்தில் பிழை எப்படி..? - கொதித்த அரசியல் தலைவர்கள்

சென்னை தொலைக்காட்சி நிலையத்தின் பொன்விழா கொண்டாட்டத்துடன், இந்தி மாத நிறைவு நாள் விழாவும் கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடல், தவறாக பாடப்பட்டது. அதாவது பாடலை பாடியவர்கள், தெக்கணமும் அதில் சிறந்த திராவிட நல் திருநாடும் என்ற வரி தெரியாமல் திக்கி நின்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்: தாய்மொழிப் பற்றினை இனவாதம் என்றால் அது எங்களுக்குப் பெருமைதான்! - முதல்வர் ஸ்டாலின்!

திராவிட நல் திருநாடு தவிர்க்கப்பட்டதைத் தற்செயலானது எனத் தமிழர்கள் எப்படி நம்புவார்கள்? என ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.