K U M U D A M   N E W S
Advertisement

'செங்கோட்டையன் நல்ல பதில் சொல்வார்'- ஓ.பன்னீர் செல்வம் பேட்டி!

"சசிகலா மற்றும் டிடிவி தினகரனை உரிய நேரத்தில் சந்திப்பேன்" என்று ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

சிலர் மலிவான அரசியல் செய்கின்றனர்- முதல்வர் ஸ்டாலின் பேச்சு!

"சிலர் எதையும் தெரிந்து கொள்ளாமல் மலிவான அரசியல் செய்கின்றனர்" என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

இபிஎஸ் தலைமை இருக்கும் வரை அதிமுக ஆட்சிக்கு வராது- டிடிவி தினகரன் விமர்சனம்!

அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி நீடிக்கும் வரை, அந்தக் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வருவது கடினம் என்று டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.

ஆர்.பி. உதயகுமார் தாயார் மரணம்.. சர்ச்சை கருத்துக்கு மன்னிப்பு கேட்ட செங்கோட்டையன்!

ஆர்.பி. உதயகுமாரின் தாயார் மரணம் குறித்து தனது சர்ச்சைக்குரிய கருத்துக்கு செங்கோட்டையன் மன்னிப்பு கோரினார்.

அதிமுக தொண்டர்களை அசைக்க முடியாது; 2026-ல் எடப்பாடியார் ஆட்சி மலரும் - ஆர்.பி.உதயகுமார் பதிலடி

எடப்பாடியாரின் எழுச்சிப் பயணத்தைக் கண்டு வயிற்றெரிச்சல் கொண்டவர்கள் அதிமுகவிற்குப் பின்னடைவை ஏற்படுத்த நினைத்தால், அம்மாவின் ஆன்மாவும் தமிழக மக்களும் அவர்களுக்குத் தோல்வியைத் தான் தருவார்கள் என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் ஆவேசமாக பதிலடி கொடுத்துள்ளார்.

அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் இபிஎஸ்தான்- துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!

"அ.தி.மு.க.வின் நிரந்தர பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி மட்டும்தான் இருக்க முடியும்" என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.

'அதிமுக கோமா நிலையில் உள்ளது'.. அமைச்சர் சேகர்பாபு விமர்சனம்!

"அதிமுக கோமா நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது" என்று அமைச்சர் சேகர்பாபு விமர்சித்துள்ளார்.

செங்கோட்டையன் திடீர் டெல்லி பயணம்.. அமித்ஷாவுடன் நேரில் சந்திப்பு!

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியால் கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை.. பிரேமலதா விஜயகாந்த் குற்றச்சாட்டு!

தேமுதிக சார்பில் நடைபெற்று வரும் இல்லம் தேடி உள்ளம் நாடி மற்றும் மக்களைத் தேடி மக்கள் தலைவர் ரத யாத்திரையின் ஒரு பகுதியாக திருவாரூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், அங்கு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, பல்வேறு அரசியல் விவகாரங்கள் குறித்து அவர் கருத்து தெரிவித்தார்.

'மன நிம்மதிக்காக ஹரித்வார் செல்கிறேன்..' செங்கோட்டையன் பேட்டி!

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் டெல்லி செல்வதாக தகவல் வெளியான நிலையில், ஹரித்வார் செல்வதாக அவர் விளக்கமளித்தார்.